Followers

Saturday, July 6, 2013

குருவின் வழி


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பெரும்பாலான நண்பர்கள் காயத்ரி மந்திரப்பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார்கள். புதியதாகவும் மந்திரப்பயிற்சி செய்ய எண்ணியுள்ளார்கள். அவர்கள் என்னிடம் கேட்கும் பொழுது நாங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொள்ளுவது என்று கேடகிறார்கள்.

உங்களின் மனத்திற்க்கு யார் அமைதியை தரமுடியுமோ அவர் தான் குருவாக இருக்கமுடியும். பல பேர் குருவாக பிரபல சாமியார்களை தேர்ந்தெடுத்து இருப்பார்கள். மானசீகமாக தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இது ஒன்றும் தவறு இல்லை ஆனால் அந்த குரு உங்களுக்கு தக்க நேரத்தில் வழிகாட்டுக்கிறாரா என்று பார்க்கவேண்டும். நல்ல வழிகாட்டியாக அவர் இருந்தால் நீங்கள் அவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மறைந்த குருவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமா என்றும் கேட்டார்கள். என்னை பொருத்தவரை இறைவனிடத்தில் சேர்ந்தவரை குருவாக தேர்ந்தெடுப்பது என்பது கடினமாக தான் இருக்கும். உயிரோடு இருக்கும் குரு வழிகாட்டுவது போல் இறந்தவர்களின் வழிகாட்டுதல் எந்தளவுக்கு இருக்கும் என்பது சந்தேகமான ஒன்று.

ஒரு குரு உயிரோடு இருந்து அவர் கற்றுக்கொடுத்தால் அவர் இற்ந்தபிறகும் உங்களுக்கு அவர் மானசீகமாக நல்ல வழிகாட்டியாக அமைவார். நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்பொழுது உங்களுக்கு உடனே தெய்வம் வருகிறதோ இல்லையோ குரு வந்துவிடுவார். அது ஒன்றும் தான் நாம் குருவிடம் எதிர்பார்க்கும் உதவியாக இருக்கும். என்னை பல நேரங்களில் காப்பாற்றியவர் எனது குரு நாதர். 

நீங்கள் குருவாக தேர்ந்தெடுப்பவர் உயிரோடு இருக்கும் ஒரு குருவாக இருந்தால் அனைத்தும் உங்களின் வசம் வந்துவிடும். மானசீகமாக தேர்ந்தெடுக்கும் குருவால் அந்தளவுக்கு உங்களுக்கு ஆன்மீகவாழ்விற்க்கு உதவுவது இல்லை என்பதை உண்மையான விசயம். நீங்கள் ஆன்மீகவழியில் உயரவேண்டும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குரு உங்களோடு பழகி இருக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் கற்றுக்கொடுக்கும் வித்தை உங்களை எங்கோ தூக்கிக்கொண்டு செல்லும்.

ஒரு சிலர் இருக்கிறார்கள். பார்க்கிற அனைவரையும் குருவாக ஏற்றுக்கொள்ளுவது அப்படி இருந்தால் அது மிகப்பெரிய தவறான செயல். பல பேர்களை குருவாக ஏற்றால் குழப்பம் தான் மிஞ்சும். என்னிடம் பல நண்பர்கள் கேட்பது உங்களின் குருவை எங்களுக்கு காட்டுங்கள் என்று கேட்பார்கள். நாம் ஒருவரை குருவாக தேர்ந்தெடுத்த பிறகு அடுத்தவர்களின் குரு எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் அவரைப்பார்த்து அவர் சொல்லுவதை நாம் ஏற்றுக்கொண்டு செயல்படகூடாது.

என்னுடைய குருவை பார்த்து உங்களுக்கு எதுவும் நடைபெறபோவதில்லை. அவர் அவர்களின் குருவின் வழியில் செல்லும்பொழுது மட்டுமே அனைத்தும் வசப்படும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: