Followers

Tuesday, July 23, 2013

குரு பலம்


வணக்கம் நண்பர்களே!
                     குரு பலம் வேண்டும் என்பதை பல பதிவுகளில் நான் சொல்லிருந்தாலும் ஒரு சில கருத்தை சொல்ல வேண்டும் என்பதால் இந்த பதிவில் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனின் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிர்க்கும் அவனின் முன்ஜென்மம் மட்டுமே காரணம் என்று நமது மதம் சொல்லும் உண்மை. சோதிடமும் அதனை தான் சொல்லுகிறது. முன்ஜென்மத்தை பற்றி தெரிந்துக்கொள்ள சோதிடத்தில் ஐந்தாவது வீடு நமக்கு காட்டுகிறது. இந்த ஐந்தாவது வீட்டிற்க்கு காரகம் அதிகமாக எடுத்துக்கொள்பவர் குரு கிரகம். ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகமும் அடிப்பட்டு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவன் பிழைத்துவிடலாம்.  அப்படி என்ன தான் குரு கிரகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் நாம் முன்ஜென்மத்தில் சேர்த்து வைத்த புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் நமக்கு தருபவர் குரு கிரகம்.

நான் பலபேருக்கு வியாபாரத்திற்க்கு என்று உதவி செய்து வருகிறேன் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுக்கு உதவி செய்வது நமது அம்மனாக இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் குரு பலம் நன்றாக இருந்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். அவர்களுக்கு குரு பலம் நல்ல இல்லை என்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்தாலும் பலன் ஐம்பது சதவீதம் மட்டுமே கிடைக்கும். 

குரு பலன் கோச்சாரபடியும் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியும். அம்மனை வைத்து நாம் நல்லது செய்தாலும் அவர்களின் பூர்வபுண்ணியத்திற்க்கு ஏற்ப மட்டுமே நல்லது நடக்கிறது. நான் செய்யும்பொழுதே அவர்களின் குரு பலத்தை அறிந்து செய்கிறேன். அவர்களுக்கு குரு பலன் இல்லை என்றால் அவர்களுக்கு நான் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும்.

ஒரு சிலருக்கு நான் செய்யும்பொழுது உடனே பலனை தரும் அவர்களின் குரு பலனின் சதவீதம் குறைவாக இருந்தால் உடனே திரும்பிவிடும். மறுபடியும் குருவிற்க்கு என்று தனியாக பரிகாரத்தை செய்து அவர்களின் குருபலத்தை அதிகரிக்க செய்யும் வழிகளை செய்து அவர்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. 

வியாபாரத்திற்க்கு என்று வந்த பணத்தை இப்பொழுது எல்லாம் புதிதாக வந்த வாடிக்கையாளர்க்கு செலவு செய்வதற்க்கே என்னுடைய பணம் எல்லாம் கரைகிறது.புதிதாக வரும் நபர்களிடம் நாம் பணம் கேட்கமுடியாது அதனால் அவர்களுக்கு என்னுடைய பணத்திலேயே செய்யவேண்டியுள்ளது. இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் குரு பலம் எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு தேவை என்பதை உங்களுக்கு அனுபத்தில் சொல்லவேண்டும் என்பதால் சொல்லுகிறேன்.


கேள்வி
உங்களின் குழந்தை குருபலத்தோடு பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: