Followers

Monday, July 29, 2013

அவசியம் படியுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திர பயிற்சி செய்பவர்களுக்கு என்று இதனை எழுதவேண்டும் நினைத்து இருந்தேன் ஆனால் அதற்கு இன்று தான் நேரம் வாய்த்தது. இது உங்களுக்கு நன்றாக பயன்படும் என்று நினைக்கிறேன்.

காயத்ரி மந்திரம் என்பது நான் கண்டுபிடித்த மந்திரம் கிடையாது. நம் முன்னோர்கள் நமது வைத்துவிட்டு சென்ற மிகப்பெரிய சொத்து. ஒரு சராசரி மனிதன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று வைத்துவிட்டு சென்றனர். இதனை செய்கிறவர்களுக்கு கர்மவினை குறையும். உங்களின் கர்மாவை பொறுத்து இது வேலை செய்ய தொடங்கும். எந்த மந்திரமும் உரு ஏற்றி அடுத்த நாள் தெய்வம் வந்து முன்னால் நிற்க்கும் என்றால் எப்படி வரும். கலியுகத்தில் தெய்வம் வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. உங்களின் கஷ்டத்தை இதில் போடவேண்டும் அப்பொழுது மட்டுமே இது சாத்தியப்படும்.

பல பேர் ஆராய்ச்சி நோக்கத்தோடு இதனை செய்வது தெரியவந்தது. முதலில் ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்தால் ஒன்றுமே கிடைக்காது. நம்பி செய்யவேண்டும். மேல்நாட்டுகாரர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பார்கள். ஆராய்ச்சி என்று வந்துவிட்டால் தர்க்கம் ஏற்பட்டுவிடும். தர்க்கம் செய்வது ஆன்மீகத்திற்க்கு ஏற்றது அல்ல. ஆன்மீகத்தை பொறுத்தவரை உணர்வது மட்டுமே.

நான் உணர்ந்து இதனை எல்லாம் சொல்லுவதால் மட்டுமே உங்களுக்கு இந்த பதிவுகள் பிடிக்கும். உணராமல் சொன்னேன் என்றால் உங்களுக்கு ஆத்மா திருப்தி கிடைக்காது. பல தளங்களை நானும் ஒரு சில நேரங்களில் படித்து பார்ப்பேன். அதில் ஒரு சில ஆன்மீகத்தை எழுதுபவர்களை பார்த்து நான் நினைப்பது உண்டு இவர்கள் எல்லாம் எப்படி ஆன்மீகத்தை அடுத்தவர்களுக்கு போதிக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.

ஆன்மீகத்தில் இத்தனை வருடம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். எனது ஆராய்ச்சின் பயனாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று எல்லாம் போடுகிறார்கள். ஆன்மீகத்தை என்றைக்கும் ஆராய்ச்சி செய்ய முடியாது.உணர மட்டுமே முடியும்.குரு அவர்கள் தான் உணர்ந்ததை தன்னுடைய சிஷ்யனுக்கு உணர்த்திக்காட்டுகிறார்.  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நீங்களும் உணரவேண்டும். அதற்கு மந்திரப்பயிற்சி செய்யும்பொழுது ஆராய்ச்சி செய்யாமல் செய்யுங்கள்.

ஆன்மீகத்தில் கேள்விகேட்காமல் அடுத்தவர்களுக்கு இது நடைபெறும்பொழுது நமக்கு ஏன் நடைபெறாது என்ற எண்ணம் இருக்கவேண்டும்.ஆராய்ச்சி செய்யாமல் மந்திர உருவை ஏற்ற பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: