Followers

Saturday, August 31, 2013

வக்கிர எண்ணங்கள் & பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    வக்கிர கிரகங்களைப்பற்றி ஏற்கனவே பதிவில் சொல்லிருந்தாலும் இன்று இதனைப்பற்றி எழுதவேண்டும் என்று ஒரு ஜாதகம் தூண்டியது அதனால் இதனை எழுதுகிறேன்.

ஏதாவது வில்லங்கம் செய்தால் அவனுக்கு வக்கிரபுத்தி டா என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல் தான் வக்கிரகிரங்களின் செயல்பாடும். ஒரு கிரகம் வக்கிரத்தில் செல்லுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கிரகம் தன்னுடைய முழுமையான தன்மையில் இருந்து விலகி வேறு மாதிரியாக செயல்பாடு அடைகிறது என்று அர்த்தம். ராகு கேதுவை கண்டு பயப்படுவதற்க்கு காரணம் அது பின்னோக்கி செல்லுகிறது என்ற அர்த்ததால் மட்டுமே. அதுபோல் ஒரு கிரகம் வக்கிரமாக போகும்பொழுது அது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவிடுகிறது.

ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரமாக இருந்தால் பரவாயில்லை. இரண்டு கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் ஒரளவு நன்மை ஏற்படும். மூன்று கிரகங்கள் ஒருவர்க்கு வக்கிரங்கள் ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து. எப்படி ஆபத்து என்று கேட்கிறீர்களா அவர்களுக்கு ஆபத்தைவிட பிறர்க்கு ஆபத்து என்பதே உண்மை.

உலகத்தில் உள்ள மிகப்பெரிய தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரிகளுக்கு எல்லாம் மூன்று கிரகங்களுக்கு மேல் வக்கிரமாகி இருக்கும் என்றும் சொல்லுகின்றனர். இரண்டு கிரகங்களுக்கு மேல் வக்கிரங்கள் உள்ள நபர்களிடம் மோதி வெற்றி பெறமுடியாது. அதேப்போல் இவர்கள் செய்துவிட்டு சென்ற செயல்கள் எல்லாம் பலகாலங்கள் பூமியில் நிலைத்து நிற்க்கும். சூப்பர் பவர் மேன் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது எல்லாம் இவர்களாக தான் இருக்கும்.

உங்களின் ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரங்கள் அடைந்தால் நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் வக்கிரகாளி. திருவக்கிரகாளியை வாழ்நாட்கள் முழுவதும் வணங்கும் பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, August 30, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 14


வணக்கம் நண்பரகளே!
                    நான் சொல்லுவது அனுபவத்தில் இருந்து எடுத்து சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். இது சோதிடபுத்தகத்தில் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. புத்தகத்தில் இருந்தாலும் நல்லது அப்படி புத்தகத்தில் இல்லாமல் இருந்தால் அனுபவத்தில் சொல்லுவது தானே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

                    மேஷராசியில் ராகு நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு ராகு தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொண்டால் என்ன புத்தி இவருக்கு நல்லதை செய்யும் என்று பார்க்கலாம்.

மேஷத்தில் அமர்ந்து ராகு தசா நடைபெறுகிறது.

ராகுவின் சுயபுத்தி
ராகு தசா சூரியபுத்தி 
ராகு தசா குரு புத்தி

இந்த மூன்று தசாவின் புத்திகளும் நன்றாக இருக்கும் என்று கூறலாம்.  நான் பார்த்த பல ஜாதகங்களுக்கு நல்லதை செய்து இருக்கிறது. ராகு இருந்த இடத்தின் பலனை தரும் என்பதால் இவ்வாறு நல்லது நடந்துள்ளது.

தான் நிற்க்கும் வீட்டிற்க்கு 1, 5, 9 என்ற வீட்டின் புத்தி காலங்களில் நல்லதை தரும். ராகு நிற்க்கும் வீட்டை லக்கினம் போல் எடுத்துக்கொண்டால் சுயபுத்தி நல்லது செய்யும். நிற்க்கும் வீட்டிற்க்கு ஐந்தாவது வீட்டு புத்தி நல்லது செய்யும் அதாவது பூர்வபுண்ணியத்தால் நல்லது செய்யும் என்று சொல்லலாம். ஒன்பதாவது வீட்டின் புத்தி நல்லது செய்யும் பாக்கியஸ்தானத்தால் நல்லது செய்யும் என்று சொல்லவும்.

மேஷ லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். இரண்டாவது வீட்டில் ராகு நின்றால் (ரிஷபத்தில்) எப்படி பலன் வரும் என்று பார்த்தால் சுயபுத்தி நன்றாக இருக்கும்.ராகு அமர்ந்த வீட்டை லக்கினம் போல் எடுத்துக்கொள்ளவேண்டும். ஐந்தாவது வீடான கன்னி ராசி அதிபதி புதனின் புத்தி மற்றும் ஒன்பதாவது வீடான மகர ராசி அதிபதி சனியின் புத்தி நன்றாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, August 29, 2013

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பிளாக்கின் வழியாக ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கு என்று ஹோமம் மற்றும் பூஜைகளை நடத்திக்கொடுக்க என்னை கூப்பிடுகிறார்கள். இதில் கவனிக்கப்படவேண்டியவற்றை இப்பதிவில் தருகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து என்னை கூப்பிடுவதற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களி்ன் வீட்டில் இதனை செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்லது நடைபெறும். நீங்கள் உங்களின் குலதெய்வத்தை வணங்கிவிட்டு என்னை கூப்பிட்டால் நல்ல விஷேசமான ஒன்று. எங்களின் தெய்வம் வழியாக உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நல்லது செய்துதரும்.

நீங்கள் என்னைப்போல் பல பேர்களிடம் அதாவது சாமியார்களிடம் தொடர்பு வைத்திருக்ககூடாது. ஏன் என்றால் இப்பொழுது மக்கள் பல சாமியாரை போய் பார்த்து வருவது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு செயலை செய்ய சொல்லுவது எல்லாம் கூடாது. ஏன் என்றால் நாங்கள் செய்யும் பொழுது அடுத்தவர்களின் தலையீடு வரும்பொழுது எங்கள் தெய்வம் ஒன்றும் செய்யாது. 

எங்களுக்கு பெயர் எடுத்துக்கொடுக்க மட்டுமே எங்கள் தெய்வம் வரும். பிறரும் வந்து அதில் ஒரே சிக்கல் மட்டுமே மிஞ்சும்.எங்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது எங்களின் தெய்வம்.பிறர் மீதும் நம்பிக்கை வைத்திருந்தால் இது ஒன்றும் செய்வதில்லை.நீங்கள் கோவில் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவைகளை நம்பலாம். எங்களைப்போல் உள்ளவர்களோடு நீங்கள் தொடர்பு வைக்காமல் இருந்தால் நாங்கள் செய்தவுடன் உங்களுக்கு பலன் தரும்.

நீங்கள் பல பேர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை செய்ய சொல்லி உங்களின் பணத்தை மற்றும் நேரத்தை வீண் செய்யவேண்டாம். நாங்கள் உங்களின் வீடுகளுக்கு வந்தாலே போதும் உங்களுக்கு நல்லது நடக்கும். பல பேர்களுக்கு இது நடந்து உள்ளது. அதைப்போல் நாங்கள் செய்து தருவதும் உங்களுக்கு நல்லது நடக்கும் அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை. எப்படிபட்ட ஒத்துழைப்பு என்றால் ஊரில் உள்ள ஆன்மீகவாதிகள் எல்லோரிடமும் சென்று வந்தால் எங்களால் ஒன்றும் நடைபெறாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

புரளி கிளப்பும் சனி+ராகு


வணக்கம் நண்பர்களே!
                    எப்பொழுதும் ஏழரைச்சனி நடக்கும் நாட்களில் ஏழரைச்சனியின் பாதிப்பில் இருப்பவர்களை அவ்வளவு எளிதில் கொல்லாது என்பது சோதிடவிதி. அதே நேரத்தில் ஏழரைசனியோடு ஒரு பாவக்கிரகம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரை கொல்லநேரிடும்.

இப்பொழுது கன்னி ராசி துலாம் ராசி மற்றும் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி காலம் என்பதால் இவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பாதுகாப்பாற்ற இடங்களில் தங்குவது தவிர்க்கவேண்டும். உடல்நிலையில் பிரச்சினை வந்தாலும் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

சனியோடு ராகு இருப்பதால் ஏழரைச்சனி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நிழல்கிரகத்தோடு ஒரு கிரகம் சேரும்பொழுது அந்த கிரகத்தின் பாதிப்பு குறையும் என்று சொல்லுவார்கள். இப்பொழுது அப்படி இல்லை இரண்டும் நல்ல பவர்புல்லாக இருக்கின்றது. 

இந்தியாவில் ரூபாயின் வீழ்ச்சி என்று சொல்லுகிறார்கள். இது எல்லாம் ஒரு விதத்தில் ஆளும் அரசு சொல்லும் சூழ்ச்சியாக கூட இருக்கலாம். வெளியில் இருக்கும் பணத்தை உள்ளே கொண்டு வருவதற்க்கு ஒரு தந்திரமாக இருக்கலாம். ஏன் அரசியல் என்று கேட்கவேண்டாம். ராகுவும் சனியும் சேரும் பொழுது இப்படி ஏதாவது ஒரு ரூமரை கிளப்பிவிடுவார்கள். 

இல்லாத ஒன்றை கிளப்பிவிடுவதில் இருவரும் வல்லவர்கள். கண்டிப்பாக சோதிடகண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படி தான் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. ராகு ஒரு திருடன். சனி ஒரு திருடன் இரண்டும் சேர்ந்து இப்படி செய்து திருட்டுவேலையை செய்யலாம்.

எது எப்படியோ. ஏழரை சனி நடப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 13


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசா பலன்களை பார்த்துவருகிறோம். ஒருவருக்கு ராகு எப்படி அமைந்தாலும் அந்த ஜாதகர்க்கு ராகு தசா பலன்கள் எப்படி வரும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பதினெட்டு வருடத்தை மூன்றாக பிரிக்கவும். முதல் ஆறு வருடம் துக்கத்தை கொடுக்கும். அடுத்த ஆறு வருடம் நல்ல சுகத்தை தரும். கடைசி ஆறு வருடம் நாசத்தை கொடுக்கும்.

முதல் ஆறு வருடத்திற்க்கு ராகு தசா வந்தவுடன் வீட்டில் மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு துக்கத்தை கொடுக்கும். முதல் ஆறு வருடங்கள் மனதளவில் மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் பெண் சகவாசம் ஏற்பட்டு அதனால் அவர்களுக்கு மனதளவில் பிரச்சினை ஏற்படும். வீட்டிலும் பிரச்சினை வெளியிலும் பிரச்சினை என்ற மாதிரி நடைபெறும்.

இளம்வயதாக இருந்தால் காதல் ஏற்பட்டு அதனால் பிரச்சினையை ஏற்படுத்துவார். வீட்டில் இந்த விசயம் தெரிந்து அவர்கள் உங்களை பாடாய் படுத்துவார்கள். வெளியி்ல் காதலன் காதலி உங்களை படுத்தி எடுப்பார்கள். பொதுவாக ராகு மனதில் தான் முதலில் வேலையை காட்டுவார்கள்.

நடுபாகமான ஆறு வருடங்களுக்கு ஒரளவு பணவரவை ஏற்படுத்திக்கொடுப்பார். ராகுவை பொருத்தவரை அவர் அனைத்தையும் மின்னல் போல் வந்து ஏற்படுத்திக்கொடுப்பார். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அப்படி தான் செய்வார்.அந்த நேரம் சுகமாக செல்லும்.

கடைசி ஆறு வருடங்கள் சர்வநாசம் செய்வார். கடைசியில் ஒரு சிலருக்கு மாரகத்தை கூட நடத்திவிடுவார். அவருக்கு மரணம் வருவது போல் ஜாதகத்தில் கிரகநிலைகள் இருந்தால் மரணத்தை ஏற்படுத்துவார். இந்த நேரத்தில் குலதெய்வ அருள் இருந்தால் உங்கள் வீட்டு செல்லபிராணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திவிடுவார். உங்களுக்காக அந்த உயிர் பறிக்கப்படும்.

ராகு முதலில் துக்கம் அடுத்து சுகம் கடைசியில் நாசம் இப்படி ஒரு மனிதனுக்கு கொடுக்கும்பொழுது என்ன செய்வான். பொதும்டா சாமி இந்த வாழ்வும் நீங்களும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று கடவுளை நாடி செல்ல ஆரம்பித்துவிடுவான். குரு தசாவும் வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சோதிடர்களே


வணக்கம் நண்பர்களே!
                     நீங்கள் அனைவரும் சோதிடர்கள் தான் ஏன் என்றால் இரும்பு பிடித்த கை சும்மா இருக்காது அதேபோல் நீங்கள் சோதிடத்தின் மீது சிறிய ஈர்ப்பு வந்துவிட்டாலே உங்களுக்கு அப்புறம் அது என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று நினைத்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

சோதிடத்தை தொழிலாக செய்யவில்லை எனது மனதிருப்த்திக்காக படிக்கிறேன் என்று சொல்லுபவர்கள் கூட பிறர்க்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சோதிடத்தை பார்க்க நேரிடும். அது இலவசமாக கூட பார்க்கலாம். எப்பொழுது ஒரு மனிதன் அடுத்த சோதிடத்தை கையில் எடுக்கிறானோ அப்பொழுதே அவனுக்கு பிறரின் கர்மா வந்துவிடும். கர்மாவை பார்ப்பதற்க்கு தானே சோதிடம். அது இலவசமாக பார்த்தாலும் காசுக்கு பார்த்தாலும் கர்மாவின் தாக்குதல் உங்களுக்கும் ஏற்படும்.

கர்மாவின் தாக்குதலில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உங்களுக்கு தெரியவேண்டும். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு பிறரின் கர்மா தாக்காமல் நீங்கள் தப்பிக்கமுடியும். நீங்கள் சோதிடம் பாருங்கள் ஆனால் தகுந்த ஏற்பாட்டை செய்துக்கொள்ளுங்கள். உங்களை காத்துக்கொள்ள வேண்டும். உங்களை காத்துக்கொண்டால் தான் பிறரை காப்பாற்றமுடியும்.

நீங்கள் பரிந்துரைக்கும் கோவில்கள் நீங்கள் அங்கு சென்று அந்த கோவிலின் சக்தியை பார்த்துவிட்டு பிறர்க்கு பரிந்துரைக்க வேண்டும். உங்களுக்கு அந்த கோவிலில் நல்ல சக்தி இருக்கும்பொழுது பிறர்க்கு நீங்கள் சொன்னால் அவர்களுக்கு எளிதில் அந்த சக்தி கிடைக்கும் என்பதால் இவ்வாறு சொன்னேன். நான் பரிந்துரைக்கும் கோவில்கள் எல்லாவற்றிக்கும் நான் அந்த கோவிலுக்கு சென்று அந்த சக்தி எனக்கு காட்டிக்கொடுத்ததால் பிறர்க்கு பரிந்துரைக்கிறேன். 

நீங்கள் சென்று வராத கோவிலை ஒரு நாளும் பரிந்துரைக்காதீர்கள். நீங்கள் அங்கு சென்று வந்தால் தான் உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியும். புத்தகத்தில் போட்டுள்ளார்கள் அதனால் சொன்னேன் என்று சொல்லிவிடவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, August 28, 2013

நம்பினால் நம்புங்கள்: விளக்கம்


வணக்கம் நண்பர்களே! 
                    நம்பினால் நம்புங்கள் படித்துவிட்டு பல பேர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள். பல பேருக்கு மனதில் நினைத்துக்கொண்டு இருக்கலாம். கேட்பதற்க்கு தயக்கம் இருக்கலாம். அதனால் ஒரு பதிவை தந்து அதில் விளக்கிவிடலாம்.

நான் அலுவலகம் கூட போடாமல் சோதிடதொழில் செய்துவருகிறேன். என்னை தேடி பல பேர்கள் வருகிறார்கள் என்றால் என்னை தேடி வருபவர்களுக்கு சரியாக செய்துக்கொடுக்கிறேன் என்று அர்த்தம். நம்மிடம் விசயம் இருக்கும்பொழுது நம்மை தேடி வருவார்கள். இந்த பதிவை கூட குருநாதர் எழுதவேண்டாம் என்று சொன்னார். ஆனால் நம்மோடு போய்விடகூடாது இது பல பேர்க்கு போய் சேரவேண்டும் என்ற காரணத்தால் இதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.எனக்கும் பலபேர்களின் அறிமுகம் கி்டைக்கிறது.

தேர்தலில் நின்ற வரைப்பற்றி பார்த்தோம் அல்லவா. சுக்கிரனின் வீட்டில செவ்வாய் சந்திரன் நிற்கிறது என்று சொல்லிருந்தேன். லக்கினத்திற்க்கு பதினோராவது வீட்டில் செவ்வாய் நிற்பது ஒரு கூட்டத்திற்க்கு தலைவனாவான் என்று காட்டுகிறது. 

எதிரியின் எதிரி என்ன இருக்கமுடியும் என்று பார்ப்பதும் ஆறாவது வீட்டிற்க்கு ஆறாவது வீடு. லக்கினத்திற்க்கு பதினோராவது வீடு சுக்கிரன் வீடு என்று சொன்னேன். சுக்கிரன் வீடு வந்தவுடன் அது பெண் என்று கண்டுபிடித்தாகிவிட்டது. அந்த வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் செவ்வாய் + சந்திரன். ஒரு பெண்ணை கொண்டு அவனை அடிக்கமுடியும். பெண்ணை வைத்து எப்படி அடிப்பது. இந்த இடத்தில் தான் அனைவரும் குழம்பி போய் இருந்தார்கள். செவ்வாய் சந்திரன் எதனை காட்டுகிறது என்றால் பெண்களின் மாதவிலக்கை காட்டுகிறது. ஒரு மாதவிலக்கை அடைந்த பெண்ணை வைத்து காரியத்தை முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டேன். 

சரியாக தேர்தலுக்கு முதல் நாள் எதிராளி பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுவாக பிரச்சாரம் தொடங்குவதற்க்கு முன்பு கோவிலுக்கு சென்று தான் பிரசாரத்தை தொடங்குவார்கள். கோவிலுக்கும் சென்றார். பிரசாரத்தை தொடங்கினார்கள். ஒரு மாதவிலக்கு அடைந்த பெண்ணை விட்டு அவர்களின் கூட்டத்தில் இந்த பெண்ணும் நோட்டீஸ் கொடுத்தார். ஒரு அரை மணி நேரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். 

அது தான் அவருக்கு தோல்வி என்பது நூறு சதவீதம் உண்மையானது. மாதவிலக்கு அடைந்த பெண்ணால் மட்டும் இது நடைபெறவில்லை. அதற்கு முன்பு என்னிடம் வந்தவருக்கு பூஜை செய்ததாலும் அது நடந்தது. மாதவிலக்கை அடைந்த பெண் அவரோடு இருநததால் அவருக்கு அபகடம் ஆகிவிட்டது. எதிரிக்கு எதிரி என்ன என்று சரியாக பார்த்து அடிப்பது இது தான். 

எல்லாவற்றிக்கும் இதனை செய்யமுடியாது. இவரின் ஜாதகத்தை கொண்டு அதனை செய்வதற்க்கு இப்படி செய்தேன். அந்த ஜாதகத்தில் இப்படி இருந்ததால் செய்தேன். நான் சொல்லிவிட்டேன் என்று நீ்ங்கள் பிறர்க்கு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

எந்த ஒரு காரியத்திற்க்கும் நாம் கொடுக்கும் ஆலோசனை மிக முக்கியமான ஒன்று. மிகப்பெரிய அளவில் புத்திசாலிதனம் வேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தசாநாதன் பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு தசாவும் புத்திகளால் பிரிக்கப்பட்டு அந்த புத்திக்கு தகுந்தார்போல் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று பார்க்கிறோம்.

அந்த தசாநாதன் புத்திநாதன் நிலை கொண்டு நாம் பலனை சொல்லிக்கொண்டு வருகிறோம்.  தசாநாதனைக்கொண்டு புத்திநாதர்களின் காலத்தை வைத்து பலன் சொல்லுகிறோம்.இதனை தவிர வேறு ஒரு முறையும் இருக்கின்றது.

ஒவ்வொரு புத்தியும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதற்கு எடுத்துக்காட்டாக ராகு தசா பதினெட்டு வருடங்கள். பதினெட்டு வருடங்களை ஒவ்வொரு வீட்டிற்க்கும் சமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். பதினெட்டு வருடங்கள் சமமாக ஒவ்வொரு வீட்டிற்க்கு பிரித்து கொடுத்தால் ஒரு வீட்டிற்க்கு ஒன்றரை வருடங்கள் வரும்.

நீங்கள் ராகு நின்ற வீட்டியிருந்து பலனை ஒன்றரை வருடங்களாக வைத்து பலனை சொல்லிக்கொண்டு வரவேண்டும்.அப்படி சொன்னாலும் ஒரு சிலருக்கு பலன் சரியாக வருகின்றது.

ராகு லக்கினத்தில் நின்றால் ராகு தசா சுய புத்தி ஒன்றரை வருடங்கள் என்று வைத்து சொல்லவேண்டும். பிறகு ராகு தசா அடுத்த புத்தி இரண்டாவது வீடு என்று வைத்து பலனை சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொரு வீடாக ஒன்றரை வருடங்கள் சொன்னாலும் பதினெட்டு வருடங்களின் ராகு தசா பலன் சரியாக வருகின்றது.

ராகு தசாவைப்போல் அனைத்து கிரகங்களின் தசாவையும் வைத்து நீங்கள் பலன் சொல்லமுடியும். எளிதான முறை தான் அனைவரும் முயற்சி செய்துப்பாருங்கள்.

நண்பர்களே Facebook யிலும் தங்களை ஜாதககதம்பத்தோடு இணைத்துக்கொள்ளுங்கள். அதிலும் கருத்துக்கள் வெளிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் இன்று ஒரு சுவாராசியமான ஒரு தகவலை தருகிறேன். படித்து பாருங்கள். 

நான் சென்னையில் இருக்கும்பொழுது ஒரு கம்பெனியில் தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. இருவர் போட்டி போட்டுள்ளார்கள். ஒருவர் நல்ல செல்வாக்கு படைத்த நபர். பணபலம் மற்றும் அங்கு பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களின் பலமும் பெற்றவர். ஒன்னொருவர் ஒரளவு பணவசதி மற்றும் செல்வாக்கும் குறைவானர். இருவருக்கும் போட்டி. 

தேர்தல் நடைபெறுவதற்க்கு முன்பு இருவரும் கடுமையாக தேர்தலுக்காக வேலை செய்து இருக்கிறார்கள். தேர்தல் நடைபெறுவதற்க்கு முன்பு பலம் குறைந்தவர் ஜாதகம் பார்க்கலாம் என்று எண்ணி அவரின் நண்பரிடம் கேட்டுள்ளார். அந்த நண்பர் எனக்கு தெரிந்து ஒருவர் இருக்கிறார் அவரை போய் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்து ஒரு நாள் எனனை தேடி நான் இருக்கும் இடத்திற்க்கு வந்துள்ளார்கள். அந்த நேரம் பார்த்து நான் இல்லை அப்பொழுது என்னிடம் செல்போனும் கிடையாது.

இரண்டு நாட்கள் தேடி மூன்றாவது நாள் என்னை பிடித்துவிட்டார்கள். சரி வாருங்கள் என்று உங்களின் ஜாதகத்தை என்னிடம் கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன். இவரின் ஜாதகத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இவரின் ஜாதகம் நமக்கு கிடைத்துவிட்டது. எதிராளி யார் அவரின் நிலை என்று பார்க்கவேண்டும் அல்லவா. எதிரியின் ஜாதகம் நம்மிடம் இல்லை. இவரின் ஜாதகம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. இவரி்ன் ஆறாவது வீட்டை பார்த்தேன்.

ஆறாவது வீட்டை பார்த்துமுடித்தவுடன் எதிரியின் நிலையை பார்த்துவிட்டேன். அவரை இவர் வெல்லவேண்டும். ஆறாவது வீட்டின் காரத்துவத்தை அடிக்க வேண்டும் என்றால் ஐந்தாவது வீட்டை பலப்படுத்த வேண்டும். பூர்வபுண்ணியத்தில் மட்டுமே ஒருவர் வெற்றி பெறமுடியும். பூர்வபுண்ணியத்திற்க்கு ஒரு பூஜை செய்தேன். பிறகு எதிரிக்கு எதிரியாக என்ன இருக்கமுடியும் என்று பார்த்தேன். ஆறாவது வீட்டிலிருந்து ஆறாவது வீட்டை பார்த்தால் அந்த வீடு தான் எதிரியின் எதிரி என்னவாக இருக்கமுடியும் என்று கண்டுக்கொள்ளலாம். லக்கினத்திற்க்கு பதினோராவது வீடு தான் எதிரியின் எதிரி. பதினோராவது வீடு சுக்கிரனின் வீடு. அதில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து அமர்ந்து இருந்தார்கள். எதிரியை அடிக்க பெண்களை வைத்து அடித்துவிடலாம் என்று கணித்தேன்.

அவரை என்றுடன் பிரசாரம் ஒய்வு அடைகிறது என்று கேட்டேன் அவர் தேதியை சொன்னார். அன்றைய நாளில் ஒரு பெண்ணை வைத்து அவருக்கு பிரசாரம் செய்ய சொல்லுங்கள் என்று சொன்னேன். இவரிடம் போட்டி போடுகிறார் அல்லவா. எதிராளி்க்கு இந்த பெண் பிரசாரம் செய்ய சொல்ல அனுப்ப சொல்லிருந்தேன். அதேப்போல் இவர் செய்தார். என்னிடம் வந்தவர் ஐந்து ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்படி என்ன அந்த பெண்ணிடம் இருக்கிறது என்று கேள்வி கேட்கிறீர்களாக. வேண்டாம். நீங்களே தெரிந்துக்கொள்ளமுடியும்.

சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி. தெரியாத ஊருக்கு போவதற்க்கு ஒரு மேப் போல் நமக்கு உதவும். ஒரு சோதிடனாக இருந்தால் அவனுக்கு கைதேர்ந்த அறிவு வேண்டும். அதனை வைத்து வரும் வாடிக்கையாளர்க்கு அவர்கள் கேட்பதை செய்துக்கொடுக்க வேண்டும். ஜாதகத்தை கையில் எடுத்தால் அப்படி ஒரு கணிப்பு நம்மிடம் இருக்கவேண்டும். கணித்தால் மட்டும் போதாது. அதனை வைத்து எப்படி செயல்படுத்தினால் வெற்றி அடையமுடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

நண்பர்களே நாளை நீங்களும் பல பேர்களுக்கு சோதிடம் பார்க்கலாம். ஒரு சோதிடன் பலன் மட்டும் சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. உங்களை நம்பி ஒருவன் வந்துவிட்டால் அவனை காப்பாற்றி அவனுக்கு என்ன தேவையோ அவனுக்கு செய்து கொடுக்கவேண்டும். இவனால் என்ன செய்யமுடியும் என்று மட்டும் நினைக்ககூடாது. நீங்கள் நினைத்தால் எதனையும் செய்யமுடியும் என்பதை நிருபித்துக்காட்டுங்கள்.

மந்திரங்கள் நம்மிடம் இருந்தாலும் அதனை செயல்படுத்த தந்திரம் வேண்டும். மகாபாரத்தில் பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் தந்திரம். அந்த தந்திர வழி எல்லாம் எடுத்து பயன்படுத்தினால் நீங்கள் தான் கிருஷ்ணர்.

நம்பினால் நம்புங்கள்

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Tuesday, August 27, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    மாதம் தோறும் வரும் நடைபெறும் அம்மனின் பூஜையில் பலபேர்கள் பங்குக்கொண்டு வருகிறார்கள். ஆவணி மாத பூஜையை நடத்த திட்டமிட்டு உள்ளேன். அதற்கு இதுவரை அம்மனிடம் வேண்டுதல்களை வைத்து நிறைவேறியவர்கள் பங்குபெறலாம்.

இந்த பூஜையை செய்ய பல பேர் போட்டி உள்ளது. பூஜையை விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கலாம் என்று நினைத்துள்ளேன்.  நமது அம்மன் அமைந்திருக்கும் இடத்தில் முதல் முதலாக பல வருடங்களுக்கு முன்பு விநாயகர் சிலையை அப்பொழுது நான் அமைத்தேன். நானும் எனது நண்பர் விமல் என்பவரும் சேர்ந்து வாங்கி அந்த சிலையை நமது அம்மன் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய அரசமரம் இருக்கிறது. அதற்கு கீழ் அமைத்தேன். 

விநாயகர் சதுர்த்தி அன்று பிரபலமாக பூஜை வருடந்தோறும் எனது குடும்பத்தினர் மட்டும் செய்து வருகின்றனர். இன்றைய வருடம் இதே தேதியில் பூஜை வைத்தால் நீங்களும் பங்குக்கொள்ளமுடியும் என்பதால் இன்றைய தேதியை தேர்ந்தெடுக்கலாம் என்று உள்ளேன்.

இப்பொழுது இந்த பூஜையை செய்ய அம்மன் உதவி செய்யும் கம்பெனிகளே தருகின்றன ஆனால் தனி மனிதர்களும் தங்களுக்கு உள்ள பிரச்சினைக்கு தீர்வுக்காக பணம் அனுப்பலாம்.வேண்டுதல் வைத்து அந்த காரியம் வெற்றி அடைந்தால் பணம் அனுப்புங்கள்.

அம்மனுக்கு பூஜை செய்வதால் பல பேர்க்கு நல்லதை நடத்திக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய வளர்ச்சியை ஒவ்வொருவரும் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து பார்த்துக்கொண்டுருக்கிறார்கள். ஒவ்வொரு பூஜையும் சிறந்த முறையில் என்னால் செய்யப்படுகிறது. சிறந்த முறையில் செய்வதற்க்கு உதவி அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவை நல்கி உள்ளேன்.

விரைவில் பூஜை தேதியை அறிவிக்கிறேன்.

https://www.facebook.com/profile.php?id=100005242867668

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீகத்தின் வில்லன்


வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீகத்திற்க்கு செவ்வாய் எதிரி என்பதைப்பற்றி பார்க்கலாம். செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் கெடுதல் கிரகத்தோடு சேர்ந்தோ அல்லது சொந்த வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கோபம் கடுமையாக வரும். அந்த நபர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு அதுவே தடையாக இருக்கும்.உச்ச வீட்டில் இருந்தால் ஒரு சில பேர்க்கு கோபம் இல்லாமல் இருக்கிறது இதனை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

கோபத்தை நாம் வெல்லும்பொழுது மட்டுமே ஆன்மீகத்திற்க்குள் உள்ளே செல்லமுடியும்.கோபம் என்பது ஒரு சக்தி தான் வருகின்ற கோபத்தை மாற்ற தெரிந்திருந்தால் மட்டுமே ஆன்மீகம் சாத்தியப்படும். செவ்வாய் கெட்டுருந்தால் அவ்வளவு தான் அவர்கள் பாறாங்கல்லை தூக்கி முழிங்கியது போல் இருப்பார்கள்.

பல வில்லங்களுக்கு செவ்வாய் தான் காரணம் வகிக்கிறது. கோபக்காரர்களுக்கு காமத்தின் சக்தியும் அதிகமாக இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்தோடு சேர்ப்பது இந்த காரணம் மட்டுமே. உங்களுக்கு செவ்வாய் சரியில்லை என்றால் நீங்கள் ஆன்மீகம் பக்கம் போகமுடியாது. ஆன்மீகம் உங்களுக்கு சரிபட்டுவராது.

தமிழர்களின் வீரம் ஒரு நேரத்தில் உலகம் முழுவதும் தெரியும். அதற்கு காரணம் தமிழ்கடவுள் என்று போற்றப்படும் முருகன். போர்கிரகத்தை இவர்கள் வணங்கியதால் இவர்களும் போர் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

இன்று தமிழன் எல்லாம் சாத்வீகத்திற்க்கு மாறிவிட்டார்கள். இவர்கள் கும்பிடுவது எல்லாம் மகான்கள் ஞானிகள் என்று போய்விட்டார்கள். ஒரு நேரத்தில் முருகனுக்கு மட்டும் மாலை போட்டு சென்று வந்தார்கள் இன்று ஐயப்பனை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களின் வீரமும் கேள்விகுறியாகிவிட்டது. சண்டை போடுகிறவனை கும்பிட்டால் தான் சண்டை போடலாம். மகான்களை கும்பிட்டால் எங்கு போய் சண்டை போடுவது. 

சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். செவ்வாய் என்பது போர்கிரகம். உங்களின் ஜாதகத்தி்ல தீமையை தரும் என்று நினைத்தால் அதனை வெல்ல என்ன வழி என்று பார்த்துவிட்டு ஆன்மீகத்திற்க்கு செல்லுங்கள். அதனை செய்யாமல் சென்றால் பிரச்சினை தான்.தியானம் யோகா எல்லாம் சண்டை போடுகிறவன் செய்யமுடியுமா? செவ்வாய் என்றால் சுறுசுறுப்பாக இருப்பான் அவனை ஒரு இடத்தில் உட்காரவைக்கமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கவனிக்கவும் :: பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் எத்தனை முறை சொன்னாலும் அனைத்தையும் மறந்துவிட்டு மறுபடி மறுபடி எனக்கு போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொன்றாக சிறு குழந்தைக்கு சொல்லுவது போல் சொல்லவேண்டியுள்ளது.

பரிகாரம் செய்வதற்க்கு செல்லும்பொழுது அது ஒன்றும் குடும்பவிழா அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் கர்மத்தை குறைக்க உங்களுக்கு பரிகாரம் செய்ய போகிறீர்கள் என்பதால் நீங்கள் தனியாக செல்லலாம் அல்லது உங்களின் குடும்ப நபர் ஒருவரை கூட்டிக்கொண்டு செல்லலாம். உதவி தேவைப்படும் என்பதால் ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு செல்லலாம். 

உங்களின் வீட்டில் அதேப்போல் தோஷம் உடையவர்கள் இருந்தால் அவர்களை கூட்டிக்கொண்டு செல்வது நல்லது. தோஷத்தை கழிக்க செல்லலாமல் வெறும் சாமி தரிசனம் என்று சென்றால் உங்களின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு செல்லலாம்.

ஒரு தோஷம் கழிக்க செல்லும்பொழுது அந்த தோஷம் கழிப்பதன் பாதிப்பு கூட வருபவர்களுக்கு சேரும் வாய்ப்பு இருப்பதால் இதனை தவிர்ப்பார்கள். நாங்கள் எல்லாம் பரிகாரம் செய்யவதற்க்கு போனால் உடல்கட்டு இல்லாமல் செய்ய போகமாட்டோம் அதைப்போல் எங்களுடன் வருபவர்களுக்கும் இதனை செய்துவிடுவோம்.

ஒரு பரிகாரம் செய்வதற்க்கு முன்பு உங்களின் வீட்டில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்ல வேண்டும். அப்படி வணங்கிவிட்டு சென்றால் மட்டுமே நீங்கள் பரிகாரம் செய்ததின் பலனை அடையமுடியும்.

பரிகாரம் செய்வதற்க்கு என்று நாட்களும் உள்ளன. இந்தந்த நாட்களில் செய்தால் மட்டுமே அந்த பரிகாரம் வெற்றி அடையும் என்று நமது முன்னோர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் அந்த நாட்களை எல்லாம் வரும் நாட்களில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தசாநாதன் பகுதி 13


வணக்கம் நண்பர்களே!
                    மனிதன் பிறவி எடுக்கிறான் என்று நம்புகிறது இந்துமதம். சோதிடம் பார்ப்பதே அதனை தெரிந்துக்கொள்ள மட்டுமே. எந்த ஒரு பிறவியும் முடிந்தளவுக்கு உங்களை இறைவனிடம் கொண்டு செல்ல வைப்பதற்க்கு வழியை கொடுக்கிறது. நீங்கள் இறைவனை அடைய நினைத்தீர்கள் என்றால் அதனை கடைபிடித்து போகலாம் அல்லது பிறவியிலேயே சிக்கி கொண்டு துன்பபடலாம்.

நீங்கள் பிறவியில் சிக்குவீர்களா அல்லது இறைவனை அடைவீர்களா என்பதை முடிவு செய்பவர் தசாநாதன்.

உங்களின் ஜாதகத்தில் அதற்குண்டான தசா நடைபெறவேண்டும். ஜாதகத்தில் அனைத்து வீடுகளும் வேலை செய்யும் ஆனால் நீண்ட நாள்கள் தன் பிடியில் வைத்திருக்கும் தசாநாதர்கள் மிக முக்கிய பங்கு பெறுகிறார்கள்.

நீங்கள் ஆன்மீகத்திற்க்கு செல்வதற்க்கு சிறந்த தசாவாக குரு மற்றும் கேது தசா மிகப்பெரிய வழியை ஏற்படுத்திக்கொடுப்பார்கள். ராகு தசாவும சம்பந்தப்பட்ட ஜாதகத்தை பொருத்து ஏற்படுத்திக்கொடுக்கும். அனைத்து கிரகங்களும் இந்த வேலையை செய்தாலும் இந்த மூன்று கிரகங்கள் அதிகமான வாய்ப்பை ஒருவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது.

குரு கேது தசா நடைபெற்றால் உங்களுக்கு வழிகாட்டி சரியாக அமைவார்கள். வழிகாட்டி இருந்தால் தானே தெரியாத ஊருக்கு பயணம் செய்யமுடியும். ஒருவருக்கு இந்த தசா ஆன்மீகத்திற்க்கு மிக முக்கியமான தசாவாக இருக்கின்றன.

ஒருவருக்கு சனிதசா நடைபெற்றால் அவர் இதுவரை ஏற்பட்ட ஜென்மங்களில் கர்மங்களை கழிக்க சனிதசா அவருக்கு வழி செய்துக்கொடுக்கும். நல்லது செய்தால் நல்லது நடக்கும் அல்லது கெட்டது செய்தால் கெட்டது அதிக நடக்கும். உங்களின் ஜென்மகணக்கு சரி செய்வதற்க்கு வாய்ப்பை தருவரார். 

இறைவனிடம் போய் சேர்வதற்க்கும் இல்லறத்தில் கிடந்து தவிப்பதற்க்கும் சனி அமரும் வீட்டை பொருத்து அது அமையும். சனி லக்கினாதிபதியாகி எட்டாவது வீட்டில் அமர்ந்தால் அவரால் ஆன்மீகத்தில் உச்சத்திற்க்கு சென்று பிறவா நிலையை அடையமுடியும். அதற்க்கான தசா நடைபெறவேண்டும். சனி என்பது கர்ம காரகன் என்று வருவதால் அதிகமாக நன்மை செய்வதைவிட கெடுதலை அதிகமாக சந்திக்க வேண்டிவரும். 

ஜாதகத்தில் அமரும் கிரகங்களின் நிலையை வைத்து ஒவ்வொரு கிரகங்களும் செயல்படும்.தசாநாதர்கள் ஆன்மீகமாக அமைந்தால் பிறவியை கடக்கமுடியும். இடையில் வரும் புத்திநாதர்கள் அவவப்பொழுது சிறிய காலத்திற்க்கு மட்டும் காட்டிவிட்டு செல்வார்கள். நீண்ட நாட்கள் தசாவின் பிடியில் இருக்கும் ஒருவருக்கு ஆன்மீகத்தில் உயரமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, August 26, 2013

நம்பிக்கை


வணக்கம் நண்பர்களே!
                    நான் இருக்கும் அடையார் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குல்பி ஐஸ் விற்க்கும் நபர் அறிமுகமானர்.  இவர் இரவில் குல்பி விற்க்கும்பொழுது எதைச்சயாக அறிமுகம் ஆனார். இவர் என்னை அடிக்கடி நான் இருக்கும் தெருவில் சந்திப்பார். அவரிடம் குல்பி வாங்குவது கிடையாது. சும்மா பேசுவார். 

நான் டிராவல்ஸ்ஸில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் சொல்லிருந்தேன். ஒரு நாள் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது எனது நண்பர் வந்தார். வந்தவர் எனக்கு கொஞ்சம் பிரச்சினை நாளைக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் வீட்டுக்காக வா என்றார். சரி வருகிறேன் என்று சொல்லிருந்தேன். என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார் என்னிடம் நீங்கள் சோதிடம் பார்ப்பீர்களாக என்றார். நானும் பார்ப்பேன் என்றேன். என்னிடம் ஜாதகம் இல்லை கைரேகை பார்த்து சொல்வீர்களா என்றார்.

உன்னுடைய பிறந்த தேதி நேரத்தை சொல்லு என்று சொன்னேன். வீட்டில் கேட்டு சொல்லுகிறேன் என்றார். நான் வெளியூர் சென்றதால் ஒரு வாரம் பார்க்கவில்லை. ஒரு வாரம் சென்றபிறகு வந்து பார்ததேன். அவர் என்னை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தார். 

அவரை பார்த்து பலனை சொன்னேன். அவர் என்னை தினமும் என்னை வந்து பார்க்காமல் இருக்கமாட்டார். அவன் என்னிடம் சொன்னது எனது குடும்பம் வடநாட்டில் உள்ளது நான் இங்கு வந்த குல்பி விற்கிறேன். எனது அண்ணன் ஊரில் சிறிய கடைவைத்துள்ளார் என்றார்.

அவன் என்னிடம் சார் குல்பி ஒரு நாள் நன்றாக ஒடுகிறது. ஒரு நான் சரியாக செல்லமாட்டேன்கிறது என்றார். உன் குல்பி தினமும் விற்க நான் ஒன்றை செய்கிறேன் உனக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்று சொல்லிருந்தேன். 

அம்மனை வைத்து அவனுக்கு உதவ ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் நல்ல வியாபாரம் அவன் என்ன செய்வான் என்றால் தினமும் என்னை வந்து பார்ப்பார். 20 ரூபாய் தந்துவிடுவான். எனக்கு வேண்டாம் என்று சொல்லியும் விடாமல் வைத்துவிட்டு போய்விடுவார். 

எனது நண்பர்கள் எல்லாம் சொல்லுவார்கள் உனக்கு மட்டும் தான் இப்படி யோகம் எல்லாம் இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள். உண்மையில் நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு அப்பொழுது தெரியாது.

இதனை எனது குருநாதரிடம் சொன்னேன். சாமி இப்படி ஒருவன் என்னிடம் இருக்கிறான். அம்மனை வைத்து அவனுக்கு உதவி செய்து உள்ளேன். அவனும் நன்றாக நடந்துக்கொண்டு உள்ளான் என்றேன். உடனே அவர் அவனை வேறு தொழிலுக்கு மாற்று என்றார். அவனிடம் இதனைப்பற்றி சொன்னேன். அந்த நேரத்தில் ஆயுதபூஜை நேரம் வருவதால் ஊருக்கு செல்வதற்க்கு சொல்லி இருந்தார்.

 நான் அவனிடம் ஊரில் இருந்து வரும்பொழுது உன் ஊரில் இருந்து ஆட்களை அழைத்து ஏதாவது ஒரு கட்டிட வேலையாவது செய்வதற்க்கு ஆளை அழைத்துவா என்றேன். அவன் ஊரில் இருந்து திரும்பும்பொழுது ஆட்களை அழைத்துவந்தான். 

மூன்று பேர்களை அழைத்து வந்தேன். எனக்கு தெரிந்து கட்டிடம் கட்டுபவர்களிடம் சொல்லி இவனையும் இவர்களின் ஆளையும் அங்கு போகசொல்லி அனுப்பியிரு்ந்தேன்.படிப்படியாக முன்னேறி இன்று தனியாக கட்டிடம் கட்டி தந்துக்கொண்டு இருக்கிறான். அவன் வளர்வதற்க்கு அம்மனின் உதவி செய்ததால் அவன் இன்று நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளான். 

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அவன் அம்மனின் மேல் வைத்த நம்பிக்கை மற்றும் என்னையும் என்னுடைய குருநாதரின் மேல் இருந்த மரியாதை. அம்மன் இவனுக்கு அனைத்தையும் பூர்த்தி செய்துக்கொடுத்தது.வடநாட்டில் இருந்து வந்து நம்பிக்கை வைத்த முதல் ஆள் இவன் தான். இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். 

அனைத்தையும் கற்று முடித்த பிறகு அதனை செயல்படுத்தி பார்த்த பிறகு தான் பிளாக்கை எழுதவந்தேன். நமது பிளாகை படித்துவிட்டு இப்பொழுது பல பேர் பயன் அடைந்து வருகிறார்கள்.

அம்மனிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்பிக்கை மட்டும் வைத்து இருந்தால் உங்களை கண்டிப்பாக மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் அதுவும் குறுகிய காலத்தில் செல்லமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகுக்கு பரிகாரம் செய்யும்பொழுது கவனிக்கபடவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் ஒரு நண்பரோடு போனில் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ராகுவைப்பற்றி பேசும்பொழுது பதிவில் ஒரு சில கருத்துக்களை நாம் சொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது ஞாபகத்திற்க்கு வந்தது அதனை சொல்லிவிடவேண்டும் என்பதால் இந்த பதிவை தருகிறேன்.

ராகுக்கு பல பரிகாரம் பரிந்துரைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி போன்ற கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு போய் பரிகார பூஜையும் செய்கிறார்கள். பூஜை செய்வது தவறு இல்லை. ராகுக்கு என்று பரிகாரம் செய்தால் பிராமணர்களை கொண்டு அந்த பூஜை செய்யப்படகூடாது. பிராமணர்கள் பூஜை செய்தால் ராகுவை திருப்திபடுத்தமுடியாது என்பதால் இதனை சொல்லுகிறேன். 

ராகு என்பது பிராமணர்கள் இல்லாதவர்களை குறிப்பிடும் ஒரு கிரகம். ராகுக்கு போய் பிராமணர்களை வைத்து செய்தால்  எப்படி அது ஏற்றக்கொள்ளாது. நீங்களாகவே செய்ய பாருங்கள். சம்பந்தப்பட்ட நபரே அவரின் கைகளால் செய்தால் மிகவும் நல்லது. சம்பந்தப்பட்ட நபர் இல்லை என்றால் அவர்களின் உறவினர்களை வைத்து செய்துக்கொள்ளலாம். 

சென்னையில் இருக்கும் கோவில்களில் ராகுவின் அம்சமான பாம்பிற்க்கு பிராமணர்கள் பூஜை செய்ய மாட்டார்கள். மக்களே அதற்கு பூஜை செய்துக்கொள்வார்கள். அதனால் நீங்களே பூஜையை செய்வது நல்லது.

பிராமணர்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீ்ர்களா இப்பொழுது அவர்களுக்கும் ஏகாப்பட்ட தோஷங்கள் வந்துவிட்டது. நீங்கள் பிராமணர்களாக இருந்தால் பிராமணர்கள் அல்லாதவர்களை வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கடன் பிரச்சினை


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக கடன்களை வாங்கிக்கொண்டு செலவு செய்துவிட்டு என்னை தொடர்புக்கொள்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார்கள்.

ஒருவர் கடன் வாங்குவது இயல்பான ஒன்று. அவர்கள் கடன் வாங்குவது அடிப்படை தேவைக்கு அல்லது தொழில் செய்வதற்க்காக செய்தால் நல்லது. அதனைவிட்டு விட்டு ஆடம்பரத்திற்க்காக கடனை வாங்கினால் என்ன செய்யமுடியும். ஒரு சிலர் ஆடம்பரத்திற்க்காக கடனை வாங்கி சரியாக மாட்டிக்கொள்கிறார்கள் அவர்களை யாராலும் காப்பாற்றமுடியாது.

ஏகாப்பட்ட நபர்கள் கடனால் பாதிக்கப்படுகிறார்கள். கடனை வாங்கும்பொழுதே எப்படி திருப்பிக்கொடுக்கவேண்டும் என்பதை தயார் செய்துக்கொண்டு தான் கடனை வாங்கவேண்டும். பணத்தை கொடுக்கிறார் என்று வாங்கினால் மாட்டிக்கொள்வது நீங்கள் மட்டுமே

உண்மையை சொல்லவேண்டுமானால் கடனை திருப்பி அடைக்கும் வழி மற்றும் கொடுத்த பணம் திரும்பி தரவைப்பது கண்டிப்பாக எனக்கு தெரியாத ஒன்று. என்னுடைய குருநாதருக்கும் இந்த வழி தெரியாது.

பலபேர் பணத்தை கொடுத்துவிட்டு அல்லது பொருளை கொடுத்துவிட்டு எனக்கு திருப்பி தரவையுங்கள் என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இதனை அம்மன் செய்யாது.இதனை மட்டும் செய்தால் நல்ல வருமானம். இதனை அம்மன் செய்யாது அதனால் இதற்கு தொடர்புக்கொள்ளாதீர்கள்.

என்னை பொருத்தவரை நியாயமாக நடந்துக்கொண்டு  உங்களுக்கு பிரச்சினை என்றால் என்னால் முடிந்தளவுக்கு உதவமுடியும். அம்மனும் அதனை தான் எதிர்பார்க்கும்.என்னை நம்பாமல் இருக்கலாம் ஆனால அம்மனை நீங்கள் முழுமையாக நம்பவேண்டும்.

உங்களின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை கவனிப்பது மிகவும் நல்லது. என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு விழிப்போடு இருங்கள் இல்லை என்றால் அது உங்களை விழுங்கிவிடும்.பிடித்து குழியில் தள்ளிவிடும். கடனை உருவாக்குவதில் ஆறாவது வீடு மற்றும் ஆறாவது வீட்டு தசா வல்லவர்கள் உங்களின் ஜாதகத்தில் அவரை கண்காணித்துக்கொள்வது நல்லது. அவரை சாந்தப்படுத்த என்ன பரிகாரமோ அதனை செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 109


வணக்கம் நண்பர்களே!
                    தெய்வம் மற்றும் சித்தர்கள் காட்சிக்கொடுக்கிறார்கள் என்று பல மக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று காலையில் அலுவலகத்திற்க்கு வந்தவுடன் ஒரு மெயிலை பார்த்தேன். அதிலும் இப்படிபட்ட விசயங்கள் இருப்பதால் இதனைப்பற்றி ஒரு பதிவை தந்துவிடலாம் என்று தந்துவிட்டேன்.

நமது கனவில் வருவது எல்லாம் அனைத்தும் உண்மையாகிவிடாது. ஒரு சில நடக்கலாம். அதாவது தெய்வங்கள் காட்சி என்பது நேரிடையாக இருக்கும். அது தான் காட்சி. நாம் சும்மா நினைத்துக்கொண்டு இருப்பது எல்லாம் கனவில் வரும் அது காட்சியாக இருக்கமுடியாது. அது மனதின் ஒரு சிறு வேலை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

நான் மேல்மலையூனார், திருவக்கரை மற்றும் எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு போகும்பொழுது அது பகலில் காட்சி தரும் அதனை பார்ப்பதற்க்கு மட்டுமே அங்கு செல்கிறேன். என்னோடு ஒருவர் வந்திருந்தாலும் அது எனக்கு மட்டும் தெரியும் படி காட்டிக்கொடுக்கும் அதற்க்காக மட்டுமே அங்கு செல்வது உண்டு என்னோடு இருக்கும் நபருக்கு அது தெரியாது.. இந்த மாதிரி காட்சிக்கொடுத்தால் மட்டுமே அது காட்சி்.

நேரிடையாக ஒரு தெய்வத்தை மற்றும் மகானை பார்ப்பது என்பது அவன் புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திலும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.

சித்தர்களை பார்க்கிறேன் என்று இப்பொழுது பிரபலமாக நடந்துக்கொண்டிருக்கிறது. சித்தர்களை பார்ப்பதற்க்கும் உங்களிடம் அம்மன் இருக்கவேண்டும் அல்லது ஏதாவது ஒரு தெய்வம் இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே எனக்கு தெரிந்தவரை அவர்களை பார்க்கமுடியும்.கனவில் காட்சி தருகிறது என்று சொல்வது எல்லாம் உங்களின் மனதின் இயல்பு அன்றி வேறு இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, August 25, 2013

எச்சரிக்கை செய்தி


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்களில் வரும் செய்திகளை படித்துவிட்டு தகுந்த குரு மற்றும் ஆன்மீகஞானம் இல்லாமல் செய்ய முயலவேண்டாம். விஷப்பரிச்சையான ஒரு செயலை செய்யவேண்டாம்.

என் மீது நம்பிக்கை வைத்து இத்தனை பேர் கேட்பது எனக்கு சந்தோஷமான ஒரு விசயம். அதே நேரத்தில் உங்களின் நலனிலும் நான் அக்கறை கொண்டுள்ளதால் இதனை சொல்லுகிறேன். நாங்கள் செய்கிறோம் என்றால் எங்களின் பின்னால் பல சந்நியாசிகள் இருககின்றனர். அவர்களின் சக்தி கெடுதலை தடுத்துவிடும். நீங்கள் எடுத்து உடனே செய்கிறேன் என்று இறங்கினால் மரணம் தான் வரும். 

ஜாதகத்தை பொருத்தவரை அனைத்து கிரகங்களையும் மாற்ற முடியாது. ஒரு சில விதி அதிலும் இருக்கிறது. கோச்சார பலனை மாற்ற கற்றுக்கொண்டாலே பொதுமான ஒன்று.வழிபாட்டு முறைகளை வைத்து கிரகங்களின் பாதிப்பை குறைக்க ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள அதனை செய்தாலே போதுமான ஒன்று.

ஆத்மாவை வெளியில் எடுக்கிறேன் என்று இறங்கவேண்டாம்.ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை உணர்வதற்க்கே பல வருடங்கள் கூட ஆகலாம். அதன் பிறகு அதனை எடுத்து வெளியில் செல்வது என்பது பல வருடங்கள் செய்யகூடிய பயிற்சி. முறையான பயிற்சி இல்லாமல் செய்யகூடாது. பல வருடங்கள் பயிற்சிக்கு பிறகு இது சித்திக்கும். 

நம்பினால் நம்புகளில் நிறைய பதிவுகள் வரவுள்ளன அதனையும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்த பதிவுகளில் வருபவனவற்றை படித்து விட்டும் முயற்சியில் இறங்கவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் பதிவுகளில் எழுதிய விசயங்களை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு எனக்கு இதனை எல்லாம் சொல்லித்தாருங்கள் என்று கேட்கிறார்கள். நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மாதம் ஒரு பதிவு இதனைப்பற்றி எழுதினால் மட்டுமே நிறுத்துகிறார்கள். 

உங்களுக்கு ஒரு குருநாதரை அமைத்துக்கொண்டு அவர் சொல்லுவது படி நடக்கவேண்டும். அவர் என்ன சொல்லுகிறாரோ அதன் படி தான் நீங்கள் செய்ய வேண்டும். என்னிடம் கேட்டு ஒன்றும் நடைபெறாது. வழிமுறைகள் வி்த்தியாசப்படும். 

பல பேர் ஒரு குருநாதரிடம் மந்திரத்தை வாங்கிக்கொண்டுவிட்டு என்னை தொடர்புக்கொண்டு எப்படி செய்வது என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு குருநாதர்கள் கொடுக்கும் மந்திரங்களுக்கும் செய்யும்முறை வேறுபடும். அவர்கள் சொல்லுவதுபோல் செய்தால் உங்களுக்கு பயன்பெறமுடியும். 

ஒருவருக்கு ஒன்றை கொடுக்கவேண்டும் என்றால் எங்களோடு பூர்வபுண்ணியத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே எங்களை நாடி கற்றுக்கொள்ளமுடியும். அவர்களுக்கு மட்டுமே அது போகும் வேறு யாருக்கும் போகாது.

உங்களின் நேரத்தை வீண் செய்யகூடாது என்பதால் மட்டுமே இதனை சொல்லுகிறேன்.  காயத்ரி மந்திரம் மட்டும் இப்பொழுது சொல்லி தருகிறேன். வேற எந்த பயிற்சியும் நடத்தப்படவில்லை.

ஒன்று காலை சென்னையில் இருந்து ஒரு நபர் பங்குசந்தை சோதிடம் நடத்துங்கள் என்று கேட்டார். நான் பொதுவாக எந்த செயல் செய்தாலும் அம்மன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அதனை செய்வேன். அம்மன் அனுமதி தரவில்லை. ஏன் என்று கேட்டால் எதிர்காலத்தில் பிரச்சினையை சந்திப்பாய் என்று சொல்லுவதால் அதனைப்பற்றி வெளியில் பேசுவது கூட கிடையாது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, August 24, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 12

வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு என்பது பாம்பு என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. ராகு கெட்ட கிரகம் அதனால் கெட்டதை தான் தரும் பக்தியை தராது என்று நாம் நினைத்து கொண்டிருந்தால் அது தான் தவறு. இதனைப்பற்றி பதிவை தந்திருந்தாலும் இப்பதிவில் கூடுதல் தகவலை தருகிறேன்.

ராகு தசாவில் ஒரு சிலர் மிகப்பெரிய ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்கள் எப்படி என்றால் ராகு நல்ல நிலையில் அமரும்பொழுது அது நடைபெறும். பக்தி மார்க்கத்திற்க்கு அப்படியே கொஞ்சம் சென்று பார்த்தால் நமது மதத்தில் அனைத்தையும் பாம்பை வைத்து தான் சொல்லிருப்பார்கள். அனைத்து கடவுளும் பாம்பு மீது தான் இருக்கும்படி வைத்திருப்பார்கள். பாம்பு நமது மதத்தில் வணங்குதலுக்குரிய ஒன்று.

சிவனாக இருக்கட்டும் அம்மனாக இருக்கட்டும் பெருமாளாக இருக்கட்டும் சித்தர் வழிபாடாக இருக்கட்டும் அனைத்திலும் பாம்பை முன் நிறுத்துவார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது ஆன்மீகத்திற்க்கு பாம்பு தான் முக்கியமான ஒன்று என்று தெரிகிறது.  

ராகு தசாவில் அதிகமாக நீங்கள் காண்பது பாம்புவாக தான் இருக்கும்.அப்படி நேரில் காணமுடியவில்லை என்றாலும் கனவில் வந்து உங்களுக்கு காட்டும் நான் தான் உன்னை பிடித்து இருக்கிறேன். பய்ன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள் என்று சொல்லாமல் சொல்லும். ராகு என்பது சிறந்த ஆன்மீகத்தை தரும். 

உங்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் ராகு இருந்து தசா நடைபெற்றால் ஆன்மீகத்திற்க்கு ஒரு சிறந்த காலமாக அது இருக்கும். உங்களுக்கு ராகு எங்கு உள்ளது என்று பாருங்கள். ராகு நல்ல நிலையில் இருக்கின்றாத என்று பாருங்கள். உங்களுக்கு அனைத்தும் சித்தியாகும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வத்தைப்பற்றி அதிகமான கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. பாதிபேர் குலதெய்வத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கேட்கிறார்கள். உங்களின் வழிதோன்றல்கள் தான் இதற்கு வழி சொல்லவேண்டும். 

உங்களின் உறவினர்கள் சொல்லுவது மட்டுமே இதில் உண்மை இருக்கமுடியும்.வேறு யார் சொன்னாலும் அது தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில ஆன்மீகவாதி என்ன சொல்லுகிறார்கள் என்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை வணங்கி வாருங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அது அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளலாம் அதுவும மேஷ ராசி விருச்சிக ராசி செவ்வாய் உச்சமாக இருக்கின்றவர்கள் வேண்டுமானால் வணங்கிவரலாம்.

பொதுவாக முதலில் விநாயகரை வணங்கிவருவது நல்லது. குடும்பமாக இருப்பதால் உங்களுக்கு பிடித்த அம்மனை வணங்கிவாருங்கள். 


சுயநலமாக ஒரு கருத்தை சொல்லுகிறேன்.




மேல்மலையனூர் அங்களாபரமேஸ்வரியை வணங்கலாம். சூப்பர் பவர் கிடைக்கும். கேட்டவரத்தை கொடுக்கும் ஈடு இணையற்ற சக்தி கொண்ட என் தாய் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரியை வணங்கினால் அது யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்றுவாள். 

உங்களால் உங்களின் குலதெய்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதனை குலதெய்வமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதனை குலதெய்வமாக நீங்கள் எடுப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு பூஜை முறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள் : விளக்கம்


ஸ்ரவாணி 

நானும் இதைப் பற்றி மிகவும் யோசித்து உண்டு .
தீர்வாக உக்ர தேவதை வழிபாடும் , பிரத்யதிதேவதை வழிபாடும் ,
ஜீவசமாதி செல்லலும் தான் நான் நினைத்தது . நடந்தது .

உங்கள் குரு கூறி இருப்பது அற்புத , புதிய முறை .
நான் இதையே சற்று வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன் .

என்னெவெனில் , ராமர் ஜாதகம் , சீதா ஜாதகம் போல் நம் ஜாதகத்தில் 
பிரச்சனை தரும் கிரஹங்களை மாற்றி எழுதி பூஜை அறையில் வைத்து 
மந்திரம் ஜபித்தல் என்பதே அது .

நீங்கள் விரும்பினால் இதனை தங்கள் வாடிக்கையாளுருக்கும் 
பரிந்துரைக்கலாம் . உளவியல் ரீதியாகவும் நல்ல பலனைத் தரும் என நினைக்கிறேன் .
ஆனால் எந்த ஸ்தானத்தில் மாற்றுவது என்பதை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும்.
ஆறு என்பதனை விட மூன்று அல்லது எட்டு சரியாக இருக்குமோ என்பது என் தாழ்மையான கருத்தாகும்.


நான் இன்னும் அதனை பல காரணங்களால்
நடைமுறைப்படுத்தவில்லை .

உங்களின் இந்த பதிவு என் எண்ணத்திற்கு உற்சாகம் ஊட்டி 
மறைமுகமாக அதாவது உங்கள் + உங்கள் குருநாதரின் மூலமாக 
எனக்கு அம்மனின் ஆசி கிட்டியது போலுள்ளது.
இனி நான் என் எண்ணத்தை செயல்படுத்த உள்ளேன்.
கடவுள் பச்சைக்கொடி காட்டி விட்டார்.

இது மட்டும் அல்ல . ஜாதக கதம்பத்தில் வரும் 
நிறைய விஷயங்கள் என் எண்ணங்களோடும் ஐடியாக்களோடும் 
ஒத்துப்போகின்றன . 

பகிர்விற்கு கோடானு கோடி நன்றிகள் சார் !

நீண்ட பின்னோட்டத்தை தந்துள்ளீர்கள். நன்றி

நாம் சோதிடத்தை படித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் படித்துக்கொண்டே இருக்கலாம். அந்த சோதிடத்தை கொண்டு நமது வாழ்க்கைக்கு என்ன பயன்படுத்திக்கொண்டோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. 

இதனை நாங்கள் வாடிக்கையாளர்க்கு மறைமுகமாக செய்கின்றோம். அவர்களிடம் சொல்லுவதில்லை. எப்படி செய்கிறோம் என்பதை பற்றி மட்டும் வெளியில் சொல்வதில்லை. உண்மையில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியில் காட்டகூடாது என்று ஒரு சட்டம் இருப்பதால் இதனை வெளியில் சொல்லுவதில்லை. இப்படி பதிவில் அடிக்கோடிட்டு காட்டும்பொழுது உங்களைபோல் உள்ளவர்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டு நீ்ங்களும் சிந்தித்து புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள் என்பதால் வெளியிடுகிறேன்.

சோதிடம் மட்டும் படிக்ககூடாது நமது மதத்தில் இருக்கும் வேதங்கள்,புராணங்கள் மற்றும் உபநிடங்கள் என்று படித்தால் அனைத்தும் எளிதில் விளங்கும். 

கிரகங்களை மாற்றுவது என்பது சிக்கலான ஒரு வேலை சோதிடம் நன்றாக தெரியும் பட்சத்தில் செய்துக்கொள்ளலாம். 

ஒரு தேவதை உங்களிடம் இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் கிரகங்களை ஆட்டிபடைக்க முடியும். அனைத்திற்கும் அது தேவை. அதனால் தான் அதனை நான் அனைவரிடமும் சொல்லுகிறேன்.

ஜாதககதம்பம் என்பது அனுபவத்தில் உள்ளதை உங்களுக்கு தருகிறது. அதனால் அனைவருக்கும் இது ஓத்துபோகும்.

மொத்தத்தில் சோதிட கிரகங்களை மாற்றுவது என்பது சிக்கல் பிடித்த வேலை. இதனை செய்யும்பொழுது உங்களின் தேவதை உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமே சாத்தியப்படும். தேவதையின் வழிப்படி செய்தால் நல்லது. 

நாங்கள் அனைத்தையும் செய்வது இந்துமதத்தில் உள்ள விசயங்களை வைத்து தான் செய்கிறோம். புதுமையாக எதனையும் செய்யவில்லை. நமது மதத்தில் இருக்கும் விசயங்களை நாங்கள் நம்பி செய்கிறோம். மதத்தில் ஒன்றும் இல்லை என்றால் உலகம் எப்படி இந்து மதத்தை உற்றுபார்க்கும். முதலில் மதத்தை நம்ப வேண்டும் அதன் பிறகு இது எல்லாம் சாத்தியப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே !
                    நம்பினால் நம்புங்கள் பகுதியில் சோதிடத்தை வைத்து ஒன்றை சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்ந்து பார்த்து அதற்கு தீர்வை நாங்கள் தருவது வழக்கம். அனைத்திற்க்கும் ஜாதகம் ஒரு கைடு மாதிரி வைத்திருப்பது வழக்கம். ஒருவருக்கு பூர்வபுண்ணியத்தில் அதாவது ஐந்தாவது வீட்டில் சனி அமர்ந்தால் அவருக்கு அனைத்திலும் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும். அப்படி வரும் நபர்களுக்கு பரிகாரம் செய்வது எப்படி என்று பல நாட்கள் யோசித்து இருக்கிறேன். எப்படி பரிகாரம் செய்தாலும் எடுபடமாட்டேன்கிறது. பிரச்சினைதான் சம்பந்தப்பட்ட நபருக்கு வந்தது.

இதனை எடுத்துக்கொண்டு எனது குருநாதரிடம் அணுகி இருந்தேன். இதற்கு நீங்கள் ஆலோசனையை தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது அவர் சொன்னார். சனியை மாற்றிவிடு என்றார். எப்படி சாமி என்றேன். சனி கிரகம் எங்கு இருந்தால் நல்லது செய்யும் என்றார் அதற்கு நான் ஆறாவது வீட்டில் இருந்தது என்றால் பரவாயில்லை சாமி அங்கு நிற்க்கும்பொழுது நல்லது செய்யும் என்றேன். அங்கேயே மாற்று என்றார்.

என்ன சாமி காமெடி செய்கிறீர்கள் எப்படி கிரகத்தை மாற்றமுடியும் என்றேன். என் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்றார். ஆம் இருக்கிறது சாமி என்றேன். அப்ப மாற்று டா என்றார். வழி சொல்லுங்கள் என்றேன்.

ஒரு சின்ன பூஜையை செய் இந்தா மந்திரம் என்று இரண்டு வரிகளில் ஒரு மந்திரத்தை தந்தார்.அதனை ஒருமுறை செய்தேன் அவ்வளவு தான். சனி ஆறில் இருந்து என்ன செய்யுமோ அதனை செய்தது.

எப்படி சாத்தியம்?

அவர் கொடுத்த மந்திரம் அதர்வண வேத மந்திரம். அதர்வண வேத மந்திரத்தை கொண்டு ஒருவன் நினைத்தை அடையமுடியும் என்னும் பொழுது கிரகத்தை மாற்றுவது ஒரு பெரிய வேலை இல்லை. 

நீங்கள் நினைக்கலாம் அப்படி என்றால் ஒருவன் இறக்கவே வேண்டியதில்லையே என்று நினைக்கலாம். ஆம் இறக்காமல் இருக்கலாம் இதனை தான் சித்தர்கள் செய்துக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்பினால் நம்புங்கள்.

மந்திரத்தை கேட்காதீர்கள் அது குருவின் அனுமதி இல்லாமல் வெளியில் தரமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

கண்திருஷ்டி பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                     கண்திருஷ்டியை பார்த்தவருகிறோம் அதில் பரிகாரத்தையும் பார்த்தோம். தொடர்ந்து இப்பதிவிலும் பார்க்கலாம். 

வீட்டின் வாசற்படியில் கற்றாலையை கட்டி வைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். அதேப்போல் வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூஜை போட்டு வைப்பதும் வருகின்ற நபர்களின் மனநிலையை சரிசெய்யும் இதுவும் கண்திருஷ்டி பரிகாரம்.

கருப்பு குதிரையின் லாடத்தை வாங்கி அதனை வீட்டின் வாசற்படியில் மாட்டிவைப்பதும் ஒரு சிறந்த கண்திருஷ்டி பரிகாரம். வீட்டிற்க்குள் எந்த தீயசக்தியும் நுழையவிடாமல் இந்த லாடம் தடுக்கிறது. குதிரையில் எந்த ஒரு புள்ளியும் இல்லாமல் இருக்கவேண்டும். 

பல பேர் இதில் ஏமாற்றிவிடுகிறார்கள். கருப்பு குதிரையின் லாடம் என்று வேறு குதிரையின் லாடத்தை கொடுத்துவிடுகிறார்கள். இதன் நம்பகதன்மையை பொருத்து வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். கருப்பு குதிரையின் லாடம் கிடைப்பது கடினமாக இருக்கின்றது.

கண்திருஷ்டி விநாயகர் என்றே ஒரு விநாயகர் இருக்கிறார். இவரின் படத்தை வாங்கி வடக்குதிசை நோக்கி வைத்து வழிபட்டால் கண்திருஷ்டி போகும் என்பார்கள். யோகநரசிம்மரின் படத்தை வைத்து வழிப்பட்டாலும் கண்திருஷ்டி போகும்.

வீட்டிற்க்குள் வாரத்திற்க்கு அல்லது மாதத்திற்க்கு ஒரு முறை கடல் தண்ணீரை கொண்டு வந்து தெளிக்கலாம். இதனால் வீட்டில் உள்ள துர்சக்திகள் வெளியில் போகும். கடல் நீர் இல்லாத ஊரில் பசுமாட்டின் கோமியத்தை வாங்கி தெளிக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

சந்நியாசிகளுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருவர் அரபுநாட்டில் இருந்து என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவரின் குடும்பங்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். அவர் ஒரு சோதிடரிடம் பார்க்கும்பொழுது அந்த சோதிடர் அவரிடம் சொல்லுகிறார் உங்களின் குலதெய்வம் வேறு நீங்கள் வணங்கி கொண்டிருப்பது ஒரு ஆத்மாவை தான் உங்களின் குலதெய்வம் உங்களின் ஊரில் இருக்கும் முனிஸ்வரர் என்று சொல்லுகிறார். 

அந்த நபர் இவரின் ஊரில் போய் முனிஸ்வரரை எடுத்துவிட்டார். உடனே அந்த ஆத்மா இவரை போட்டு அந்தப் பாடு படுத்தி எடுக்கிறது. முனிஸ்வரரை வணங்காதே என்னை மட்டும் வணங்கவேண்டும் என்கிறது. இவரின் உடலை அது தாக்குகிறது. இவர் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பார்க்கிறார். ஒன்றும் முடியவில்லை. இதில் இணையத்தில் ஒரு குருஜீ ஒருத்தர் இருக்கிறார். அவரையும் தொடர்புக்கொண்டு பார்க்கிறார் அவர் இவரை வைத்தே பல லட்சத்தை சம்பாதித்துவிட்டார்.  ஆனால் பலன் ஒன்றும் இல்லை.

இந்த குருஜி ஊரில் இருக்கின்ற அத்தனை கர்மங்கள் செய்யும் இடத்திற்க்கும் இவரை போகசொல்லி இருக்கிறார். ஒரு ஆத்மாவை திருப்திபடுத்த தெரியவில்லை என்றால் எதற்கு சந்நியாசி ஆகவேண்டும். ஊரை ஏமாற்றுவது பிழைப்பாக வைத்திருக்கிறார்கள். இவருக்கு ஒன்றுமே நடக்கவில்லை. உடல் நிலை மோசமாக மட்டுமே போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜாதககதம்பத்தை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு விசயத்தை சொன்னார்.

நான் அவரிடம் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு பிரச்சினை குறையும். உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு தேவையான பணத்தை நீங்கள் செலுத்திவிட்டால் நிரந்தரமாக உங்களுக்கு பிரச்சினை இருககாது என்று சொல்லிவிட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாம் பிரச்சினையை முடித்துவிட்டேன். அவர் இருப்பது அரபுநாட்டில் நான் இருப்பது சென்னையில் பிரச்சினை முடிந்தது. இரண்டு நாட்கள் நன்றாக இருந்தார் இரண்டு நாட்களில் பணம் அனுப்பவில்லை. 

நான் அந்த ஆத்மாவிற்க்கு கொடுத்த நேரம் இரண்டு நாட்கள் மட்டுமே பிறகு அது என்ன கேட்கிறது என்று பார்த்து அதற்கு கொடுக்கவேண்டும் அதற்கு செலவு ஆகும். அந்த செலவு அதிகபட்சமாக போனால் மூவாயிரத்தை தாண்டாது. அவர் கஷ்டத்தில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். பணத்தை அனுப்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு பிரச்சினை ஆரம்பம் ஆகிவிட்டது. மறுபடியும் என்னை தொடர்புக்கொள்கிறார். நானும் மீண்டும் இரண்டு நாட்கள் செய்து தருகிறேன். இப்படி மூன்று முறை அவர்க்காக செய்தேன். 

அவரின் கஷ்டகாலம் பணத்தை அனுப்பமுடியவில்லை. மறுபடியும் என்னை தொடர்புக்கொண்டார். இனி என்னை தொடர்புக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவி்ட்டேன். எனக்கும் அந்த நேரத்தில் கஷ்டமான ஒரு நிலை தான் என்னால் அவருக்கு என் கையில் இருந்து பணம் போட்டு செய்யமுடியாது. இனி தொடர்புக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏன் என்றால் அவரின் கர்மா அப்படி இருக்கிறது.

இரண்டு வாரத்திற்க்கு முன்பு எனது வங்கி கணக்கில் 1500 ரூபாய் கட்டி இருந்தார். அந்த பணத்தை எடுத்து ஒரு சந்நியாசிக்கு கொடுத்துவிட்டேன். அவர் சொல்லிருந்தது தற்காலிக பரிகாரத்திற்க்காக இந்த பணம் என்று போட்டிருந்தார். 

சரியான நேரத்தில் அது செய்தால் மட்டுமே திருப்திபடுத்தமுடியும் இல்லை என்றால் முடியாத ஒரு காரியமாக அது அமையும்.

அவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். கடவுளுக்கு கூட பணம் இருந்தால் மட்டுமே செய்கின்றது என்றார். நான் என்ன செய்வது உங்களுக்கு நடத்திக்காட்டுகிறேன். அதற்கு செய்ய வேண்டியதை நான் செய்தால் மட்டுமே அது விலகிவரும். எனது குருநாதர் மற்றும் அம்மனின் பவரால் அது மதித்து விலகி நிற்கிறது. அது என்ன கேட்கிறதோ அதனை செய்ய என்னிடம் பணம் இருந்தால் செய்துக்கொண்டு இருக்கலாம். 

ஒரு செயலை எந்த ஒரு பூஜையும் செய்யாமல் அதனை செய்கிறேன் என்று பார்க்கும்பொழுது நான் யார் என்று அவருக்கு புரிந்து இருக்கும். லட்சகணக்கில் பணத்தை இழந்து உள்ளீர்கள் ஒன்றுமே பணம் வாங்காமல் மூன்று முறை செய்து கொடுத்திருக்கிறேன். என்னை பேசினால் நான் என்ன செய்யமுடியும்.  நான் ஒன்றும் சந்நியாசி கிடையாது. எனக்கு பணம் தேவை இருக்கிறது. நான் செய்துவிட்டு அதனை காட்டிவிட்டு தான் பணம் கேட்கிறேன். அதுவே முடியாது என்றால் நான் என்ன செய்யமுடியும்.

நீங்கள் ஏழைகளாக இருந்தால் ஒரு பைசா வாங்காமல் செய்துக்கொடுத்துவிடுவேன். பணம் இருந்தால் பணத்தை கேட்பேன். இவருக்கு நடந்தது எல்லாம் செலவு செய்தால் மட்டுமே அதனை வெளியில் எடுக்கமுடியும்.

சந்நியாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

நீங்கள் இந்த உலகத்தி்ன் மிகசிறந்த படைப்பு அதுவும் முழுமை நிறைந்த படைப்பு. நீங்கள் புத்தகத்தை படித்துவிட்டு இருக்க கூடாது அனைத்தும் அனுபவபடிப்பாக இருக்கவேண்டும். உங்களின் பார்வை பட்டலே போதும் அனைத்தும் பறந்துஓடும் அனைத்து கர்மமும் விலகிவிடும் நீங்கள் என்னடா என்றால் இருக்கின்ற அனைத்து பூஜையும் செய்து பணத்தை பிடுங்கவதில்லையே குறியாக இருக்கிறீர்கள். இதில் வேறு இந்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிவது. உண்மையான ஆன்மீகம் என்ன என்பதை நீங்கள் வாழ்ந்து காட்டவேண்டும் அதனை விட்டுவிட்டு ஊர் மேயக்கூடாது. நீங்கள் வரும் நபர்களை பார்த்து இப்படி நினைப்பது போலவே தோன்றுகிறது வடிவேலு சொல்லுவது போல் நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா என்பதுபோலவே இருக்கிறது. தயவு செய்து திருந்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.   

நாய் பாவம்


வணக்கம் நண்பர்களே !
                    தலைப்பை பார்த்தவுடன் என்ன புதுமையாக இருக்கிறதே என்று எண்ணவேண்டாம். மனிதன் எப்படி தான் யோசிப்பானோ என்று தெரியாது. அவன் சிந்தித்து செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் டஷன் கணக்காக கர்மத்தை எடுத்துக்கொள்கிறான். வெளியில் சொல்வது மட்டும் நான் ஒரு தவறையும் செய்யவில்லை என்பான். அவனுக்கே தெரியாமல் அடுக்கடுக்காக தவறை செய்வான்.

எனக்கு ஒன்றும் வேலையில்லை என்றால் சில நேரங்களில் பெசன்ட்நகர் பீச்சில் போய் அமர்ந்து இருப்பேன். அந்த பீச்சில் பார்த்தால் ஏகாப்பட்ட மனிதர்கள் நாய்களை பிடித்துக்கொண்டு அலைவார்கள். அவர்கள் அந்த நாயிடம் காட்டும் பாசத்தை பார்த்தால் பாசமலர் படத்தை டிஜிட்டலில் பார்த்த ஒரு உணர்வு ஏற்படும். அந்தளவுக்கு பாசத்தை காட்டுவார்கள்.

ஆண்களை பார்த்தால் தன் மனைவியை கூட அந்தளவுக்கு கொஞ்சி இருப்பார்களா என்றே தோன்றும் அப்படி ஒரு பாசம் அவர்களின் நாய் மேல் அதேபோல் பெண்களாக இருந்தால் முதலில் பாசம் நாய் அடுத்தது தான் கணவன் அப்படி ஒரு காட்சி எல்லாம் பெசன்ட்நகர் பீச்சில் பார்க்கலாம். 

சரி மேட்டருக்கு வருகிறேன்.

சில வீடுகளுக்கு செல்லும்பொழுது நாய்களை வளர்த்து வருகிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்க்காக வளர்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பெண் நாய்களையும் வளர்க்கிறார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இந்த பெண் நாய்களை ஆண் நாயோடு இணைப்பதில்லை என்பது தெரியவருகிறது. ஏன் இணைப்பதில்லை என்று கேட்டால் குட்டி போட்டு விடும். ஏகாப்பட்ட தொல்லை வந்துவிடும் என்கிறார்கள். இது கொலை செய்யும் பாவத்தோடு மிகப்பெரிய பாவம். உங்களுக்கு இது மிகப்பெரிய கர்மமாக வந்துவிடும்.ஏகாப்பட்ட சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டிவரும்.

உங்களின் வீட்டில் நாய் வளர்த்தால் அதனை இணைவதற்க்கு விடுங்கள். அப்படி முடியவில்லை என்றால் நாயை வளர்க்காதீர்கள். நாய் வளர்ப்பதால் இன்னோரு சிக்கல் இருக்கிறது அது என்ன என்றால் உங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. முன்னோர்கள் வரமாட்டார்கள். அமாவாசை விரதம் செய்யமுடியாது. ஆளை வரமுடியாது என்னும்பொழுது விரதம் யாருக்கு செய்வது. இப்படிபட்ட பிரச்சினை இருப்பதால் நாயை வளர்க்காமல் இருப்பதே நல்லது.

நாய் வளர்க்கிற குடும்பம் எல்லாம் பல பிரச்சினையை சந்திப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனை நான் சொன்னால் இவனுக்கு வேலை இல்லை ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பான் என்பார்கள். சொல்லவேண்டியதை சொல்லியாகிவிட்டது எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் உங்களின் முடிவை பொருத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.