Followers

Friday, August 23, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். எனக்கு தெரிந்த ஒரு வாடிக்கையாளர் இருந்தார். அவரின் ஜாதகத்தை நான் வெளியிடவில்லை. அவருக்கு ராகு ஐந்தாவது வீட்டில் இருந்தது. மிதுனத்தில் ராகு அமர்ந்திருந்தார். 

செவ்வாய் தசா நடந்துக்கொண்டிருக்கும்பொழுது அவர் என்னை வந்து சந்தித்தார். அவர் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அடிப்படை தேவைக்கு கூட அவருக்கு கஷ்டம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அவர் என்னை வந்து பார்த்தது போது அவர் சொன்னார் தம்பி எனது ஜாதகத்தில் நான் முன்னேற்றம் அடைவதற்க்கு வழி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.

அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு சொன்னேன். அவருக்கு செவ்வாய் தசா முடியும் தருவாயில் இருந்தது. அவரிடம் நீங்கள் ஒரு முறை ராமேஸ்வரம் சென்று விட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லிருந்தேன். அவரிடம் நீங்கள் ராமேஸ்வரம் செல்வதற்க்கு பல தடைகள் ஏற்படலாம் எப்படியாவது சென்றுவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லிருந்தேன்.

அவர் கஷ்டப்பட்டு எப்படியே ராமேஸ்வரம் சென்று வந்தார். ராமேஸ்வரம் சென்று வந்தபிறகு என்னை வந்து சந்தித்தார். நான் சென்று வந்துவிட்டேன் என்று சொன்னார். நீங்கள் பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு லாட்டரி விற்க்கும் தொழிலை தேர்ந்தெடுங்கள் என்று சொன்னேன். 

அவர் லாட்டரி தொழிலை தேர்ந்தெடுத்தார். படிப்படியாக சரியான வளர்ச்சியை கண்டார். இடையில் லாட்டரி தொழிலை அரசாங்கம் தடை செய்தவுடன் அவர் வெளி மாநிலங்களுக்கு சென்று கடையை போட்டு செய்துக்கொண்டு இருக்கிறார். இன்று நல்ல நிலைமையில் அவர் இருக்கிறார். காரணம் ராகு தசா அவருக்கு நல்லது செய்யும் என்பது தெரியும். அதனால் அவரை தொழிலை மாற்றி லாட்டரி தொழிலை தேர்ந்தெடுக்க சொன்னேன்.

ராகு தசா அவருக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லவேண்டும். சரியான வளர்ச்சியை தந்தது.நாம் சோதிடம் பார்க்கும்பொழுது வரும் வாடிக்கையாளர்க்கு எதனை செய்ய சொன்னால் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று பார்த்து சரியாக செய்யவேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: