Followers

Thursday, August 22, 2013

ஆன்மீக அனுபவங்கள் 108


வணக்கம் நண்பர்களே !
                    நான் எழுதும் பதிவுகளில் உள்ள விசயங்கள் பாதிக்குமேல் உங்களால் நம்பமுடியாது. ஏன் என்றால் அனைத்தம அமானுஷ்ய விசயங்களாக இருக்கும் ஆனால் அது தான் உண்மை.

என்னைப்போல் வேலை செய்பவர்கள் எல்லாம் ஒரு தெய்வத்தை எடுத்து வைத்து இருப்பார்கள். அனைத்து வேலைக்கும் ஒரே தெய்வத்தை வைத்து வேலை செய்யமுடியாது. இந்து மதத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தெய்வம் என்பது போல் ஒவ்வொரு வேலைக்கு்ம் ஒவ்வொரு தெய்வத்தை வைத்து மட்டுமே செய்து கொடுக்கமுடியும்.

ஒரு வேலை எனக்கு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்கு என்னிடம் உள்ள தெய்வம் செய்யமுடியாது என்றால் நான் அந்த வேலைக்கு உள்ள தெய்வம் யார் வைத்திருக்கிறார் என்று பார்த்து அவரிடம் நான் வாங்கவேண்டும். அவருக்கு பணம் கொடுத்து அவரிடம் இருந்து அந்த தெய்வத்தை வாங்கி என்னுடைய வேலையை முடித்துக்கொண்டு அதன் பிறகு அவரிடம் திருப்பி தந்துவிடுவேன்.

எனக்கு அனைத்து வேலைக்கும் என்னுடைய அம்மன் செய்துக்கொடுத்துவிடுகிறது. ஏதாவது புதுமையாக இருந்தால் எனது குருவிடம் வாங்கி செய்வேன். அவரிடம் அனைத்து தெய்வங்களும் கிடைக்கும். 

இந்த மாதிரி பல பேர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு வேலைக்கும் பணம் கொடுத்து வாங்கி செய்கிறார்கள். இதனை செய்வதற்க்கும் உங்களுக்கு விசயத்தைப்பற்றி நன்றாக தெரிந்து இருக்கவேண்டும். கொடுப்பவரும் உங்களுக்கு நல்ல பழக்கமாக இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள். 

இந்த வேலைகள் செய்பவர்கள் அனைவரும் ஒரு நெட்வோர்க் போல் இருப்பார்கள். அவர்களுக்குள் தெய்வங்களை வாங்கி செய்துக்கொள்வார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: