Followers

Monday, August 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 109


வணக்கம் நண்பர்களே!
                    தெய்வம் மற்றும் சித்தர்கள் காட்சிக்கொடுக்கிறார்கள் என்று பல மக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று காலையில் அலுவலகத்திற்க்கு வந்தவுடன் ஒரு மெயிலை பார்த்தேன். அதிலும் இப்படிபட்ட விசயங்கள் இருப்பதால் இதனைப்பற்றி ஒரு பதிவை தந்துவிடலாம் என்று தந்துவிட்டேன்.

நமது கனவில் வருவது எல்லாம் அனைத்தும் உண்மையாகிவிடாது. ஒரு சில நடக்கலாம். அதாவது தெய்வங்கள் காட்சி என்பது நேரிடையாக இருக்கும். அது தான் காட்சி. நாம் சும்மா நினைத்துக்கொண்டு இருப்பது எல்லாம் கனவில் வரும் அது காட்சியாக இருக்கமுடியாது. அது மனதின் ஒரு சிறு வேலை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

நான் மேல்மலையூனார், திருவக்கரை மற்றும் எங்கள் ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு போகும்பொழுது அது பகலில் காட்சி தரும் அதனை பார்ப்பதற்க்கு மட்டுமே அங்கு செல்கிறேன். என்னோடு ஒருவர் வந்திருந்தாலும் அது எனக்கு மட்டும் தெரியும் படி காட்டிக்கொடுக்கும் அதற்க்காக மட்டுமே அங்கு செல்வது உண்டு என்னோடு இருக்கும் நபருக்கு அது தெரியாது.. இந்த மாதிரி காட்சிக்கொடுத்தால் மட்டுமே அது காட்சி்.

நேரிடையாக ஒரு தெய்வத்தை மற்றும் மகானை பார்ப்பது என்பது அவன் புண்ணியம் செய்திருக்கவேண்டும். ஒவ்வொரு ஜாதகத்திலும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும்.

சித்தர்களை பார்க்கிறேன் என்று இப்பொழுது பிரபலமாக நடந்துக்கொண்டிருக்கிறது. சித்தர்களை பார்ப்பதற்க்கும் உங்களிடம் அம்மன் இருக்கவேண்டும் அல்லது ஏதாவது ஒரு தெய்வம் இருக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே எனக்கு தெரிந்தவரை அவர்களை பார்க்கமுடியும்.கனவில் காட்சி தருகிறது என்று சொல்வது எல்லாம் உங்களின் மனதின் இயல்பு அன்றி வேறு இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: