Followers

Thursday, August 29, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 13


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசா பலன்களை பார்த்துவருகிறோம். ஒருவருக்கு ராகு எப்படி அமைந்தாலும் அந்த ஜாதகர்க்கு ராகு தசா பலன்கள் எப்படி வரும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பதினெட்டு வருடத்தை மூன்றாக பிரிக்கவும். முதல் ஆறு வருடம் துக்கத்தை கொடுக்கும். அடுத்த ஆறு வருடம் நல்ல சுகத்தை தரும். கடைசி ஆறு வருடம் நாசத்தை கொடுக்கும்.

முதல் ஆறு வருடத்திற்க்கு ராகு தசா வந்தவுடன் வீட்டில் மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு துக்கத்தை கொடுக்கும். முதல் ஆறு வருடங்கள் மனதளவில் மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்துவிடும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் பெண் சகவாசம் ஏற்பட்டு அதனால் அவர்களுக்கு மனதளவில் பிரச்சினை ஏற்படும். வீட்டிலும் பிரச்சினை வெளியிலும் பிரச்சினை என்ற மாதிரி நடைபெறும்.

இளம்வயதாக இருந்தால் காதல் ஏற்பட்டு அதனால் பிரச்சினையை ஏற்படுத்துவார். வீட்டில் இந்த விசயம் தெரிந்து அவர்கள் உங்களை பாடாய் படுத்துவார்கள். வெளியி்ல் காதலன் காதலி உங்களை படுத்தி எடுப்பார்கள். பொதுவாக ராகு மனதில் தான் முதலில் வேலையை காட்டுவார்கள்.

நடுபாகமான ஆறு வருடங்களுக்கு ஒரளவு பணவரவை ஏற்படுத்திக்கொடுப்பார். ராகுவை பொருத்தவரை அவர் அனைத்தையும் மின்னல் போல் வந்து ஏற்படுத்திக்கொடுப்பார். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அப்படி தான் செய்வார்.அந்த நேரம் சுகமாக செல்லும்.

கடைசி ஆறு வருடங்கள் சர்வநாசம் செய்வார். கடைசியில் ஒரு சிலருக்கு மாரகத்தை கூட நடத்திவிடுவார். அவருக்கு மரணம் வருவது போல் ஜாதகத்தில் கிரகநிலைகள் இருந்தால் மரணத்தை ஏற்படுத்துவார். இந்த நேரத்தில் குலதெய்வ அருள் இருந்தால் உங்கள் வீட்டு செல்லபிராணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திவிடுவார். உங்களுக்காக அந்த உயிர் பறிக்கப்படும்.

ராகு முதலில் துக்கம் அடுத்து சுகம் கடைசியில் நாசம் இப்படி ஒரு மனிதனுக்கு கொடுக்கும்பொழுது என்ன செய்வான். பொதும்டா சாமி இந்த வாழ்வும் நீங்களும் எனக்கு எதுவும் வேண்டாம் என்று கடவுளை நாடி செல்ல ஆரம்பித்துவிடுவான். குரு தசாவும் வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: