Followers

Friday, August 2, 2013

சுகஸ்தானம் பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
ஒரு நபருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நான்காவது வீட்டில் வந்து நிற்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் என்ன சொல்வோம் பூமிகாரகன் நான்காவது வீட்டில் நிற்பது அதிகமான நிலத்தை பெற்று தரும் என்று சொல்லுவோம். உண்மையில் அப்படி நடந்துவிடும். ஒரு சிலருக்கு நிலவளத்தை நிறைய பெற்று தரும் அதே நேரத்தில் செவ்வாய் என்பது நெருப்பு கிரகம். நெருப்புகிரகம் அனைத்தையும் எரிக்கும் தன்மை இருப்பதால் அனைத்து நிலமும் சும்மா இருக்கும். அதாவது ஒன்றுக்கும் பயன் இல்லை என்பது போல் செய்துவிடுவார்.

நிலம் போனால் போகட்டும் வீட்டில் இருப்பவர்களாவது நன்றாக இருப்பார்களா என்று பார்த்தால் ஒருத்தன் கூட தேறமாட்டான். வீடு சுடுகாடு போல் அமைதியாக இருக்கும். வீட்டில் ஏசி போட்டு அமர்ந்தாலும் அவனுக்குள் மனது கனல்போல் எரிந்துக்கொண்டு இருக்கும். தன்னிடம் உள்ளவர்களை பறிக்கொடுத்துவிடுவார்கள். ஏன் இந்த வாழ்வை நமக்கு கடவுள் கொடுத்தான் என்று உள்மனது கேட்க ஆரம்பித்துவிடும். உள்மனது கேட்டால் என்ன நடக்கும் ஆன்மீக தேடல் நடைபெறும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நல்ல தூக்கம் எப்பொழுது வரும் அவனின் சொந்த வீட்டில் படுத்து தூங்கும்பொழுது வருகின்ற தூக்கம் மட்டுமே மிகச்சிறந்த தூக்கமாக இருக்கமுடியும். ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மட்டும் இல்லை என்றால் அவனின் வாழ்க்கை மிகப்பெரிய துக்கமாக மாறிவிடும் என்பது மட்டும் உண்மையான ஒரு செயல். 

ஒவ்வொரு மனிதனும் தூங்கி விழிக்கும்பொழுது ஒரு புதிய பிறப்பாக மட்டுமே தோன்றுகிறான். ஒவ்வொரு மனிதனும் தூங்கும்பொழுது அவன் இறப்பது போல் தான். தூக்கத்தில் பல கனவுகள் எல்லாம் வரும் அந்த கனவுகள் எல்லாம் உங்களுக்கு தெரிகிறதோ அல்லது தெரியாமலேயே பல நிகழ்வுகள் நீங்கள் உணருவீர்கள் அந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மையான ஒன்று மட்டுமே. அந்த நிகழ்வுகள் அனைத்தும் முன்ஜென்ம வாசனையோடு சம்பந்தப்பட்டது. 

அந்த தூக்கத்தில் இருந்து பல முன்ஜென்மங்களை அறியமுடியும். தூக்கம் என்பது இறத்தலுக்கு சமமான ஒன்று. நமக்கு தூக்கம் மட்டும் ஒழுங்காக வரவில்லை என்றால் அவன் புதிய பிறப்பை ஒழுங்காக எடுப்பதில்லை. இந்த வரிகள் ஆன்மீகத்தோடு உள்ளவர்களுக்கு புரியும். அதாவது அவன் பிறந்த பிறப்பு முழுமையான ஒரு பிறப்பு இல்லை என்றே அர்த்தம். நாம் தூங்கும் வீட்டைப்பற்றி சொல்ல எங்கையோ சென்றுவிட்டேன்.

சரி மேட்டருக்கு வந்துவிடுவோம். நல்ல தூக்கத்தை தரும் வீட்டில் இருந்தால் நாம் நன்றாக இருக்கலாம்.வீட்டை மாற்றலாமா? நான் சொன்னது நீங்கள் குடியிருக்கும் வீட்டை மட்டும் அல்ல. உங்களின் ஆத்மாவில் குடியிருக்கும் அத்தனை கர்மாவையும் மாற்ற வேண்டும்.

செவ்வாய் நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டால் மனது அனலாக மாறிவிடும் என்பது மட்டும் உண்மை இதனை அனுபவிக்கிறவர்களுக்கு புரியும். ஏன் என்றால் வாழ்க்கையில் அனல்புயல் அடிக்கும் மேட்டர்கள் எல்லாம் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கும். இதனை நான்காவது வீட்டில் செவ்வாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். இதுவரை உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களின் உள்மனதை கேட்டு பாருங்கள்.

தொடர்ந்து பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: