Followers

Sunday, August 4, 2013

சுகஸ்தானம் பகுதி 4


வணக்கம் நண்பர்களே !
                    சுகஸ்தானத்தைப்பற்றி பார்த்து வந்தோம் அல்லவா. அதன் தொடர்ச்சியாக இதனைப்பற்றி பார்க்க்லாம். சுகஸ்தானத்தைப்பற்றி பார்க்கும்பொழுது இதில் கெடுதல் கிரகம் நிற்க்கும்பொழுது பல கெடுதல்கள் வரும் என்று சொல்லிருந்தேன். மேலும் பல தகவல்களை பார்க்கலாம்.

பெண்களுக்கு இந்த வீடு முக்கியமான ஒன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்த வீடு கெடும்பொழுது பெண்களின் கற்பு என்பது திருமணத்திற்க்கு முன்பே பறிபோய்விடும். நீங்கள் உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு தங்களின் மனைவி எப்படிபட்டவள் என்று ஆராய்ந்துக்கொண்டு இருக்காதீர்கள். அதற்கு ஏகாப்பட்ட விதி இருக்கிறது.

ஒரு பெண்ணுக்கு இந்த வீட்டின் தசா நடைபெற்றால் அதாவது இளமையில் நடைபெறும்பொழுது உஷாராக இருக்கவேண்டும். சுகத்தை அனுபவித்து பார்க்கலாம் என்று மனது நினைக்க தோன்றும். ஒருவருக்கு இளமையில் இந்த தசா நடைபெறுவது நல்லது. பெண்களுக்கு நடைபெறும்பொழுது மட்டும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

தசாநாதன் நன்றாக இருந்து நடைபெறும்பொழுது ஒன்றும் பிரச்சினை இல்லை. தசாநாதன் கெடும்பொழுது பிரச்சினையை கொடுத்துவிடுவான். இந்த வீட்டில் செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்கள் அமர்ந்தால் அவர்கள் காமத்திற்க்காக பிறந்தவர்கள் என்று சொல்லலாம். அதிகமான காம உணர்ச்சியால் அவர்களின் வாழ்க்கை சீரழியும்.

இந்த வீடு கெடும்பொழுது இதய கோளாறு வருவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மூச்சுகோளாறு வரும். மார்பை காட்டும் பகுதியாக இருப்பதால் மார்பக புற்றுநோய் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



விரைவில் ஆத்மா...

1 comment:

vibration said...

அய்யா ,

பஞ்ச புத ஆளுமை நேரம் பற்றி விரிவாக சொல்லவும்