Followers

Thursday, August 15, 2013

குலதெய்வத்தின் அருள்


வணக்கம் நண்பர்களே !
                                                அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

குலதெய்வத்தை பற்றி நிறைய பதிவுகள் போடுவதற்க்கு காரணம் உங்களின் முதல் தெய்வம் அது என்பதால் அதனைப்பற்றி எழுதுகிறேன். நான் பல பேர்களிடம் உங்களின் குலதெய்வத்தை எடுங்கள் என்று சொல்லுவது உண்டு. அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்களுக்கு குலதெய்வத்தை எடுங்கள் என்று சொல்லுவேன். இப்படி என்னிடம் நிறைய பேர்கள் கண்டிப்பாக எடுக்கிறேன் என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்களால் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லமுடியாது.

ஏன் அவர்களால் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது என்றால் அவர்களின் பூர்வபுண்ணியம் கெட்டு இருக்கிறது என்று அர்த்தம். அடுத்தபடியாக அவர்களின் குலதெய்வத்தை யாரோ ஒரு நபர் தாந்தீரீக மந்திரங்கள் கொண்டு எடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம். நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்க்கு தடையாக உங்களின் மனதை திருப்பிவிடுகிறார்கள். உங்களால் எவ்வளவோ முயற்சித்தும் உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

குலதெய்வத்தின் அருள் இல்லாமல் இருப்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவலத்தை சந்திக்க வேண்டிருக்கிறது. இதனை நான் புரிந்துக்கொண்டிருப்பதால் உங்களுக்கு முதலாவதாக இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.

பல குடும்பங்கள் அழிந்து போனதற்க்கு குலதெய்வத்தின் அருள் இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கின்றது. உங்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் மட்டுமே தினமும் ஒரு பதிவாவது குலதெய்வத்தை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு எழுதுகிறேன்.

உங்களால் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்ல தடைகள் ஏற்படுகின்றன என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.இந்த உதவிக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்குவதில்லை என்பதை தெரிவி்த்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.