Followers

Monday, August 5, 2013

நல்ல நேரம் ஆரம்பம்


வணக்கம் நண்பர்களே !
                    ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகத்திற்க்கு வரவேண்டிய கட்டாயம் ஒரு நாள் ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே இது நடைபெற்று இருக்கும் அல்லது வரும் காலத்தில் ஏற்படும்.

ஆன்மீக வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பார்கள். அந்த வழிகாட்டுதலை தரவேண்டும் என்பதால் சிறிய முயற்சி தான் காயத்ரி மந்திரபயிற்சியை நமது ஜாதககதம்பம் வழியாக உங்களுக்கு தருகிறேன். எனக்கு ஆன்மீகபயிற்சி எடுக்கவேண்டிய காலகட்டத்தில் ஒரு தெய்வத்தின் காயத்ரி மந்திரத்தை எனக்கு குரு உபதேசம் செய்தார்.

நான் சென்ற வழியில் உள்ள அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருகிறேன். இது எல்லாம் ஆத்மாவிற்க்கு மட்டுமே பயிற்சி. இந்த மந்திரங்கள் எல்லாம் நான் கண்டுபிடித்துக்கொடுத்ததோ அல்லது இந்த காலத்தில் உள்ளவர்களோ கண்டுபிடித்ததோ கிடையாது அனைத்தும் பல ஆண்டுகளாக அதாவது நமது மதம் உள்ள நாட்களில் இருந்தே இருந்து வருகிறது.

அனைத்து ஆன்மீகவாதிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மந்திரத்தை எடுத்து நீங்கள் செய்து வருகிறீர்கள் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.எத்தனையோ மகான்கள் இதனை பின்பற்றி அவர்கள் நல்ல ஆன்மீகநிலையை அடைந்து இருக்கிறார்கள். ஒரு இல்லறத்தில் இருப்பவன் கூட ஆன்மீகவாழ்க்கையில் நல்ல நிலையை அடைய உள்ள ஒரு மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

நமது ஜாதககதம்பம் வழியாக காயத்ரி மந்திரத்தை பல நண்பர்கள் இதுவரை செய்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல நிலைமையை அடைந்திருக்கிறார்கள். நீங்களும் ஒரு ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. உடனே தயாராகுங்கள்.

9-08-2013 வெள்ளிக்கிழமையில் இருந்து காயத்ரி மந்திரப்பயிற்சியை தொடங்கலாம். நீங்கள் மந்திரங்களை எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். எப்படி செய்வது என்பதற்க்கான வழிமுறையை நான் சொல்லிக்கொடுக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: