Followers

Wednesday, August 28, 2013

நம்பினால் நம்புங்கள்: விளக்கம்


வணக்கம் நண்பர்களே! 
                    நம்பினால் நம்புங்கள் படித்துவிட்டு பல பேர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள். பல பேருக்கு மனதில் நினைத்துக்கொண்டு இருக்கலாம். கேட்பதற்க்கு தயக்கம் இருக்கலாம். அதனால் ஒரு பதிவை தந்து அதில் விளக்கிவிடலாம்.

நான் அலுவலகம் கூட போடாமல் சோதிடதொழில் செய்துவருகிறேன். என்னை தேடி பல பேர்கள் வருகிறார்கள் என்றால் என்னை தேடி வருபவர்களுக்கு சரியாக செய்துக்கொடுக்கிறேன் என்று அர்த்தம். நம்மிடம் விசயம் இருக்கும்பொழுது நம்மை தேடி வருவார்கள். இந்த பதிவை கூட குருநாதர் எழுதவேண்டாம் என்று சொன்னார். ஆனால் நம்மோடு போய்விடகூடாது இது பல பேர்க்கு போய் சேரவேண்டும் என்ற காரணத்தால் இதனை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.எனக்கும் பலபேர்களின் அறிமுகம் கி்டைக்கிறது.

தேர்தலில் நின்ற வரைப்பற்றி பார்த்தோம் அல்லவா. சுக்கிரனின் வீட்டில செவ்வாய் சந்திரன் நிற்கிறது என்று சொல்லிருந்தேன். லக்கினத்திற்க்கு பதினோராவது வீட்டில் செவ்வாய் நிற்பது ஒரு கூட்டத்திற்க்கு தலைவனாவான் என்று காட்டுகிறது. 

எதிரியின் எதிரி என்ன இருக்கமுடியும் என்று பார்ப்பதும் ஆறாவது வீட்டிற்க்கு ஆறாவது வீடு. லக்கினத்திற்க்கு பதினோராவது வீடு சுக்கிரன் வீடு என்று சொன்னேன். சுக்கிரன் வீடு வந்தவுடன் அது பெண் என்று கண்டுபிடித்தாகிவிட்டது. அந்த வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் செவ்வாய் + சந்திரன். ஒரு பெண்ணை கொண்டு அவனை அடிக்கமுடியும். பெண்ணை வைத்து எப்படி அடிப்பது. இந்த இடத்தில் தான் அனைவரும் குழம்பி போய் இருந்தார்கள். செவ்வாய் சந்திரன் எதனை காட்டுகிறது என்றால் பெண்களின் மாதவிலக்கை காட்டுகிறது. ஒரு மாதவிலக்கை அடைந்த பெண்ணை வைத்து காரியத்தை முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டேன். 

சரியாக தேர்தலுக்கு முதல் நாள் எதிராளி பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுவாக பிரச்சாரம் தொடங்குவதற்க்கு முன்பு கோவிலுக்கு சென்று தான் பிரசாரத்தை தொடங்குவார்கள். கோவிலுக்கும் சென்றார். பிரசாரத்தை தொடங்கினார்கள். ஒரு மாதவிலக்கு அடைந்த பெண்ணை விட்டு அவர்களின் கூட்டத்தில் இந்த பெண்ணும் நோட்டீஸ் கொடுத்தார். ஒரு அரை மணி நேரம் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். 

அது தான் அவருக்கு தோல்வி என்பது நூறு சதவீதம் உண்மையானது. மாதவிலக்கு அடைந்த பெண்ணால் மட்டும் இது நடைபெறவில்லை. அதற்கு முன்பு என்னிடம் வந்தவருக்கு பூஜை செய்ததாலும் அது நடந்தது. மாதவிலக்கை அடைந்த பெண் அவரோடு இருநததால் அவருக்கு அபகடம் ஆகிவிட்டது. எதிரிக்கு எதிரி என்ன என்று சரியாக பார்த்து அடிப்பது இது தான். 

எல்லாவற்றிக்கும் இதனை செய்யமுடியாது. இவரின் ஜாதகத்தை கொண்டு அதனை செய்வதற்க்கு இப்படி செய்தேன். அந்த ஜாதகத்தில் இப்படி இருந்ததால் செய்தேன். நான் சொல்லிவிட்டேன் என்று நீ்ங்கள் பிறர்க்கு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

எந்த ஒரு காரியத்திற்க்கும் நாம் கொடுக்கும் ஆலோசனை மிக முக்கியமான ஒன்று. மிகப்பெரிய அளவில் புத்திசாலிதனம் வேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: