Followers

Sunday, August 25, 2013

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் பதிவுகளில் எழுதிய விசயங்களை படித்துவிட்டு என்னை தொடர்புக்கொண்டு எனக்கு இதனை எல்லாம் சொல்லித்தாருங்கள் என்று கேட்கிறார்கள். நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். மாதம் ஒரு பதிவு இதனைப்பற்றி எழுதினால் மட்டுமே நிறுத்துகிறார்கள். 

உங்களுக்கு ஒரு குருநாதரை அமைத்துக்கொண்டு அவர் சொல்லுவது படி நடக்கவேண்டும். அவர் என்ன சொல்லுகிறாரோ அதன் படி தான் நீங்கள் செய்ய வேண்டும். என்னிடம் கேட்டு ஒன்றும் நடைபெறாது. வழிமுறைகள் வி்த்தியாசப்படும். 

பல பேர் ஒரு குருநாதரிடம் மந்திரத்தை வாங்கிக்கொண்டுவிட்டு என்னை தொடர்புக்கொண்டு எப்படி செய்வது என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு குருநாதர்கள் கொடுக்கும் மந்திரங்களுக்கும் செய்யும்முறை வேறுபடும். அவர்கள் சொல்லுவதுபோல் செய்தால் உங்களுக்கு பயன்பெறமுடியும். 

ஒருவருக்கு ஒன்றை கொடுக்கவேண்டும் என்றால் எங்களோடு பூர்வபுண்ணியத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமே எங்களை நாடி கற்றுக்கொள்ளமுடியும். அவர்களுக்கு மட்டுமே அது போகும் வேறு யாருக்கும் போகாது.

உங்களின் நேரத்தை வீண் செய்யகூடாது என்பதால் மட்டுமே இதனை சொல்லுகிறேன்.  காயத்ரி மந்திரம் மட்டும் இப்பொழுது சொல்லி தருகிறேன். வேற எந்த பயிற்சியும் நடத்தப்படவில்லை.

ஒன்று காலை சென்னையில் இருந்து ஒரு நபர் பங்குசந்தை சோதிடம் நடத்துங்கள் என்று கேட்டார். நான் பொதுவாக எந்த செயல் செய்தாலும் அம்மன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அதனை செய்வேன். அம்மன் அனுமதி தரவில்லை. ஏன் என்று கேட்டால் எதிர்காலத்தில் பிரச்சினையை சந்திப்பாய் என்று சொல்லுவதால் அதனைப்பற்றி வெளியில் பேசுவது கூட கிடையாது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: