Followers

Wednesday, August 21, 2013

ராகுவின் பிடியில் மக்கள்


வணக்கம் நண்பர்களே !
                    ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் பலம் பெறுகிறது. அப்பொழுது எந்த கிரகம் பலம் பெறுகிறதோ அதற்கு தகுந்தார்போல் அந்த நாட்டில் நடைபெறும் அனைத்து செயல்களும் அதுபோலவே நடைபெறும்.

ராகு தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். ராகு தசாவில் பார்த்தீர்கள் என்றால் ஒருவன் குடிப்பதற்க்கும் அடிமையாக மாறுகின்றான். ராகுவை பொருத்தவரை மதுவின் மீது அதிக ஈர்ப்பை தருவான். இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பலபேர்கள் குடிக்கு அடிமையாகின்றார்கள்.

சிறுவயதிலேயே குடிப்பதற்க்கு சென்றுவிடுகிறார்கள். இது கிராமங்களிலும் இதே நிலை தான் நடைபெறுகின்றது. ஒரு சில காலங்களில் பஞ்சாயத்து தேர்தலில் மட்டும் பசங்க எல்லாம் பளபள என்று முகத்தோடு இருப்பார்கள். ஏன் என்றால் அந்த நேரத்தில் மட்டும் குடிப்பதற்க்கு அவர்களுக்கு மது கிடைக்கும். இன்று ஊரில் பார்த்தால் அனைத்து முகங்களும் பள பள என்று வீங்கி இருக்கிறது. பல பேர் நாற்பது வயதை தாண்டுவதில்லை.

தமிழ்நாட்டு அரசு மதுவை வைத்து வருமானத்தை பார்க்கிறது. அரசை நடத்த பணம் தேவைப்படுவதால் மதுவை விற்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் அனைவரையும் போட்டு புதைத்துவிட்டு நலத்திட்டங்களை போட்டாலும் போடலாம். ஏன் என்றால் அனைவரும் பாதி வயதிலேயே போய்விடுவார்கள் அல்லவா. அனைவரும் போனபிறகு யாருக்கு நலத்திட்டத்தை போடுவது.

இப்பொழுது ராகு தான் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் இல்லை. அனைத்து மக்களும் ராகுவின் பிடியில் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். இனி எல்லாம் ராகுவின் காலம் தான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

venkatesh said...

//அனைத்து மக்களும் ராகுவின் பிடியில் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். இனி எல்லாம் ராகுவின் காலம் தான்.//

ராகு பகவான் குரு இல்லாமல் வேதம் கற்றவர் தானே,அதான் தற்போது பல மனிதர்கள் குரு இல்லாமல் internetஇல் அனைத்தையும் கற்கின்றனர்.

rajeshsubbu said...

நல்ல விசயங்களை கற்றால் நல்லது. தங்களின் கருத்திற்க்கு நன்றி