Followers

Thursday, August 1, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனுக்கு ஆடிமாத பூஜைக்கு என்று பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளார்கள். இந்த மாத பூஜை அடுத்தவாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளேன். தேதியை வரும் நாளில் தெரியப்படுத்துகிறேன்.

கடந்த மாதம் செய்த பூஜையால் நல்ல பலனை அனைவரும் பெற்றனர். அம்மனின் சக்தியை எடுத்துக்கொடுக்கும் பொழுது பல பேர் நன்றாக இருப்பார்கள் என்று நினைத்து இந்த பூஜை செய்ய ஆரம்பித்தேன். என்னிடம் பேசும் நண்பர்கள் இந்த மாதிரி விசயங்களை எங்களுக்கு எல்லாம் சொல்லி தெரிவிப்பதே மிகப்பெரிய செயல் என்று சொன்னார்கள். உண்மையில் அம்மன் தன்னை வெளிப்படுத்தி உங்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கொடுக்க நினைக்கிறது அதற்கு ஒரு கருவி தான் நான் வேறு எதுவும் என்னிடம் இல்லை. 

நான் இல்லை என்றாலும் வேறு ஒரு ஆளை வைத்து அது வெளிப்படுத்திக்கொள்ளும். ஏன் என்றால் அப்பேர்பட்ட சக்தி அல்லவா. அம்மன் இருக்கின்றவரை இந்த ஜாதக கதம்பத்திற்க்கு வரும் நபர்களுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லலாம்.

உங்களின் வேண்டுதலை வைத்துவிடுங்கள் அம்மன் நடத்திக்கொடுத்துவிடும். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு செய்து கொடுக்கும். அம்மன் செய்துக்கொடுக்கிறது அதற்கு நாம் எதுவும் செய்யவேண்டும் என்று நினைக்கவேண்டாம். நம்மிடம் இருக்கும்பொழுது செய்துக்கொள்ளலாம். 

அம்மனுக்கு பூஜை என்று சொன்னவுடன் அது எங்கு இருக்கிறது என்று பலபேர் என்னிடம் கேட்கிறார்கள் அதாவது எங்கு கோவில் உள்ளது என்று கேட்கிறார்கள். மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரியா என்று கேட்கிறார்கள். நமது அம்மன் எனது ஊரில் கோவில் கொண்டுள்ளது. எனது சொந்த ஊரில் இருக்கிறது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: