Followers

Tuesday, August 27, 2013

ஆன்மீகத்தின் வில்லன்


வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீகத்திற்க்கு செவ்வாய் எதிரி என்பதைப்பற்றி பார்க்கலாம். செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் கெடுதல் கிரகத்தோடு சேர்ந்தோ அல்லது சொந்த வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கோபம் கடுமையாக வரும். அந்த நபர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்க்கு அதுவே தடையாக இருக்கும்.உச்ச வீட்டில் இருந்தால் ஒரு சில பேர்க்கு கோபம் இல்லாமல் இருக்கிறது இதனை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

கோபத்தை நாம் வெல்லும்பொழுது மட்டுமே ஆன்மீகத்திற்க்குள் உள்ளே செல்லமுடியும்.கோபம் என்பது ஒரு சக்தி தான் வருகின்ற கோபத்தை மாற்ற தெரிந்திருந்தால் மட்டுமே ஆன்மீகம் சாத்தியப்படும். செவ்வாய் கெட்டுருந்தால் அவ்வளவு தான் அவர்கள் பாறாங்கல்லை தூக்கி முழிங்கியது போல் இருப்பார்கள்.

பல வில்லங்களுக்கு செவ்வாய் தான் காரணம் வகிக்கிறது. கோபக்காரர்களுக்கு காமத்தின் சக்தியும் அதிகமாக இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷத்தோடு சேர்ப்பது இந்த காரணம் மட்டுமே. உங்களுக்கு செவ்வாய் சரியில்லை என்றால் நீங்கள் ஆன்மீகம் பக்கம் போகமுடியாது. ஆன்மீகம் உங்களுக்கு சரிபட்டுவராது.

தமிழர்களின் வீரம் ஒரு நேரத்தில் உலகம் முழுவதும் தெரியும். அதற்கு காரணம் தமிழ்கடவுள் என்று போற்றப்படும் முருகன். போர்கிரகத்தை இவர்கள் வணங்கியதால் இவர்களும் போர் செய்வதில் வல்லவர்களாக இருந்தார்கள்.

இன்று தமிழன் எல்லாம் சாத்வீகத்திற்க்கு மாறிவிட்டார்கள். இவர்கள் கும்பிடுவது எல்லாம் மகான்கள் ஞானிகள் என்று போய்விட்டார்கள். ஒரு நேரத்தில் முருகனுக்கு மட்டும் மாலை போட்டு சென்று வந்தார்கள் இன்று ஐயப்பனை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களின் வீரமும் கேள்விகுறியாகிவிட்டது. சண்டை போடுகிறவனை கும்பிட்டால் தான் சண்டை போடலாம். மகான்களை கும்பிட்டால் எங்கு போய் சண்டை போடுவது. 

சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். செவ்வாய் என்பது போர்கிரகம். உங்களின் ஜாதகத்தி்ல தீமையை தரும் என்று நினைத்தால் அதனை வெல்ல என்ன வழி என்று பார்த்துவிட்டு ஆன்மீகத்திற்க்கு செல்லுங்கள். அதனை செய்யாமல் சென்றால் பிரச்சினை தான்.தியானம் யோகா எல்லாம் சண்டை போடுகிறவன் செய்யமுடியுமா? செவ்வாய் என்றால் சுறுசுறுப்பாக இருப்பான் அவனை ஒரு இடத்தில் உட்காரவைக்கமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: