Followers

Thursday, August 1, 2013

தந்தையால் கெட்ட வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே !
                    இன்று ஒரு ஜாதகத்தை எனது நண்பர் அனுப்பி இருந்தார். சில ஜாதங்களை உங்களுக்கு தரமுடியாத சூழ்நிலை காரணமாக பதிவில் தரமுடியாவில்லை. ஒரு சில கிரகங்களை மட்டும் உங்களிடம் சொல்லுகிறேன். 

நண்பர் அனுப்பிய ஜாதகத்தில் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர வீடாக சிம்மம் வருகிறது. சிம்ம அதிபதியான சூரியன் விருச்சிகத்தில் சனி மற்றும் மாந்தியோடு சேர்ந்து அமர்ந்து இருக்கிறது. சூரியனுக்கும் சனிக்கும் சொல்லவே வேண்டியதில்லை அதோடு மாந்தியும் சேர்ந்துவிட்டார். எல்லோரும் எங்கு அமர்ந்திருக்கிறார்கள் என்றால் செவ்வாயோட வீடான விருச்சிகத்தில் இருக்கிறார். 

கணவன் மனைவிக்குள் பிரச்சினை அந்த பிரச்சினையை அதிகமாக கிளப்புகிறவர் யார் என்றால் பெண்ணின் தகப்பனார். நீங்கள் நினைக்கலாம் ஒவ்வொரு அப்பனும் தன் மகளை நன்றாக வாழவேண்டும் என்று தான் நினைப்பார்கள் ஆனால் இந்த தகப்பன் தன் மகளை மருமகனோடு வாழவிடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு பிரச்சினையை கிளப்புகிறார். பெண்ணை பெற்றவர் இப்படி இருப்பார்களா என்று கேட்க தோன்றும். இருக்கிறார்கள் என்ன சொல்வது எல்லாம் கிரகம் செய்யும் லீலை.

இந்த ஜாதகத்தில் சூரியன் தகப்பனுக்கும் மற்றும் களத்திரகாரனவும் வருகிறார் இருவரையும் கெடுப்பது சனியும் மாந்தியும். சோதிடம் படிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு தெரியும் சனி மற்றும் மாந்தியும் செய்கின்ற வேலை நாம உஷாராக இருக்கவேண்டும் என்று தெரியும். சோதிடம் தெரியாதவர்களாக இருக்கின்றவர்களுக்கு என்ன தெரியும் அட சமுதாயத்தை பற்றியாவது தெரியவேண்டாமா இப்படி இருக்கின்றார் அந்த பெண்ணின் அப்பன்.

பெண்ணின் அப்பன் பிரச்சினையை கிளப்பி இருவரையும் காவல்நிலையத்தில் நிற்கவைத்துவிட்டார். என்ன செய்யமுடியும் அந்த பெண்ணிற்க்கு தலைவிதி அப்பனால் கெடவேண்டும் என்றால் என்ன செய்வது. அந்த பெண் ஒழுங்காக அந்த பையனோடு செல்லாமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன் பிறகு ஜாதகத்தை பார்த்தால் தெரிகிறது வில்லங்கம். அந்த பெண்ணிற்க்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லை. சதயநட்சத்திரம் சுயஅறிவும் இருக்காது சொல்அறிவும் இருக்காது. 

நம்மை நாடி வந்தது பையனின் தரப்பு. பையனோடு ராசி மேஷம். சும்மா டக்கென்று பத்திக்கும். இப்பொழுது பார்த்தால் சனி வக்கிரநிவர்த்தியாகி இருக்கிறார். போட்டு தாக்கு தாக்கு என்று தாக்குகிறார். அதில் மேஷ ராசிக்கு ஒரு கெட்டகாலம் என்றே சொல்லலாம். ஏழில் அமர்ந்து பிரச்சினையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.

நம்மிடம் வந்ததால் ஒரு பரிகாரத்தை செய்ய சொல்லி இருக்கிறேன். இன்று காலையில் இந்த இரு ஜாதகமும் வந்திருக்கிறது. அந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் அம்மனை அனுப்பவேண்டியது தான்.உங்களுக்கு பயனாக இருக்கும் என்று இதனை வெளியிடுகிறேன். சுட சுட இனி சோதிட அனுபவங்கள் உங்களை தேடி வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: