Followers

Thursday, August 22, 2013

தனி வழி


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வத்தை எடுப்பதற்க்கு என்று ஒரு பதிவில் சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு ஒரு சிலர் மட்டும் தொட்ர்புக்கொண்டார்கள். அவர்களுக்கு உதவி இருக்கிறேன். நான் நினைத்தது நிறைய பேர் வருவார்கள் என்று இருந்தேன். குறைந்த நபர்கள் மட்டுமே வந்தார்கள்.

அனைவருக்கும் குலதெய்வத்தின் அருள் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் அல்லது இதனை எல்லாம் யார் போய் செய்துக்கொண்டு இருப்பது என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு என்னால் உதவ மட்டுமே முடியும். நான் அனைவருக்கும் அவர்களோடு கோவிலுக்கு சென்று வருவது எல்லாம் கிடையாது.

எங்களை பொருத்தவரை எந்த ஒரு பூஜையும் செய்வது கிடையாது. இருந்த இடத்தில் இருந்து அனைத்தும் நடைபெறும். குருவின் பலம் அப்படிபட்டது. நீங்கள் குலதெய்வத்தில் போய் மண் எடுத்துக்கொண்டு வாருங்கள் உங்களுக்கு 48 நாட்கள் பூஜை செய்துக்கொடுக்கிறேன் என்று எல்லாம் சொல்லுவது கிடையாது. வருகிறாயா உனக்கு நடக்கும் அவ்வளவு தான். 

குருவை பார்க்கும் நபர்களுக்கு எல்லாம் இப்படி தான் சொல்லுவார் சரி போ நடக்கும் என்பார். இந்த நாளில் நடக்கும் என்று சொன்னால் சரியாக அத்தனை நாளில் நடக்கும். அது தான் மிகப்பெரிய சந்நியாசியின் சக்தி. அப்பேர்பட்ட குருவின் கீழ் இருப்பதால் உங்களுக்கு தாராளமாக நான் சொன்னால் நடக்கும்.

உங்களை வைத்து பூஜை செய்வது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் செய்யும் ஒரு வேலை. அது நடக்கலாம் நடக்காமால் போகலாம். நாங்கள் தேதியை குறிப்பிட்டு இத்தனை நாட்களில் நடக்கும் என்று சொல்லி அனுப்பி அதன்படி நடக்கவைப்போம். எங்களது வழி ஒரு வித்தியாசமான வழி. இதில் பயன்பெறுபவர்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: