Followers

Wednesday, August 21, 2013

ராசிக்கற்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் ராசிகற்களை அணியலாமா என்று கேட்கிறார்கள். ராசிகற்களை நான் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை அதற்கு காரணம் கடைகளில் விற்க்கும் ராசிகற்கள் உண்மை தன்மை சந்தேகத்தை தருவதால் நான் சொல்லுவதில்லை அதே நேரத்தில் பரிகாரத்திற்க்கு என்று அதிக பணத்தை செலவு செய்யவேண்டாம் என்பதால் இதனை பிறர்க்கு பரிந்துரை செய்வதில்லை.

ஒரு சில சோதிட அன்பர்கள் என்னிடம் கேட்பதால் அவர்களின் ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்து அவர்களுக்கு சொல்லுவது உண்டு. எப்பொழுதும் கிடையாது.ராசிக்கு என்று நீங்கள் கல் அணிவதை விட உங்களி்ன் ஜாதகத்தில் எந்த கிரகம் நன்மையளிக்கிறது என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு உகந்த கல்லை அணிவது நல்லது.

ஒரு சிலருக்கு சனி தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாதகருக்கு சனி தசா கெடுதலை தருகின்ற நிலையில் இருக்கும்பொழுது அவர் நீலக்கல்லை அணிந்தால் அவருக்கு கெடுதலை இரடிப்பு செய்வது போல் ஆகிவிடும்.

ரிஷப ராசிக்கு குருவின் தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் தசாநாதனுக்கு என்று கனகபுஷ்பராகம் கல்லை அணிந்தால் அவரை குரு ஒரு வழி செய்துவிடும். அதேபோல் மீனராசிக்கு சுக்கிரதசா நடைபெறும் பொழுது வைரத்தை அணியகூடாது மீனராசிக்கு சுக்கிரன் கெடுதலை தருவதால் அவர்கள் இதனை அணியகூடாது.

இலங்கை நாட்டில் நல்ல கல் கிடைக்கிறது என்று சொல்லுகிறார்கள். நான் அதனை பார்த்ததில்லை. அதன் உண்மை தன்மையை பற்றி உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் வாங்கி அந்த கல்லை பூஜையில் வைத்து அதன் பிறகு நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்.

உங்களின் ஜாதகத்தில் எந்த கிரகம் உங்களுக்கு நன்னை செய்கிறது என்று பார்த்து அதற்கு தகுந்தார்போல் நீங்கள் ராசிக்கற்களை அணிந்துக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: