Followers

Wednesday, August 7, 2013

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பேசும் நண்பர்கள் பரிகாரத்தைப்பற்றி கேட்கும்பொழுது சில விசயங்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதனைப்பற்றி சொல்ல வேண்டும் என்பதால் இந்தபதிவை தருகிறேன்.

பரிகாரம் என்பது ஒரு விசயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதனை செய்யும் ஆட்களைப்பொருத்து தான் பலன் கிடைக்கும். இங்கு உள்ளவர்களிடம் நீங்கள் சோதிடம் பார்க்க சென்றால் ஏதாவது தோஷம் இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள். சோதிடம் பார்க்க 100 ரூபாய் என்றால் பரிகாரம் செய்வதற்க்கு பல ஆயிரம் கிடைத்துவிடும் என்பதால் சோதிடர்களின் ஒரு வியாபாரயுத்தி மட்டுமே. 

எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டில் பரிகாரம் அந்தளவுக்கு செய்யபடவில்லை என்று தெரியவருகிறது. ஏதாவது ஒரு பூஜையை செய்து ஏமாற்றும் வேலையாக தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் ஒரு சிலர் நன்றாக செய்கிறார்கள். வேறு மாவட்டங்கள் எல்லாம் ஏமாற்றுவேலையாக தான் இருக்கிறது. 

பரிகாரத்திற்க்கு கேரளா சோதிடம் நல்ல வழி வகுக்கிறது என்றே சொல்லலாம். அவர்கள் செய்யும் பரிகாரம் நன்றாக இருக்கிறது. மாந்தியை வைத்து தான் அவர்களின் பரிகாரம் இருப்பதால் நல்ல முன்னேற்றத்தை பரிகாரம் தருகிறது. 

என்னிடம் சோதிடம் பார்க்க வருபவர்களுக்கு பரிகாரம் பரிந்துரை செய்தாலும் அதனை நான் செய்வதில்லை அவர்களுக்கு பூஜை முறைகளை சொல்லிக்கொடுத்து செய்யசொல்லுகிறேன். ஒரு சில நேரங்களில் பிரச்சினை அதிகமாக இருந்தால் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பரிகாரம் கேரளமுறையில் செய்யப்படுவது உண்டு அதற்கு என்னுடன் இருக்கும் கேரளாகாரர்களிடம் சொல்லி செய்துவிடுவேன். கேரளாகாரர்களின் பரிகார பூஜைக்கு பணம் அதிகம் செலவாகிறது.

நீங்கள் பரிகாரம் செய்வதாக இருந்தால் நல்ல கேரளாகாரர்களை அணுகி செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரச்சினை அதிகமாக இருந்தால் மட்டும் அணுகவும். சாதாரண பிரச்சினைக்களுக்கு நீங்கள் வழிபாட்டை வைத்தே பிரச்சினையை சரிசெய்துக்கொள்ளலாம். பரிகாரத்தை நோக்கி அதிகமாக செல்லாதீர்கள். வழிபாட்டை மட்டும் செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: