Followers

Monday, August 26, 2013

ராகுக்கு பரிகாரம் செய்யும்பொழுது கவனிக்கபடவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் ஒரு நண்பரோடு போனில் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ராகுவைப்பற்றி பேசும்பொழுது பதிவில் ஒரு சில கருத்துக்களை நாம் சொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது ஞாபகத்திற்க்கு வந்தது அதனை சொல்லிவிடவேண்டும் என்பதால் இந்த பதிவை தருகிறேன்.

ராகுக்கு பல பரிகாரம் பரிந்துரைக்கப்படுகிறது. திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி போன்ற கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு போய் பரிகார பூஜையும் செய்கிறார்கள். பூஜை செய்வது தவறு இல்லை. ராகுக்கு என்று பரிகாரம் செய்தால் பிராமணர்களை கொண்டு அந்த பூஜை செய்யப்படகூடாது. பிராமணர்கள் பூஜை செய்தால் ராகுவை திருப்திபடுத்தமுடியாது என்பதால் இதனை சொல்லுகிறேன். 

ராகு என்பது பிராமணர்கள் இல்லாதவர்களை குறிப்பிடும் ஒரு கிரகம். ராகுக்கு போய் பிராமணர்களை வைத்து செய்தால்  எப்படி அது ஏற்றக்கொள்ளாது. நீங்களாகவே செய்ய பாருங்கள். சம்பந்தப்பட்ட நபரே அவரின் கைகளால் செய்தால் மிகவும் நல்லது. சம்பந்தப்பட்ட நபர் இல்லை என்றால் அவர்களின் உறவினர்களை வைத்து செய்துக்கொள்ளலாம். 

சென்னையில் இருக்கும் கோவில்களில் ராகுவின் அம்சமான பாம்பிற்க்கு பிராமணர்கள் பூஜை செய்ய மாட்டார்கள். மக்களே அதற்கு பூஜை செய்துக்கொள்வார்கள். அதனால் நீங்களே பூஜையை செய்வது நல்லது.

பிராமணர்களுக்கு ராகு தோஷம் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீ்ர்களா இப்பொழுது அவர்களுக்கும் ஏகாப்பட்ட தோஷங்கள் வந்துவிட்டது. நீங்கள் பிராமணர்களாக இருந்தால் பிராமணர்கள் அல்லாதவர்களை வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Udhayaganesh said...

நல்ல தகவல்.

ராகு தாசா உள்ளது நபர் pojo செய்ய வேண்டும?
அல்லது 2,5,10,12 ல் ராகு உள்ள நபர் pojo செய்ய வேண்டும?

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி