Followers

Wednesday, August 21, 2013

நமது மதத்தின் பெருமை


வணக்கம் நண்பர்களே!
                     வியாபாரத்திற்க்கு என்று உதவுகிறேன் என்று சொன்னவுடன் பல நண்பர்கள் என்னிடம் கேட்டது. மிகப்பெரிய கம்பெனிகளில் இதனை செய்கிறார்களா என்று தான் கேட்டார்கள். 

இந்தியாவில் இருக்கும் அனைத்து சாமியார்களும் வெளிநாட்டில் உள்ள மிகப்பெரிய கம்பெனிகளுக்கு உதவிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை வெளியில் சொல்லுவதில்லை. நான் பதிவில் சொன்னதற்க்கு காரணம் வெறும் பதிவை மட்டும் படித்துக்கொண்டு நீங்கள் செல்வதால் ஒன்றும் உங்களுக்கு லாபம் இல்லை என்பதால் இதனை பயன்படுத்திக்கொண்டு மேலே வருவதற்க்கு ஒரு வாய்ப்பை தருகிறேன்.

நீங்கள் மகான் என்று வணங்கிக்கொண்டு இருக்கும் அனைத்து சாமியார்களும் இதனை செய்தார்கள் என்ன வெளியில் சொல்லுவதில்லை. அவர்களுக்கு பணம் வரும் வழி இந்த வழி மட்டுமே. அந்த பணத்தை அவர்கள் நல்லவழிக்கு பயன்படுத்தினார்கள். எனக்கு தெரிந்து பல பேர் இதனை செய்கிறார்கள். லட்சக்கணக்கான கோடிகளை கொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய கம்பெனியே சாமியாரை நம்பி நடந்துக்கொண்டு இருக்கிறது. 

உங்களுக்கு இதனைப்பற்றி தெரியவில்லை. நான் சாமியார்களோடு தொடர்பு வைத்திருப்பதால் எனக்கு தெரிகிறது. இந்து மதத்தில் இருக்கும் விசயங்கள் அப்படிப்பட்டவை இதனை நான் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் உணரவில்லை என்பதால் இதனைப்பற்றி தெரிவதற்க்கு வாய்ப்பில்லை.

நான் இந்த பயிற்சி செய்துக்கொண்டிருக்குமபொழுதே என்னுடைய குருநாதரை அணுகி இந்த பையனை எங்களின் கம்பெனி்க்கு மாதசம்பளத்திற்க்கு அனுப்புங்கள் என்று கேட்ட பல பேர் இருக்கிறார்கள். குரு அதற்கு சம்மதிக்கவில்லை. 

மாதசம்பளம் என்று வந்தால் ஒரு லட்சத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்று அவர்களின் கணக்கு. குரு அதற்கு சம்மதிக்காமல் அவனை எங்கும் அனுப்பமுடியாது என்று சொல்லிவி்ட்டார்.

நான் சாதாரணமாக தான் இதனை பதிவில் வெளியிட்டேன் இன்றைக்கு பல லிமிடெட் கம்பெனிகள் என்னை தேடி வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். நான் செய்வது ஐந்து சதவீதம் கூட கிடையாது அதற்கே இத்தனை பேர் வருகிறார்கள் என்றால் இந்த சக்தி அவர்களுக்கு எவ்வளவு தேவை என்பதை காட்டுகிறது.

உலகத்தில் நடக்கும் அனைத்து செயல்களும் ஆன்மீகத்தில் தான் உள்ளது. ஆன்மீகத்தால் எதனையும் செய்யமுடியும். நமது குரு சொல்லுவார் எதனையும் வெளியில் காட்டுக்கொள்ளாதே உனக்கு என்ன தேவையே அது உன்னை தேடிவரும். நீ சாதாரண ஆள்போல் இரு என்பார்.  சாதாரணமாக இருந்துக்கொண்டு அனைத்தையும் செய்யவேண்டும்.

இதனை பதிவில் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் பயன் அடைவீர்கள் என்பதால் இதனை சொன்னேன் இல்லை என்றால் வெளியில் தெரியாமல் சம்பாதிக்கு கொண்டு இருக்கலாம். நாங்கள் செய்வது எல்லாம் நமது மதத்தில் உள்ள விசயங்கள் தான் அதனை எடுத்து பயன்படுத்துகிறோம்.

இந்தியாவில் உள்ள சாமியார்களுக்கு பணம் எப்படி வருகிறது என்றால் இந்த வழியை அனைத்து சாமியார்களும் பயன்படுத்துகிறார்கள். வெளியில் சொல்வதில்லை.இது மட்டும் அவர்கள் செய்யவில்லை என்றால் பணம் மிகப்பெரிய தட்டுபாடாக அவர்களுக்கு அமைந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது.... நன்றி....

rajeshsubbu said...

வணக்கம் சார். தங்களின் வருகைக்கு நன்றி