Followers

Sunday, August 25, 2013

எச்சரிக்கை செய்தி


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்களில் வரும் செய்திகளை படித்துவிட்டு தகுந்த குரு மற்றும் ஆன்மீகஞானம் இல்லாமல் செய்ய முயலவேண்டாம். விஷப்பரிச்சையான ஒரு செயலை செய்யவேண்டாம்.

என் மீது நம்பிக்கை வைத்து இத்தனை பேர் கேட்பது எனக்கு சந்தோஷமான ஒரு விசயம். அதே நேரத்தில் உங்களின் நலனிலும் நான் அக்கறை கொண்டுள்ளதால் இதனை சொல்லுகிறேன். நாங்கள் செய்கிறோம் என்றால் எங்களின் பின்னால் பல சந்நியாசிகள் இருககின்றனர். அவர்களின் சக்தி கெடுதலை தடுத்துவிடும். நீங்கள் எடுத்து உடனே செய்கிறேன் என்று இறங்கினால் மரணம் தான் வரும். 

ஜாதகத்தை பொருத்தவரை அனைத்து கிரகங்களையும் மாற்ற முடியாது. ஒரு சில விதி அதிலும் இருக்கிறது. கோச்சார பலனை மாற்ற கற்றுக்கொண்டாலே பொதுமான ஒன்று.வழிபாட்டு முறைகளை வைத்து கிரகங்களின் பாதிப்பை குறைக்க ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள அதனை செய்தாலே போதுமான ஒன்று.

ஆத்மாவை வெளியில் எடுக்கிறேன் என்று இறங்கவேண்டாம்.ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை உணர்வதற்க்கே பல வருடங்கள் கூட ஆகலாம். அதன் பிறகு அதனை எடுத்து வெளியில் செல்வது என்பது பல வருடங்கள் செய்யகூடிய பயிற்சி. முறையான பயிற்சி இல்லாமல் செய்யகூடாது. பல வருடங்கள் பயிற்சிக்கு பிறகு இது சித்திக்கும். 

நம்பினால் நம்புகளில் நிறைய பதிவுகள் வரவுள்ளன அதனையும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்த பதிவுகளில் வருபவனவற்றை படித்து விட்டும் முயற்சியில் இறங்கவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: