Followers

Tuesday, August 20, 2013

நட்பே


வணக்கம் நண்பர்களே!
                    என்று நான் பதிவில் சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னவுடன் பல நண்பர்கள் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். இவரிடம் பணம் வந்துவிட்டது இனிமேல் பேசகூடாது என்று எண்ணியே பலபேர்கள் பேசுவதில்லை. 

பணம் இருந்தாலும் பணம் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக தான் நான் இருப்பேன். எனக்குள் எந்தவித பேதமில்லை. பிறர்க்கு என்னாலும் முடியும் என்று காட்டுவதற்க்கு மட்டுமே இப்படி செய்தேன். மற்றபடி எப்பொழுதும் இருப்பது போல் தான் இருக்கின்றேன். பணத்தை தேவைப்பட்டால் சம்பாதிக்கு கொள்ளலாம் ஒரு மனிதனை மட்டும் இழந்துவிட்டால் மறுபடியும் அந்த மனிதனை பெறுவது என்பது முடியாத காரியம்.

கடவுள் ஒவ்வொரு மனிதன் படைப்பிலும் சிறப்பாக படைக்கிறார். அவனிடம் இருக்கும் சிறப்பை வேறு எந்த மனிதனிலும் படைப்பதில்லை. இங்கே இழந்தால் அனைத்தையும் திரும்ப பெறமுடியும் ஒன்றை தவிர ஒரு மனிதனை நாம் இழந்தால் அவனை போல் ஒரு மனிதன் நமக்கு கிடைக்கமாட்டான்.

இதனை எல்லாம் நான் புரிந்துக்கொண்டிருப்பதால் மட்டுமே அனைவரிடமும் எளிதாக பழகமுடிகிறது. என்னிடம் பணம் வந்துவிட்டது என்று பல நண்பர்கள் பேச்சை நிறுத்தவேண்டாம். எப்பொழுதும் போல் பேசலாம். பணத்தை என் பணம் என்று நினைக்கவில்லை அனைத்து கம்பெனிகளும் தருகிறேன் என்று சொல்லியுள்ளார் நான் இன்னமும் வாங்கவில்லை. சாப்ட்வேர் கம்பெனியும் அப்படி தான். எப்பொழுதும் போல் தான் அனைவரிடமும் பழக்கம் இருக்கும். எப்பொழுதும் உங்களின் வீட்டில் ஒருவர் போல் நினையுங்கள்.

எளிமையாக இருப்பது மட்டுமே எனககு பிடித்தமான ஒன்று. அனைவரிடமும் நான் எந்தவித பேதம் இன்றி பழகவேண்டும் என்று நினைப்பவன். இருக்கின்றபொழுது ஒன்று இல்லாதபொழுது ஒன்று பேசமாட்டேன். அனைவரும் எப்பொழுதும் போல் பேசுங்கள்.

பணத்தை அனைவரும் சம்பாதிக்கலாம் நல்ல மனிதனை சம்பாதிக்கமுடியாது என்பதை நான் நன்றாக அறிந்துள்ளேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: