Followers

Monday, September 30, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 44


வணக்கம் நண்பர்களே !
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு தசாவில் சுக்கிரபுத்தியை பற்றி பார்த்துவந்தோம். சுக்கிரன் ஒருவருக்கு சரியில்லை என்றால் ராகு தசா சுக்கிரபுத்தி நடைபெறும்பொழுது என்ன பலன் என்று பார்த்துவிடலாம்.

முதலில் துணைவர் வழியில் பிரச்சினையை சந்திக்க நேரிடும். துணைவருக்கு ஆயுள் பங்கம் கூட ஏற்படும். பிள்ளைகளுக்கும் பிரச்சினை தான் ஏற்படும். தனவரவு அந்தளவுக்கு நன்றாக இருக்காது.

பெண்களால் பிரச்சினை ஏற்பட்டு அந்த பிரச்சினைக்கு அவமானம் ஏற்பட செய்யும். ஒரு சிலருக்கு காவல்நிலையம் கூட செல்ல வைத்துவிடும்.

பெண்களால் நோய் தொற்று ஏற்பட்டுவிடும். ஒரு சிலருக்கு எயிட்ஸ் நோய் எல்லாம் கூட இந்த காலத்தில் தான் வரும். அந்தரங்க விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சுகமான வாழ்க்கைக்கு பங்கம் ஏற்பட்டுவிடும். எதாவது ஒரு இடத்தில் படுக்க வைத்துவிடுவார். ஊர்வன இனங்கள் வாசம் புரியும் இடத்தில் தங்கவைத்துவிடுவார்.அரசாங்க வழியில் மரியாதை கிடைக்காது. அரசாஙக வழியில் பிரச்சினையை ஏற்படுத்திவிடுவார். தனவரவிலும் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

நிலங்கள் உங்களை விட்டு பறிபோகும். வீட்டு வேலை நடக்காது. கட்டிடம் கட்டும்பொழுது பாதியிலேயே நின்றுவிடும். அதனை முடிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். 

காதல் தோல்வி ஏற்பட்டுவிடும். இந்த புத்தி முழுவதும் சொல்லமுடியாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வாக்குறுதி


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு மனிதன் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்த பிறகு தான் ஆன்மீகவழியை தேர்ந்து எடுக்கிறான். பல நிலையிலும் தோல்வியை தழுவி அவன் கடைசியாக கடவுள் விட்ட வழி என்று எண்ணி ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கிறான்.

ஆன்மீகவழியும் தோல்வியை கொடுத்தால் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த ஒரே காரணத்திற்க்காக மட்டுமே நான் வரும் நபர்களுக்கு ஒழுங்காக செய்து தரவேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியும் எனது சக்தியை கொடுத்து உழைத்து அவர்களுக்கு நல்லவழியை தரவேண்டும் என்று நினைப்பேன்.

ஒரு சிலருக்கு என்னால் முடியாது என்று சொல்லிவிடுவதும் உண்டு ஏன் என்றால் அது முடியும் என்றால் எடுக்கலாம் முடியாதா காரியத்தை எடுத்து செய்தால் அதனால் நமக்கு கெட்டபெயர் தான் வரும் என்று எண்ணி விட்டுவிடுவது உண்டு.

ஆன்மீகத்திற்க்கு வந்து எந்த நிலையிலும் அவர்கள் ஏமாற்றபடகூடாது. பல வழியிலும் ஏமாற்றம் அடைந்து கடைசியில் வரும் இடமும் ஏமாற்றமாக இருந்தால் அது அவர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய பாவமாக இருக்கும்.

நீங்களும் பிறர்க்கு பரிகாரம் செய்யும்பொழுது முடியும் என்று தெரிந்தால் வாக்குறுதியை தாருங்கள் அப்படி இல்லை என்றால் வாக்குறுதியை தரவேண்டாம்.

பிரச்சினையை பார்த்துவிட்டு இது இப்படிபட்ட பிரச்சினை இது நடப்பதற்க்கு இவ்வளவு நாட்கள் ஆகும் உங்களுக்கு சம்மதம் என்றால் செய்யலாம் என்று சொல்லிவிடுவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Sunday, September 29, 2013

கூப்பிட்ட பெருமாள்


ணக்கம் ண்பர்களே !
                     நேற்று மதியம் மாத்தூரில் எனது உறவினர் வீட்டிற்க்கு சென்று இருந்தேன். எனது உறவினர் அனைவரும் வாருங்கள் இன்று பெருமாள் கோவிலுக்கு செல்லலாம் என்று என்னை அழைத்தார்கள். 

என்னடா புரட்டாசி சனிக்கிழமை அன்று நாம் பெருமாளை பற்றி நினைக்ககூட இல்லை. அவரே நம்மை இழுக்கிறார் என்று எண்ணி சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களோடு சென்றேன். அவர்கள் அனைவரும் வாருங்கள் நடந்து செல்லலாம் என்று சொன்னார்கள் சரி நடந்தே சென்றோம். 

மணலியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்று பெருமாள் இருக்கிறார். அவரை பார்க்கதான் சென்றோம். நடந்து செல்லும்பொழுது நமது அம்மன் சும்மா விடுமா முதலில் என்னை பார்த்துவிட்டு செல்லுடா என்று சொல்லாமல் எனது உறவினர் வழியாக சொல்லியது பெருமாள் கோவிலுக்கு முன்பாகவே ஒரு மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. சரி அம்மனை பார்த்துவிட்டு செல்லுவோம் என்று சென்றேன். அம்மனை பார்த்துவிட்டு அம்மனை சுற்றிவந்தால் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கின்றார். சரி சென்னையில் இங்கு தான் இவரை முதலில் பார்க்கிறோம் என்று எண்ணி அவருக்கு ஒரு நெய்தீபம் ஏற்றினேன்.

அங்கு தரிசனம் முடிந்த பிறகு நேராக பெருமாளை பார்க்க சென்றுவிட்டோம். அந்த காலத்தில் உள்ளது போல் கோவில் தெருக்கள் உள்ளன. பெருமாள் கோவில் தெரு என்று சொல்லுகிறார்கள். பெருமாளை பார்த்தேன். அப்படி ஒரு தரிசனம். எங்கேயோ இருக்கின்ற என்னை. என்னை வந்து பாருடா என்று அழைத்த அந்த கரிகிருஷண பெருமாளை பார்க்க கண்கள் கோடி வேண்டும். 

என்னிடம் தேடி வருபவர்களுக்கு சொல்லுவது எல்லாம் என்னை ஏன் தேடுகின்றீர்கள். இப்படி ஒரு தரிசனத்தை கண்களால் பார்த்தாலே போதுமே. அப்புறம் எதற்கு ஸ்பார்க். பல ஜென்மத்திற்க்கு இது போதுமே. நன்றாக தரிசனம் செய்துவிட்டு நான் திரும்பி வந்தேன்.

ஜாதககதம்பத்தில் நன்றாக படங்களை தேர்வு செய்து போடுவது கூட அந்த தரிசனத்தை பார்த்து நீங்கள் இந்த பிறவியில் புண்ணியத்தை பெறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே. உங்களுக்கு ஆன்மீகம் வரவேண்டும் என்றால் முதலில் தரிசனம் செய்வதை முதலில் கடைபிடிக்கவேண்டும். அப்படியே அவரை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் பிறகு அத்தனையும் உங்களுக்கு நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 43


ணக்கம் ண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு தசாவில் சுக்கிரபுத்தியை பார்த்தோம். 

ராகு தசாவில் சுக்கிரபுத்தி என்பது மூன்று வருட காலங்கள் நடக்கும். சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் எப்படி பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

திருமணம் நடைபெறும். தனலாபம் வரும். பெண்களின் வழியில் வருமானம் வரும். பெண்களின் வழியில்வருமானம் வரும்.தவறான உறவு மூலம் ஒரு சிலருக்கு பெண்களி்ன்  வழியில் கூட பணவரவு இருக்கும். 

புதிய வீடுகளை கட்டகூட இந்த காலத்தில் முடியும். திடிர் என பணவரவு ஏற்பட்டு புதிய வீடுகளை வாங்கும் யோகம் கூட அமையும். அனைவரும் ஆசைப்படுகின்ற மாதிரி வீடு இருக்கும்.

அனைவருக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கோவில்களில் அன்னதானத்தை நடத்துவார்கள். குரு கிரகத்திற்க்கு போட்டியாக இவரும் செய்வார். இவரின் கோவில் பூசாரிகளை கொண்டு வழிப்படும் கோவிலாக பார்த்து அன்னதானம் செய்யவைப்பார்.

அரசாங்க வழியில் நல்ல மரியாதை கிடைக்கும். ராஜாங்க சிம்மாசனம் கிடைக்கும். அரசியலில் ஏதாவது பதவி கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.

பெண்களின் வழியில் இன்பம் கிடைக்கவும் செய்வார். பல பெண்கள் உங்களை கூர்ந்து கவனிக்க வைப்பார்.  சின்ன வயதில் இந்த புத்தி நடைபெறும்பொழுது பெண்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ராகுதசாவில் சுக்கிரன் நன்றாக இருந்து புத்தி நடைபெற்றால் உங்களுக்கு வாரி வழங்குவார். மொத்தத்தில் நன்றாக இருக்கும்.

உங்களுக்காக ஒரு நல்ல விசயம் ஒரு அம்மனின் படத்தை கீழே  தந்து இருக்கின்றேன் வணங்கிவிட்டு செல்லுங்கள்.








ராஜராஜேஷ்வரி அம்மன்



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சகுனம்


ணக்கம் ண்பர்களே!
                     எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. சோதிடம் பார்க்கும்பொழுது சுற்றி என்ன நடக்கிறது. நமக்கு சகுனம் எப்படி வருகின்றது என்பதை பார்த்து பலனை சொல்லுவேன். 

சகுனம் வழியாக கடவுள் நிறைய உணர்த்துவார். அதனை நாம் பார்த்துக்கொண்டு தான் சோதிடப்பலனையும் சொல்லவேண்டும். ஒரு சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் சொல்லிவிடுவேன். அதாவது ஒரு வீட்டிற்க்கு சூரியன் காரத்துவம் வகித்தால் நான் செவ்வாய் என்று நினைத்து சொல்லுவதும் ஒரு சில நேரத்தில் நடந்து இருக்கின்றது. அதுவும் சரியாக வரும். ஏன் என்றால் உள்ளுக்குள் இருந்து இப்படி நடக்க சொல்லுகின்றது.

ஒருவர்க்கு ஜாதகம் பார்க்க அவரின் ஜாதகத்தை வாங்கி கையில் வைத்தாலே நமது உடம்பில் அது காட்டிக்கொடுத்துவிடும். அதனை வைத்தே நாம் பலன் சொல்லிவிடமுடியும். அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நமது உடம்பில் அந்த வலி ஏற்படும்.அது நல்ல வலியாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு சிலரின் ஜாதகத்தை தொடும்பொழுது கெட்டவலி ஏற்படும்.அவர்க்கு கெடுதல் தான் வரும் என்று சொல்லிவிடலாம்.

ஒரு சிலர்க்கு ஏதாவது ஒரு செயல் செய்து தரவேண்டும் என்று நினைத்து அவர்களின் வீடுகளுக்கு சென்று செய்து தருவேன். அவர்கள் எனக்கு பணம் தருவார்கள். அந்த பணம் எதற்க்காக செலவு ஆகின்றது என்பதை பார்த்தே அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கண்டுக்கொள்வேன்.

ஜாதகம் என்றவுடன் ஏதோ கணக்கு போட்டு பார்ப்பதற்க்கு என்று இல்லாமல் உணர்வு பூர்வமாக அதனை நோக்கினால் பல தெரியாத விசயங்கள் நமக்கு புலப்படும். நீங்களும் இப்படி பார்க்கவும்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

உடனே செய்ய வேண்டியவை


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீக அனுபவங்கள் மற்றும் நம்பினால் நம்புங்கள் பதிவை எல்லாம் எழுதுவது இதனை படித்துவிட்டு நீங்கள் இந்த பயிற்சியை ஒருவராவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் போன் செய்து நீங்கள் இன்னமும் பயிற்சி செய்து மேலை வாருங்கள் என்று சொல்லுகிறார்கள். நான் மேலை வருவது இருக்கட்டும் நீங்கள் நான் எப்படி இப்படி எல்லாம் செய்ய போகின்றேன் என்று எண்ண வேண்டும்.

பல நண்பர்கள் இதனை எங்களுக்கு கற்று தாருங்கள் என்று சொல்லுகிறார்கள். கற்று தரும் நிலையில் நான் இப்பொழுது இல்லை அதற்கு என்று காலம் வரும்பொழுது ஜாதககதம்பத்தில் அறிவிப்பு வரும். அந்த காலம் நீண்டநாள்களாக கூட இருக்கலாம். 

உங்களின் காலத்தை வீணடிக்காமல் உடனே ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீணாக காலத்தை தள்ளாமல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் உயரவேண்டும்.

இவ்வளவு நாட்கள் நான் எழுதிக்கொண்டு இருக்கின்றேன். ஒருவர் கூட நான் இந்தளவுக்கு செய்துக்கொண்டு உள்ளேன் என்று என்னை தொடர்புக்கொண்டு சொன்னது கிடையாது. ஆன்மீகத்தில் ஒவ்வொரு படியும் தாண்டி வந்துக்கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஒருவரும் அப்படி வரவில்லை.

என்னை தொடர்புக்கொண்டு கேட்பது மட்டுமே வேலையாக கொண்டு இருக்கிறார்கள். என்னிடம் கொடுக்ககூடிய தகுதி இருந்தால் உங்களிடம் தந்துவிடுவேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்துவிடுவேன். இப்பொழுது இருக்கும் நிலையில் வரும் நபர்க்கு பிரச்சினையை தீர்க்க வேண்டும் அது மட்டுமே என்னால் முடியும். ஆன்மீகத்தை அடுத்தவர்களுக்கு தருவதற்க்கு இன்னமும் தகுதி இல்லை.

இப்பொழுது உள்ள நிலையில் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடையவர்களுக்கு மட்டும் தரமுடியும். ஒருவர் வந்துவிட்டு சென்றுவிட்டார். வேறு யார்க்கும் தரவில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

எச்சரிக்கை : மேஷம் ,விருச்சிகம்


வணக்கம் நண்பர்களே!
                     மேஷ ராசி மற்றும் விருச்சிக ராசியை லக்கினமாக மற்றும் ராசியாக கொண்டவர்களுக்காக ஒரு எச்சரிக்கை செய்தி. பொதுவாக கோச்சார பலன்களை போட்டு யாரையும் நான் பயமுறுத்துவது கிடையாது இருந்தாலும் இவர்களுக்கு மட்டும் ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுத்துவது எனது பழக்கம். 

மேஷராசிக்கு இப்பொழுது கண்டசனி நடந்துக்கொண்டு உள்ளது. இது 2014 வரை இருந்தாலும் அதன் பிறகு வரும் அஷ்டமசனியும் மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருக்கின்றது ஆக இன்னமும் 3 1/2 வருடங்கள் 2017 வரை என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு கெடுதலான ஒரு நேரம் மட்டுமே. 

விருச்சிகத்தை ராசியாக மற்றும் லக்கினமாக கொண்டவர்களுக்கும் கெடுதல் தரும் நேரம் தான். உங்களுக்கு ஏழரைசனியின் பிடியில் தற்பொழுது இருக்கின்றீர்கள். முழுமையாக ஆறு வருடங்கள் கடக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு மேஷத்தில் மற்றும் விருச்சிகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் அவர்களும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

செவ்வாயை வீட்டை உடையவர்கள் நீங்கள் இயல்பாகவே சுறுசுறுப்பானவர்கள் அந்த சுறுசுறுப்பை முடக்குவதற்க்கு சனிபகவான் முயற்சி எடுப்பார். உங்களின் அனைத்து உரிமையிலும் கை வைத்துவிடுவார். உங்களின் பாடு பெரும்பாடாக தான் இருக்கும். உங்களிடம் சொல்லி புரியவைக்க முடியாது. கோபமும் அதிகமாக வரும். அதிவேகத்தில் நடந்துக்கொள்வீர்கள். உங்களுக்கு சொல்லி புரியவைக்கமுடியாது என்பதால் தான் சனிபகவான் உங்களை அடித்து புரியவைபபார். 

இதனை படிக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு தெரிந்திருக்கும். ஏற்கனவே அடித்திருப்பார் அல்லது அடிக்க நல்ல நாள் பார்த்துக்கொண்டுருப்பார்.எப்படியோ அடிவாங்குவது உறுதி. உங்களுக்கு எப்பேர்ப்பட்ட தசா நடந்தாலும் அதனை மீறி சனிபகவானின் திருவிளையாடல் இருக்கும்.அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருபபது நல்லது.

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் மற்றும் உங்களின் அறிவுரையை தாருங்கள் அதனை ஒரு பதிவாக போடலாம். பல பேர்களிடம் இதனை எதிர்பார்க்கிறேன். உடனே தாருங்கள். இவர்களுக்கு என்னால் முடிந்தளவு அறிவுரை மற்றும் உங்களின் அறிவுரையை கொடுக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, September 28, 2013

குலதெய்வத்தை வணங்க ஏன் நான் வலியுறுத்துகிறேன்?


வணக்கம் நண்பர்களே!
                    குலதெய்வ வழிபாட்டை நான் பலபேருக்கு வழியுறுத்தி சொல்லிவருகிறேன். இதனால் பலபேர்கள் நன்மை அடைந்துள்ளார்கள். பாதிபேர்களுக்கு மேல் குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய்விட்டது. 

குலதெய்வத்தை மறந்து போனதன் காரணம் பல இருந்தாலும் ஒரு வேளை திட்டமிட்ட ஒரு செயலாக கூட இருக்கலாம். ஏன் என்றால் இந்து மத மக்களை ஒன்றினைக்கவேண்டும் என்று எண்ணி இதனை செய்திருக்ககூடும் என்று கூட நினைத்தேன். அந்த காலத்தில் மக்களின் முக்கிய தொழில் விவசாயமாக தான் இருந்தது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து வாழ்க்கை நடத்தினார்கள் அவர்கள் சிறு தெய்வ வழிப்பாட்டை வழிப்பட்டு வந்தனர். 

பிற்காலத்தில் நாகரீக மாற்றத்தால் அவர் அவர்கள் பிரிந்துபோய்விட்டார்கள். நகர் பகுதியில் வாழஆரம்பித்தார்கள். இதில் பல மதங்கள் உள்ளே வந்ததால் இந்து மதத்தில் உள்ளவர்களை ஒன்றினணக்க ஒரு கடவுளை மையப்படுத்திவிட்டு சிறுதெய்வங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள். சிறுதெய்வங்கள் போய் ஒரு தெய்வ வழிபாடு என்பதை கொண்டுவருவதற்க்கு இதனை செய்து இருக்கலாம். 

உண்மையில் சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள தெய்வங்கள் இந்து மதத்தில் உள்ள தெய்வங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது. இருக்கின்ற அனைத்து அம்மனையும் பராச்சக்திக்கு கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். இருக்கின்ற அனைத்து ஆண் தெய்வமும் சிவனுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டார்கள். உண்மையில் இவர்களுக்கும் சிறுதெய்வத்திற்க்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது.

சிறு தெய்வ வழிப்பாடு என்பது அனைத்து மதமும் உருவாவதற்க்கு முன்பே ஒவ்வொரு மதத்திலும் உண்டு. உலகில் உள்ள அனைத்து மதத்தை தேடி பார்த்தாலும் அந்த மததில் ஒரு தீர்க்கதரிசி வருவதற்க்கு முன்பு சிறுதெய்வ வழிப்பாட்டை மேற்க்கொண்டு வந்துள்ளனர். 

காலபைரவ வழிபாடு என்பது நேபாளம் மற்றும் வடஇந்தியாவில் உள்ள ஒரு வகுப்பினரின் குலதெய்வம் தான். அதனை அப்படியே பரப்பி விட்டுவிட்டார்கள். நான் இதனை எல்லாம் சொன்னால் எனது நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு என்ன வேலையோ அதனை பார்க்காமல் நீங்கள் ஏன் தேவையில்லாமல் எதையாவது சொல்லுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

உங்களின் அப்பா உங்களின தாத்தா அவர்க்கு முன் இருந்தவர்கள் வணங்கிய உங்களின் தெய்வத்தை வணங்கசொல்லுவது எந்த வகையில் தவறாக இருக்கமுடியும்.

நாட்டில் சிறு தெய்வங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணம் தான் எதையாவது ஒரு தெய்வத்தை இங்கு கொண்டு வந்து வணங்குங்கள். இவர் அதை செய்வார் இதை செய்வார் என்று சொல்லுவது.

ஒரு சில இயக்கங்கள் இதனை பரப்ப இப்பொழுது தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. இது தவறான ஒன்று. ராஜராஜன்காலத்திற்க்கு பிறகு தான் நவக்கிரவழிபாடே தோன்றியது ஆனால் சிறு தெய்வங்கள் அப்படி இல்லை மனிதன் தோன்றிய நாளில் இருந்தே இருக்கின்றது. உங்களின் ஆதி எது என்று பார்த்து வணங்க ஆரம்பியுங்கள்.

உங்களின் ஆதியை விட்டுவிட்டு பிற தெய்வங்களை வணங்கசொல்லுவது தவறான ஒன்று. குலதெய்வத்தை வணங்கவேண்டும் என்று சொல்லுவதின் அர்த்தம் இது மடடுமே.

தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 42


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் இப்பதிவில் ராகு தசை சுக்கிரபுத்தி என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

ராகு தசாவில் அதிகமாக மனிதர்களை காதலுக்கு உட்படுத்துவார். ராகுதசாவில் வரும் காதல் நல்ல கிரகங்களின் துணையிருந்தால் அவர்களின் காதல் திருமணத்தை நடத்திக்கொடுத்துவிடும். இல்லை என்றால் அவர்களின் காதல் தோல்வியில் முடியும்.

அதிகப்பட்சமாக காதலில் வெற்றி பெறுவதற்க்கு ராகு தசாவில் சுக்கிரபுத்தி காரணமாக இருக்கின்றது இதனை நான் பல பேர்களிடம் பார்த்து இருக்கிறேன். சுக்கிரன் நன்றாக இருக்கும் நிலையில் அவர்களின் காதல் வெற்றி பெறுகிறது.

சுக்கிரன் கெடும்பொழுது அதிகபட்சமாக அந்த நபர்கள் காமத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள். சுக்கிரனின் புத்தி காலம் அதிகம் சரியாக மூன்று வருடங்கள் இந்த மூன்று வருடங்களில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்மூடித்தனமாக தன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள்.

ஆண்களாக இருந்தால் பரவாயில்லை பெண்களாக இருந்தால் அவர்களின் கதி அதோகதி தான். பல பெண்கள் தன் கையில் நல்ல சம்பளம் வருகின்றது. நான் யார் சொல்லுவதையும் கேட்கமாட்டேன். என் இஷ்டத்திற்க்கு தான் நடப்பேன் என்று ஊரை சுற்றுவது இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் ஜாதகத்தை எடுத்துபார்த்தால் அவர்களுக்கு ராகு தசாவில் சுக்கிரபுத்தி நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.

சுகமான இன்பஅனுபவங்களுக்கு காரணகர்ததாவாக இருக்கும் சுக்கிரனின் புத்தியால் பலபேர்க்கு நன்மை நடைபெற்றாலும். சீரழிவது அதிகமாக இருப்பார்கள். ஏன் என்றால் ராகு சுக்கிரனின் காம்பினேஷன் அப்படிபட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கடன்


வணக்கம் நண்பர்களே!
                    வராக்கடன் வந்துவிட்டது என்ற சொல்லுவார்கள். உண்மையில் இந்த விசயத்தில் அம்மன் அதிகம் கவனம் செலுத்தாது. ஒரு சிலருக்கு மட்டும் செய்யும். ஏன் என்றால் நீங்கள் கடனாக பிறர்க்கு பணம் கொடுத்திருப்பீர்கள். நீங்கள் அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது அம்மன் அங்கு சென்று பார்த்தால் உண்மையில் அவன் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்துவிடும்.

இந்த விசயத்தில் நாங்களே தலையிடுவதில்லை ஏன் பாவம் கஷ்டபடுகின்றவனை போய் தொந்தரவு செய்யவானே என்று விட்டுவிடுவேன். அவனுக்கு பணம் வந்தவுடன் திருப்பி தரபோகின்றான். இன்றைய காலத்தில் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்கள் எல்லாம் மானத்திற்க்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற மக்களாக தான் இருக்கின்றார்கள்.

நீங்கள் பணம் கொடுத்தால் கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவார்கள். என்ன கொஞ்சம் நாட்களாகும். அவர்களை தொந்தரவு படுத்த தேவையில்லை. பணம் வைத்துக்கொண்டு திருப்பி கொடுக்ககூடாது என்று நினைத்தால் அப்பொழுது வேண்டினால் நடக்கும். பொதுவாக நான் பணம் விசயத்தில் தலையிடகூடாது என்று நினைப்பேன். 

இதேப்போல் தான் கம்பெனி நடத்துபவர்களும் பணத்தை கொடுத்துவிட்டு மாட்டிக்கொள்வார்கள். பணம் வசூல் ஆகவில்லை என்று சொல்வார்கள அதிலும் நான் தலையிடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை இதில் எல்லாம் எனக்கு அந்தளவுக்கு மனம் நாட்டம் வராது. 

இநத் விசயத்தில் மட்டும் நான் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல பணத்தை நான் பார்க்கலாம் ஆனால் மிகப்பெரிய பாவத்தை சேர்க்க வேண்டியிருக்கும். நீங்களும் அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது அந்த வேண்டுதலை தவிர்க்கவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, September 27, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 41


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவில் கேது புத்தியைப்பற்றி பார்க்கலாம். ராகு தாசவில் கேது புத்தியின் காலம் 1 வருஷம் 18 நாட்கள் ஆகும். 

இரண்டு பேரும் அண்ணன் தம்பி போன்றவர்கள். அவர்களின் செயல்பாடு இப்பொழுது உள்ள சகோதர்களின் சண்டைபோல் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டு ஜாதகருக்கு அதிகமான கெடுதலை வாரிவழங்குவார்கள். கெடுதலை மட்டும் ஏன் தருகிறார்கள் நல்லது தரமாட்டார்களாக என்று கேட்க தோன்றும். இதோ உங்களுக்காக.

நன்மை என்று பார்த்தால் கேது நன்றாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் தனவரவு கிடைக்கும். ஏழில் இருக்கும்பொழுது திருமணமும் நடத்திக்கொடுப்பார். 

எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது திருமணத்தில் பிரச்சினையை தருவார். வாகன விபத்தையும் ஏற்படுத்தி தருவார். உங்களுக்கு வாகனங்கள் இருந்தால் அதாவது நாற்சக்கர வாகனங்களாக இருந்தால் விபத்து வரும். மனதில் சொல்லமுடியாத கவலை தோன்றும்.

உங்களின் வீட்டில் பாட்டி இருந்தால் அந்த பாட்டிக்கு கண்டம் வரும். இப்பொழுது எல்லாம் பாட்டிகளை எல்லாம் யார் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களை தனியாக வாழவைத்துவிடுகிறார்கள். சோதிடர்களின் வேலை சொல்ல வந்ததை சொல்லிவிடவேண்டும். பாட்டி இருந்தால் அவருக்கு கெடுதல் தரும் என்று சொல்லிவிடுங்கள்.

என்ன என்று தெரியவில்லை இந்த பதிவை காலையில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். கேது பகவான் கொஞ்சம் சோதனை செய்துவிட்டார். வெளியில் சென்று வந்தேன். அம்மனை நினைத்து பதிவை எழுத ஆரம்பித்தவுடன் எழுதிவிட்டேன்.

பரிகாரம்

கேது பகவானுக்கு உரிய பரிகாரத்தை செய்யுங்கள். இந்த புத்தியின் பிடியில் இருந்து காத்துக்கொள்ள விநாயகர் மற்றும் நாகதேவதைகளை வணங்கிவாருங்கள். சாமியார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே !
                    பொதுவாக ஆன்மீகத்திற்க்கு என்று வருவதற்க்கு முன்பு ஒரு சில நிகழ்வுகள் நடந்தது. அதனைப்பற்றி உங்களிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. எனக்கு கனவில் அதிகமான பறப்பது போன்று கனவு வந்தது. அந்த கனவு எனக்கு அடிக்கடி வரும். அப்படி கனவு வரும்பொழுது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். 

நான் தூங்கும்பொழுது எனது உடலை யாரோ தூக்கி போடுவது போல் இருக்கும். இதனை எனது அருகில் இருப்பவர்களும் பார்த்து இருக்கிறார்கள். நன்றாக தூங்கும்பொழுது அந்த உடல் அதுவாகவே தூக்கி போடும். நான் முழித்துக்கொள்வேன்.

இப்படி நடப்பது எல்லாம் எனக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. ஏண்டா இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்று நினைக்க தோன்றும். வறுமை வந்தால் எல்லாம் சேர்ந்து வந்துவிடும் என்று நினைத்தேன். நாட்கள் ஆக ஆக தான் இதனைப்பற்றி தெரிந்தது.

ஒருவர் கனவில் பறக்கிறது போல் கனவு கண்டால் அற்புதமான மந்திரங்களை அவர் கற்கபோகின்றார் என்று அர்த்தம். மிகச்சிறந்த யாருக்கும் கிடைக்காத மந்திரங்களை அவர் கற்கபோகின்றார் என்று தான் அர்த்தம்.

தூங்கும்பொழுது உடல் தூக்கிபோடுவது என்பது உக்கிரதெய்வங்கள் அவரிடம் வாசம் செய்யபோகின்றது என்று அர்த்தம்.உங்களுக்கும் இதுபோல் நடந்தால் நீங்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையலாம்.

இது எல்லாம் நடக்காமல் கூட ஆன்மீகத்தில் முன்னேற முடியும். எனக்கு நடந்தை சொல்லுகிறேன்.

நம்பினால் நம்புங்கள் 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக அனுபவங்கள் 117


ணக்கம் நண்பர்களே!
                     நேற்றைய ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்டார்கள். எப்படி இதனை செய்வது என்று கேட்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.

நாம் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து நமது உடலில் மற்றும் மனதில் என்ன நடக்கிறது என்று உற்று நோக்கினாலே ஒரளவுக்கு புரிந்துவிடும். தனிமையில் அமர்ந்து பரிசோதனை செய்யும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒன்று தோன்றும். அதனை வைத்து தான் அனைத்தும். உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். தனிமையில் இப்பொழுது மனித்ன் அமருவது கிடையாது. அப்படியே தனிமையில் மனிதன் அமர்ந்தாலும் அவன் பிரமன் படைக்காத உடலோடு ஒட்டிக்கொண்டு இருக்கின்ற ஒரு உறுப்போடு தான் அவன் இருக்கின்றான்(செல்போன்). பின்பு எப்படி சாத்தியப்படும்.

குருவின் வழியாக தான் அனைத்தும் நம்மால் பயிலமுடியும். குரு இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஒரு குருவை நாடி கற்றுக்கொள்ளுங்கள். என்னை பொறுத்தவரை எனக்கு சாமியார்கள் நண்பர்கள் தான் அதிகம். தினமும் ஒரு சாமியாராவது என்னை பார்த்துவிடுவார் அல்லது அவர்களை தேடி நான் சென்று பார்த்துவிடுவேன்.

உங்களின் வேலையில் இருக்கும் நண்பர்களை நீங்கள் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வீர்கள் என்னடா வேலை எப்படி போய்கொண்டு இருக்கின்றது. வேலையில் உள்ள பிரச்சினைப்பற்றி பேசுவீர்கள். ஜாலியாக கூட பேசிக்கொள்ளலாம். நான் சந்திக்கும் சாமியார்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் உங்களைபோல் தான் நாங்களும் பேசிக்கொள்வோம். எங்களின் வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வேலையிலும் ஏற்பட்ட பிரச்சினை அல்லது அதனை எப்படி செய்வது இது தான் நாங்கள் பேசிக்கொள்வது.

ஒருவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் அவர்களின் நட்பு வட்டத்தை பார் என்று சொல்லுவார்கள். அதேப்போல் தான் நாம் எவருடன் பழக்கம் வைத்துள்ளோமே அவர்கள் வழியாக கற்றுக்கொள்கிறோம். அவர்களின் பழக்கம் நமக்கு தொற்றிக்கொள்ளும். 

இது எல்லாம் பல வருடங்கள் தேடி கண்டுபிடித்த விசயங்கள். உங்களின் தேடுதல் இதனை நோக்கி இருக்கும் என்றால் கண்டிப்பாக கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவார். அந்த வழிகாட்டுதலோடு நீங்கள் சென்றால் அனைத்தையும் கற்றுக்கொள்ளமுடியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 40


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவந்தோம். அதில் ராகு தசாவில் புதன் புத்தியில் புதன் கெட்டால் என்ன பலனை தரும் என்று பார்த்து வந்தோம். புதன் இரண்டாம் வீட்டுக்கும் ஏழாவது வீட்டுக்கும் அதிபதியாக இருந்து புதன் கெட்டால் அந்த ஜாதகருக்கு மரணம் ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். மரணமும் திடீர் மரணமாக ஏற்படும் என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு புதன் கெட்டு புத்தி நடைபெறும்பொழுது சிறைவாசமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசாங்க வழியில் பிரச்சினை தருவதாக அமையும். செக்மோசடி என்று சொல்லுகிறார்கள் அலலவா. மோசடி செய்து சிறைவாழ்க்கை அனுபவிப்பது எல்லாம் இந்த ராகு தசாவில் புதன் புத்தியில் தான் நடைபெறும்.

ஒரு சிலருக்கு பாம்பு தீண்டி அவர்களின் உடல் முழுவதும் விஷமாக மாறிவிடும். உடலில் பார்த்தால் தோல்களில் நிறம் மாறிஇருக்கும். அருவருக்கதக்கமான தோல் மாதிரி இருக்கும். திருடர்கள் பயமும் இருக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் களவு போகும்.

பரிகாரம்

புதன் என்றாலே விஷ்ணு. விஷ்ணு கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யமுடியவில்லை என்றால் ஒரு அர்ச்சனையாவது செய்யவும். சக்கரதாழ்வரை வணங்கிவரவும். நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, September 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 116


ணக்கம் ண்பர்களே!
                    ஊரில் ஒரு செய்தி ஒன்று சொல்லுவார்கள். இரவில் படுத்து தூங்கும்பொழுது தண்ணீர் குடிக்காமல் தூங்காதே என்று சொல்லுவார்கள். ஏன் என்றால் ஆத்மா நடுஇரவில் தண்ணீரை தேடி அலையும். அப்படி அலையும்பொழுது தண்ணீர் குடித்திற்குள் சென்று தண்ணீரை பருகும்பொழுது அந்த குடத்தை பூனை தட்டிவிட்டு குடத்தில் ஆத்மா மாட்டினால் நீ இறந்துவிடுவாய் என்று சொல்லுவார்கள். இப்படி இறந்தவர்களும் உண்டு. அந்த குடத்தை எடுக்கும்பொழுது உயிர் வந்துவிடும் என்றும் சொல்லுவார்கள். இதனை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஆன்மீகமாக பார்க்கும்பொழுது ஒருவிதத்தில் இது உண்மையோ என்று நம்பதோன்றும்.

இதனை கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லும்பொழுது ஏதோ ஒரு கதைக்காக சொல்லுகிறார்கள் என்று எனக்கு தோன்றியது. வெகுநாட்கள் சென்ற பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து பார்க்கும்பொழுது இது உண்மை என்றே தோன்றுகிறது.

மனிதன் தூங்கும்பொழுது அவனையறியாமல் அவனின் ஆத்மா வெளியில் வருகிறது. வெளியில் எதனையோ தேடுகிறது. மீண்டும் அவனின் உடலில் சென்று புகுந்துக்கொள்கிறது. அது வரை அவனின் உடலில் எந்தவித மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருக்கின்றது. இது ஆன்மீகவாதிக்கு மட்டும் இல்லை சாதாரண மனிதர்களுக்கும் நடைபெறுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனது ஆத்மா வெளியில் சென்று ஒரு பைத்தியத்தை குணமாக்கிவிட்டு வந்ததை என்னால் உணரமுடிந்தது. எனது ஆத்மா வெளியில் செல்வதையும் என்னால் பார்க்கமுடிந்தது. அதே நேரத்தில் அது பல கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பவரை சென்று குணமாக்கிவிட்டு வருகின்றது. குறைந்தது முன்னூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பரை சென்று குணமாக்கிவிட்டு வருகின்றது. அந்த ஊர் ஞாபகம் இருக்கின்றது அந்த நபர் யார் என்று தெரியவில்லை. 

நோயை குணமாக்குவதற்க்கு என்று பயிற்சி செய்து இருந்தாலும் எனக்கு தெரியாமல் சென்று வருவதை எண்ணி நான் பயந்துவிட்டேன். இதனை ஒரு நண்பரிடம் மட்டும் அப்பொழுது பகிர்ந்துக்கொண்டேன். நாங்கள் அமர்ந்து அதற்க்கு என்று பயிற்சி செய்யும்பொழுது ஆத்மா வெளியில் சென்று யாரை பார்க்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இது அதுவாகவே சென்று வருவதை என்னால் நம்பமுடியவில்லை.

என்னை அறியாமல் பலபேர்க்கு நன்மை செய்வற்க்கு என்று நமது ஆத்மா பயன்படுகிறது என்பது மகிழ்ச்சி நமது ஆத்மாவிற்க்கு தனி ஒரு சக்தி இருக்கவேண்டும் என்று மட்டும் தோன்றியது. ஆத்மா வெளியில் செல்லும்பொழுது கண் மற்றும் காது எந்தவித உணர்வு உறுப்பும் இல்லாமல் வெளியில் நடப்பதை நன்றாக தெரிகிறது.

அனைத்து மக்களுக்கும் இது நடக்கிறது ஆனால் ஒரு சிலர் உணருகிறார்கள். இது கனவு போல் இருப்பது இல்லை. வேறு விதமாக நாம் நேரில் செய்வது போல் இருக்கின்றது. என்ன இதனை நிருபணம் செய்வதற்க்கு என்று இன்னமும் பயிற்சி தேவை. (ஊரை சுத்தவே நேரம் கிடைக்கமாட்டேன்கிறது இதில் பயிற்சி செய்ய நேரம் ஏது).  

இதனை போல் தான் வெளியில் சென்று ஒரு குழந்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா. அது 100 சதவீதம் உண்மையான ஒன்று தான். நன்றாக பயிற்சி செய்த பிறகு இதனை நிருபணம் செய்யலாம். எந்த வித உபகரணங்கள் இல்லாமல் உலகத்தில் எங்கு என்ன என்ன இருக்கின்றது என்று பார்க்கலாம். ஏன் இந்த பிரபஞ்சத்தில் எங்கு இருந்தாலும் அதனை கண்டுபிடிக்கமுடியும். 

குரு இதனை நன்றாக செய்வார் ஆனால் நான் அந்தளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை.ஒரு தனிஉலகம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மை.அதனை நோக்கி செல்கிறேன். பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குருவிற்க்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                     எனக்கு குரு தசா ஆரம்பித்த நாளில் எனது நண்பர் ஒருவர் என்னிடம் வந்து ஒரு ஷுரடி சாய்பாபாவின் படத்தை கொடுத்தார். எனது பூஜையறையில் அந்த படம் இன்றும் உள்ளது. இருக்கின்ற படத்திலேயே பெரிய சைஸ் படம் அது மட்டுமே.

எனக்கு அப்பொழுது அந்த படத்தைப்பற்றி அந்தளவு தெரியவில்லை. இன்று அம்மனோடு அவரும் இருக்கிறார். நான் அதிகமாக சாமி படங்களை வாங்கி வைப்பது கிடையாது. நமது அம்மன் (மேல்மலையனூர் படம்), வக்கிரகாளி சென்னையில் இருப்பதால் காளிக்காம்பாள், அண்ணாமலையார் படங்கள் மட்டும் இருக்கும். 

ஒருவருக்கு குரு தசா நல்லது செய்தாலும் சரி தீயது செய்தாலும் சரி ஷிரடி சாய்பாபாவை மானசீகமாக வணங்கி வாருங்கள். உங்களுக்கு குரு தசா நல்லது செய்யும். குருவிற்க்கு நல்ல ஒரு பரிகாரம் இது.

சாய்பாபாவை வணங்கிவரும்பொழுது வியாழகிழமை மட்டும் அருகில் இருக்கும் சாய்பாபாவின் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழகிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்து பாபாவிற்க்கு ஆராதனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் சாய்பாபா உங்களுக்கு வரும் தீமைகளை விலக்கி விடுவார். உங்களை காப்பாற்றுவார். 

நிறைய சாய்பாபாவின் பக்தர்கள் என்னிடம் தொடர்பு வைத்திருக்கிறார்கள். எப்படியும் மாதம் ஒரு முறையாவது ஷிரடி சாய்பாபாவின் நைவேத்தியம் அல்லது ஏதாவது ஒரு பொருளாவது என்னிடம் வந்து சேர்ந்துவிடும். இரண்டு நாள்களுக்கு முன்பு சாய்பாபாவின் 2014 காலண்டர் என்னிடம் ஒரு பக்தர் கொடுத்துவிட்டு சென்றார்.

குரு கிரகத்திற்க்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லியுள்ளேன். உடனே கடைபிடியுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

சேவை செய்வோம்


ணக்கம் ண்பர்களே!
                    என்னை நெருங்கி தொடர்பு வைத்திருப்பவர்கள் அதிகம் பேர் யாராக இருக்கும் என்று சிந்தனை செய்து பார்த்தேன். அதாவது என்னோடு அதிகமாக பழக்கம் வைத்திருப்பவர்கள். சிந்தனை செய்து பார்த்தேன். அதில் ஒரு உண்மை தெரிந்தது.

என்னோடு அதிகமாக தொடர்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களின் வீட்டில் முன்னோர்கள் எதாவது ஒரு பொதுநலனில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் அப்பா கோவில் கட்டியுள்ளார் அல்லது ஊர் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறார். அன்னதானம் செய்தவர்களாக இருக்கின்றார்கள். 

சோதிடர்களுக்கு நல்லவர்களும் தொடர்பு இருக்கும் கெட்டவர்களும் தொடர்பு இருக்கும் ஆனால் நீண்ட நாள்களாக தொடர்பு வைத்திருப்பவர்களை ஒரு லிஸ்ட் எடுத்து பார்த்தால் அவர்கள் யார் என்று தெரியவருகிறது. அனைவரும் பொதுநலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள.

அவர்களின் குடும்பங்கள் ஒரு சில கஷ்டத்தை அனுபவித்தாலும் அதனை காப்பாற்றுவதற்க்கு என்னை நாடி வருவதற்க்கு அவர்களின் முன்னோர்கள் செய்த புண்ணியபலன் பலனை தருகிறது. இதில் இருந்து ஒன்றை நான் அறிந்துக்கொண்டேன். நாம் நிறைய புண்ணியகாரியங்கள் செய்ய வேண்டும். 

அப்படி நாம் புண்ணியம் செய்துவிட்டால் நமது தலைமுறையினர் எப்படி கஷ்டப்பட்டாலும் அந்த நேரத்தில் ஒரு கை உங்களை தூக்கிவிட கை நீட்டும் என்பது நன்றாக எனக்கு தெரிகிறது. 

நீங்களும் உங்களின் தலைமுறையினர்க்கு நல்லது செய்ய இன்றே பொது காரியங்களில் ஈடுபாடு காட்டுங்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். நான் ஒரு சில கோவில்களுக்கு செல்லும்பொழுது கோவிலுக்குள் மக்கள் விட்டு சென்ற பேப்பர்கள் கீழே இருந்தாலும் அதனை எடுத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு செல்வேன். இப்படி கூட உங்களின் பொதுநலன் கருதி செய்யலாம்.

தினமும் ஒரு சின்ன உதவியை பிறர்க்கு என்று உதவினால் போதும். நீங்கள் செய்துக்கொண்டே வரும்பொழுது உங்களின் குழந்தைகள் நன்றாக வாழ்வார்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, September 25, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 39


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் புதன் புத்தியை பார்த்து வந்தோம். அதில் புதன் நன்றாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் புதன் கெட்டு அதன் புத்தி நடந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

புதன் நன்றாக இருக்கின்றதை என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்று ஒரு நண்பர் கேட்டார். பல பதிவுகளில் சொல்லிருந்தாலும் இப்பதிவிலும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவில் புதன் கெடுதல் எவ்வாறு என்பதை பார்த்துவிட்டால் அதன் பிறகு பலனை பார்க்கலாம்.

புதன் ஒரு சுபக்கிரகம். அது எங்கு அமர்கிறதோ அதற்கு தகுந்தார் போல் அதன் சுயத்தன்மை இருக்கும். பொதுவாக தீயவீடுகள் என்று சொல்லுகின்ற மூன்று ஆறு எட்டு மற்றும் பனிரெண்டாவது வீடுகளில் அமர்ந்தால் புதன் கெட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனாலும்  இந்த வீடுகளில் அமர்வதை மட்டும் வைத்து சொல்லிவிடமுடியாது. புதன் மூன்றாவது வீட்டில் அமர்ந்தாலும் ஏஜென்ஜி தொழில் கொடிகட்டி பறக்கலாம். எட்டில் புதன் அமரும்பொழுது மறைந்த புதன் நிறைந்த அறிவை தரும் என்றும் சொல்லுவார்கள்.

புதன் கெடுவது முதல் காரணம் எது என்றால் தீயகிரகங்களோடு சேர்ந்து இருந்தால் புதன் கெட்டுவிடும். தீயகிரகங்களின் பார்வையில் இருக்கும்பொழுது புதன் கெடும். இப்பொழுது உங்களுக்கு எல்லாம் அஷ்டவர்க்கம் தெரியும் அதில் எத்தனை சதவீதம் பலன் இருக்கின்றது என்பதை பற்றி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ராகு தசாவில் புதன் கெட்டு புதன் புத்தி நடைபெறும்பொழுது உங்களுக்கு தோல் வியாதிகள் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு சிலருக்கு இந்த நேரத்தில் வெள்ளை நிறமாக தோலில் தென்பட ஆரம்பிக்கும்.

ஏஜென்சி தொழில் பிரச்சினையை கொடுக்கும். தொலை தொடர்புகள் அந்தளவுக்கு பயனை தராது. மாமனிடமிருந்து பிரச்சினை உருவாகும். அரசாங்கத்து தொடர்புகள் பிரச்சினையை கொடுக்கும். வெளிஆட்களை சந்திக்கமுடியாது.

படிப்பு என்பது சுத்தமாக வராது. மூளையில் ஒன்றும் ஏறாது. ஞாபக திறன் குறைந்துவிடும். ராகுவும் கெட்டு புதனும் கெடும்பொழுது ஒரு சிலருக்கு பைத்தியம் கூட பிடித்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தொழில் செய்யும் நண்பர்களின் கவனத்திற்க்கு


வணக்கம் நண்பர்களே!
                    தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு உதவி செய்வதை ஆரம்பித்து வைத்தோம் அதில் பல நண்பர்கள் பயன்பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். யாரிடமும் நான் இவ்வளவு தான் நீங்கள் தரவேண்டும் என்று சொன்னதில்லை. இன்று பல பேர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துக்கொண்டு வருகிறாரகள்.

இப்பொழுது தொழில் செய்பவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு தொழிலில் வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்பே இல்லை என்பது அவர்களே பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி இருந்தும் அவர்கள் இன்று உயருவதற்க்கு யார் காரணம் என்று சொன்னால் அம்மன் தான். இப்பொழுது தொழில் செய்பவர்கள் இதனை மறுத்து பேசமாட்டார்கள். 

இதனை அவர்கள் சோதனை செய்ய வேண்டும் என்றாலும் என்னிடம் சொன்னால் சோதனை செய்யது பார்க்கலாம். ஒரு நாள் அம்மனை அவர்களின் தொழிலில் இருந்து வெளியில் வரச்சொன்னால் அவர்கள் எதில் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவரும். 

நான் இந்த தொழில் செய்பவர்களிடம் ஜாதகத்தை வைத்து செய்யவேண்டும் ஜாதகத்தை பார்க்கவேண்டும் என்று சொன்னால் அவர்களின் பதில் இப்பொழுது இது எல்லாம் வேண்டாம். எனக்கு ஏதோ வியாபாரம் நடந்தால் போதும் என்று சொல்வார்கள். இது எதனால் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால் இவர் ஜாதகத்தை கேட்டால் பணம் கேட்பார் என்ற எண்ணம்.

உண்மையில் அவர்களிடம் ஜாதகம் கேட்பது அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்க்காக மட்டுமே. பணம் என்பதை எதிர்பார்த்து செய்வதற்க்கு அல்ல. ஒரு லிமிடோடு எனக்கு போதும் என்று வருபவர்கள் தயவு செய்து வராதீர்கள். மிகப்பெரிய சக்தியை தேவையில்லாமல் உங்களுக்கு செலவு நான் தேடி கண்டுபிடிக்கவில்லை. மிகப்பெரிய ஆளாக வருபவர்களுக்கு தான் இதனை நான் செய்யமுடியும்.

சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு ஒரு தெய்வம் வேலை செய்யும்பொழுது கொஞ்ச நாள் பார்க்கும் திரும்பி என்னிடம் வந்துவிடும். அதற்கு நான் பொறுப்பு ஆகாமுடியாது. மீண்டும் சொல்லுவது ஒரு சாதாரண தொழில் செய்பவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்க்காக தான் நான் வேலை செய்யமுடியும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்க்குள் நிற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து வரவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தொலைபவர்கள்


ணக்கம் ண்பர்களே!
                    எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கில் முதல் இடத்தில் இருப்பது சினிமா பார்ப்பது. இப்பொழுது நேரம் கிடைக்கவில்லை என்றாலும் மாலை நேரத்திலாவது சினிமா பார்ப்பேன். மாலை நேரங்களில் சோதிடம் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன். 

கடைசியாக 6 மெழுகுவத்தி என்ற படத்தை பார்த்தேன். ஒரு குழந்தையை மெரினாவில் தொலைத்துவிடுகிறார்கள் ஒரு தம்பதினர். அந்த குழந்தையை தேடி போகும் தந்தை அவர்க்கு ஏற்படும் இடைஞ்சல்கள் என்று கதை செல்லுகிறது. எனக்கு படம் பிடித்து இருந்தது. உண்மையில் இப்படி நடக்கும் என்றால் வருத்தப்படவேண்டிய ஒரு விசயம் தான் இந்த நிகழ்வு.

ஒரு வீட்டில் உள்ள நபர்கள் தொலைவதற்க்கு அல்லது கடத்தப்படுவதற்க்கு என்ன காரணம் என்று சோதிடத்தை பார்த்தால் தெரிந்துவிடும். ஜாதகத்தில் ஆறாவது வீடு என்பது மிகப்பெரிய ஒரு கெடுதலை தரும் வீடு என்பதை நான் அனுபவத்தில் பெற்று இருக்கிறேன். அதன் பாதிப்பு தான் ஆறாவது வீட்டைப்பற்றி விலாவாரியாக எழுதியுள்ளேன். பழைய பதிவில் தேடி பாருங்கள். 

ஆறாவது வீட்டை அவ்வளவு எளிதில் நாம் கணித்துவிடமுடியாது. நாம் சோதிடத்தில் அது கடன் வீடு எதிரி வீடு நோயையை பற்றி சொல்லும் வீடு என்று மட்டும் பார்த்துக்கொண்டு இருப்போம்.

உண்மையில் ஆறாவது எட்டாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டை கணித்து ஒரளவு சொன்னாலும். அதில் இருந்து வருவதை அந்தளவு உறுதியாக இது தான் வரும் என்று நம்மால் சொல்லிவிடமுடியாது.அதிவேகத்தில் வந்து நம்மை அடித்துவிட்டு செல்வதில் வல்லவர்கள் அவர்கள். இதில் வரும் தண்டனை எல்லாம் முன்ஜென்மத்தில் நாம் செய்த தீமைகளால் தான் வருகின்றது. கண்டிப்பாக அது நம்மை தாக்காமல் விடாது. 

ஒருவர் தொலைந்துவிடுகிறார் என்றால் அதற்கு ஆறாவது மற்றும் பனிரெட்டாவது வீடு அதிகம் பங்குபெறும். இதற்கு முன் உள்ள வீட்டை வைத்து தான் நாம் இவர்களை மீட்டு எடுக்கமுடியும். ஐந்தாவது வீடு மற்றும் பதினோராவது வீட்டை பலப்படுத்தி அவர்களை மீட்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குடும்பம்


வணக்கம் நண்பர்களே!
                    இது கலியுகம். என்னிடம் ஒன்றும் இல்லாத நேரத்தில் என்னிடம் இருந்தவர்கள் ஒரு சில நண்பர்கள் மட்டுமே. இன்று பல பேர்கள் அதாவது உறவினர்கள் என்னை தேடி வருகின்றார்கள். 

ஒன்றும் இல்லாத நேரத்தில் எந்த உறவினர்களும் என்னை கண்டுக்கொண்டது கிடையாது. ஆனால் இன்று பல பேர்கள் நெருங்கி வரதுவங்கிவிட்டனர். அவ்வளவு எளிதில் அவர்களிடம் நான் மாட்டிக்கொள்வது கிடையாது. ஏன் நெருங்கி வருகின்றனர் என்றால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வருகிறார்கள். தினமும் என்னை தொடர்புக்கொண்டு நலம் விசாரிப்பது இப்படி தான் தொடர்கிறது. 

எனது குருவிடம் கேட்டேன் என்ன சாமி இப்படி என்னை நெருங்கி வருகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் அவர்களுக்கு என்ன வேணுமோ அதனை செய்துக்கொடுத்துவிடு என்றார்.

எனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதாவது உறவினர்களுக்கு குரு தான் உதவி செய்கிறார். அவர்களின் பிரச்சினையை ஒவ்வொன்றாக அவர் தான் தீர்த்துவருகிறார். எனது குரு எனக்கு அறிமுகமானதே எனது குடும்பத்தில் உள்ள நபர்கள் வழியாக தான். அதனால் நான் எதனையும் கண்டுக்கொள்வதில்லை. 

குடும்ப உறவினர்கள் குருவோடு தொடர்பு உண்டு.இப்பொழுது நீங்கள் நினைக்கலாம். எல்லாம் சுயநலமாகவே இருக்கின்றனர் என்று நினைக்கலாம். இதில் ஒரு விசயம் இருக்கின்றது அதனை சொல்லுகிறேன் பாருங்கள். குரு சந்நியாசம் வாங்கியுள்ளார் அவரின் குடும்பத்தோடு தொடர்பு கிடையாது. எனக்கு குரு அமைந்ததே குடும்ப உறுப்பினர் வழியாக தான் அமைந்தது. அதனால் குடும்ப உறுப்பினர்க்கு முன்னுரிமை தரப்படுகிறது.

குரு சொல்லுவார். நீ ஒருவன் ஆன்மீகவாதியாக வருகின்றாய் என்றால் உன் குடும்பத்தில் முன்பரம்பரையில் ஒருவர் உன்னைப்போல் இருந்திருப்பார். உனக்கு பிறகு பல சந்ததினர்க்கு பிறகு உன்னைப்போல் ஒருவர் பிறப்பார். இது ஒரு சுழற்சி என்றும் சொல்லியுள்ளார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Tuesday, September 24, 2013

சிவன் என்றாலே வலி


வணக்கம் நண்பர்களே!
                     வெளிநாடுக்களுக்கு செய்யும் வேலையை நமது அம்மனை வைத்து மட்டும் செய்தால் போதாது அம்மனோடு பல பேரை அனுப்ப வேண்டியுள்ளது. அப்படி அனுப்பும் பொழுது அதிகமாக சிவனின் ரூபங்களை வைத்து இந்த வேலையை செய்வோம். 

சிவனை வைத்து செய்யும்பொழுது நாம் சந்நியாசிகளாக இருந்தால் நல்லது. நான் சந்நியாசி தீட்சை வாங்கவில்லை. சிவனை வைத்து செய்வதால் சிவன் பல வழிகளில் தொந்தரவை தருவார். பல அடிகளை நான் வாங்கியுள்ளேன். இப்பொழுது பல வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு செய்ய வேண்டியுள்ளதால் சிவனை அழைக்க வேண்டியுள்ளது. 

சிவனிடம் அடிவாங்கிக்கொண்டு செய்கிறேன். பல பேர் சிவனை வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பல மந்திரங்களை கற்று தருகிறார்கள் ஆனால் நம்மால் அடிவாங்காமல் செய்ய முடியவில்லையே என்று நினைப்பது உண்டு. 

இதனைப்பற்றி குருவிடம் கேட்டேன். சந்நியாசி தீடசை வாங்கினால் தாண்ட சிவன் நிற்பார் இல்லை என்றால் பிரச்சினை தான் என்பார். நான் அவரிடம் அவர் மட்டும் குடும்பத்தோடு வாழலாம். நாங்கள் வாழ்ந்தால் அவருக்கு பிடிக்காதா என்பேன். 

அதற்கு குரு சிவனை சதாசிவமாக நினைத்து வணங்கினால் உனக்கு பிரச்சினை இல்லை அதனை விட்டு மேலே சென்றால் உனக்கு பிரச்சினை தான் என்று சொல்லுவார். 

என்னமோ அவர் நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை என்று சொல்லுவேன். என்ன செய்வது பணத்திற்க்காக அடிவாங்கிதான் ஆகவேண்டும். சிவன் என்றாலே வலிக்குது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 38


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவில் புதன் புத்திப்பற்றி பார்த்து வந்தோம். இடையில் கொஞ்சம் வேறு கருத்தையும் பார்த்தோம். தொடர்ந்து ராகு தசாவில் புதன் புத்தியை நாம் பார்க்கலாம்.
ராகு தசாவில் புதபுத்தியின் காலம் 2 வருஷம் 6 மாதம் 18 நாட்கள் ஆகும்.

புத்தி நாதனான புதன் லக்கினத்திற்க்கு கேந்திரம் திரிகோணம் உச்ச வீடு சொந்த வீடு சுபகிரங்களோடு சேர்ந்து இருந்தால்

ராஜயோகம் என்று சொல்வார்கள் அல்லவா அந்தளவுக்கு அவர்க்கு புதன் புத்தியில் செய்யும். ராஜாங்க பதவியில் உள்ளவர்களை பார்க்கும் வாய்ப்பு உருவாகும். நாட்டின் பிரதமரை கூட சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். இங்கிலாந்து இளவரசியை கூட சந்திக்கலாம். அது அவர் அவர் இருக்கும் நிலையை பொருத்து அமையும்.

இதுவரை திருமணம் நடைபெறாமல் இருந்தால் உங்களுக்கு பெண் தேடிவரும். திருமணம் நடைபெறும். வரும் வரனும் நல்ல நகரத்தில் இருந்து வருவார்கள்.மிகப்பெரிய பணக்கார வீட்டு வரன் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நீங்கள் வியாபாரம் செய்துக்கொண்டு இருந்தால் உங்களின் வியாபாரம் இந்த புத்தியில் நன்றாக செல்லும். பணவரவும் நன்றாக இருக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.

நீங்கள் படித்துக்கொண்டு இருந்தால் இந்த காலத்தில் கல்வி வாய்ப்பு நன்றாக அமையும். மிகப்பெரிய தேர்வுகளை இந்த காலத்தில் எளிதில் வெல்லலாம். எப்படிபட்ட தேர்வாக இருந்தாலும் இந்த நேரத்தில் எளிதில் வென்றுவிடலாம்.

வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். ஒரு வீடு வாங்க போனாலும் இரண்டு வீடுகள் அமைந்துவிடும். ஒரு வாகனம் வாங்க போனாலும் இரு வாகனங்கள் வாங்கும் யோகம் வந்துவிடும். 

ராகு தசாவில் புதன் புத்தி நல்லதை செய்கின்றது. புதன் கிரகமும் நன்றாக அமையும் பட்சத்தில் நல்ல வளர்ச்சியை காணமுடியும். வாழ்க்கையில் கோபுரம் போல் உயரவேண்டிய காலக்கட்டம் இந்த காலக்கட்டம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    எனது ஊரில் பல எதிர்ப்புகள் எனது குடும்பத்திற்க்கு ஒரு சில காலங்களில் கிளம்பியது. அப்பொழுது தனிகுடும்பமாக நின்று அந்த ஊரை எதிர்த்து போராடி வென்றார்கள் எனது குடும்பத்தில் உள்ள மூத்தோர்கள் அவர்களுடன் நின்றது நமது அம்மன் மட்டுமே.

எனது ஊரில் அதிகமாக வசிக்கும் மக்கள் ஒரே சமூகத்தினர் தான். அந்த சமூகத்தில் தான் நானும் பிறந்தேன். அந்த சமூகத்தினர் சண்டைக்கு என்றே பிறந்தவர்கள் என்று சினிமா படங்கள் எல்லாம் பார்ததாலே தெரியும். இந்த ஊரில் பல பிரச்சினைகள் எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த ஊருக்கும் வரும்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்து அந்த ஊரை சமாளித்தார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மனின் துணை தான். எங்கள் குடும்பத்தினர் அம்மனின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வளவு பெரிய ஊரை சமாளித்து வெற்றி பெற்றனர். 

ஒரு ஊருக்கு இரண்டு பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன என்றால் அது எங்கள் ஊர் தான். மிகப்பெரிய ஊர் அந்த ஊரை தனிக்குடும்பம் நின்று பல காரியங்களில் ஜெயித்து இருக்கின்றது. அது எல்லாம் அம்மனின் அருள் மட்டு்ம் இருந்ததால் ஜெயித்தது.

அந்த நம்பிக்கையால் தான் நான் இன்று பல பிரச்சினைகளை எந்தவித பயம் இன்றி சந்திக்கின்றேன். ஒரு சிலர் என்னிடம் பேசும் பொழுது உங்களிடம் அம்மன் இருக்கின்றது என்ற கர்வம் இருக்கின்றது என்பார்கள். என்னிடம் கர்வம் இல்லை. நம்பிக்கை இருக்கின்றது அம்மனை முழுமையாக நம்புகின்றேன். 

எனது நம்பிக்கை எப்படி தெரியுமா புலிகள் தன்னுடைய இரையை தன் பற்களால் தேடுகிறது. மிகப்பெரிய கோரவிலங்குகளை தன் பற்களால் வேட்டையாடி உணவாக கொள்கிறது. அதே புலி தன் குட்டியை அதே பற்களால் தூக்கிக்கொண்டு காப்பாற்றுகிறது. அந்த புலிக்குட்டிக்கு தெரியும் தன் தாய் மிகப்பெரிய விலங்குகளை இந்த பற்களால் தான் வேட்டையாடுகிறது. இருந்தாலும் தாய் என்னை காப்பாற்றுவதற்க்கு தன் பற்களால் தூக்கிக்கொண்டு செல்கிறது என்று நம்பிக்கை வைக்கிறது பாருங்கள். அந்த நம்பிக்கையை அம்மன் மீது நான் வைத்துள்ளேன்.

இதேப்போல் அம்மன் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களுக்கும் அம்மன் தன் குழந்தைப்போல் காப்பாற்றுவாள்.உங்களை காப்பாற்றுவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Monday, September 23, 2013

படங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ஜாதககதம்பத்தில் வெளிவரும் ஒவ்வொரு பதிவிலும் அதில் இடப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது நண்பர் ஒருவர் இன்று கேட்டுருந்தார்.

பதிவுக்கு வருபவர்களின் கண்களில் வழியாக அவர்களின் மனதிற்க்கு அமைதி மற்றும் திருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக நெட்டில் தேடிபிடித்து படங்களை ஒவ்வொரு பதிவிலும் போடுகிறேன். இந்த படங்கள் யாருக்கும் சொந்தம் என்று சொன்னால் அந்த படத்தை நீக்குவதற்க்கு தயாராக இருக்கின்றேன்.

நெட்டில் தேடிபிடித்து போடுவதால் அந்த படத்திற்க்கு உரிமை யாருக்காவது இருக்கலாம். நெட்டில் தேடும்பொழுது நல்ல படங்களாக எனக்கு கிடைத்துவிடுகிறது. அந்த படத்தின் உரிமையுடன் நீங்கள் கேட்டால் படத்தை எடுத்துவிடுகிறேன். ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் போடும் பதிவில் எங்களுக்கு நீங்கள் போடும் படமும் நன்றாக பிடித்து இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காக படத்தை தேர்ந்தெடுத்து போடுகிறேன்.

வயதில் மூத்தவர்கள் நான் போடும் படத்தை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்து ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வதாகவும் சொல்லுகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்க்காகவும் நல்ல படங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

நான் ஜாதககதம்பத்திற்க்கு என்று புதிய தளம் உருவாக்காமல் இருப்பதற்க்கு காரணமும் இந்த படங்கள் தான். ஏன் என்றால் பதிவில் வரும் படங்கள் அனைத்தும் உயர் தரமான தரத்தோடு தரும்பொழுது அதன் சேமிப்பு அதிகமாக இருக்கின்றது. வெப்தளத்திற்க்கு அதிகமான தொகை கொடுக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது இதிலேயே படித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 37


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் மாந்தீரிக பாதிப்பை பற்றி சொன்னேன். இந்த மாந்தீரிகம் எந்த நேரத்திலும் செய்துவிடமுடியாது. ஒருத்தரை பார்த்து உன்னை உடனே மாந்தீரிகம் செய்து கொன்றுவிடுகிறேன் என்று சொன்னால் உண்மையில் அப்படி எல்லாம் செய்துவிடமுடியாது.

மாந்தீரிக பாதிப்பு எப்பொழுது நடைபெறும் என்றால் குருவின் பலம் குறையும்பொழுது செயல்படும். நமது பூர்வபுண்ணியத்தின் பலன் எல்லாம் குரு கிரகத்தின் கீழ் தான் இருக்கும். இந்த குரு கிரகம் எப்பொழுது பலம் குறைக்கின்றதோ அப்பொழுது மாந்தீரிக பாதிப்பு தலைநிமிர செய்யும். ராகுக்கும் குருவுக்கும் அதனால் தான் சண்டை. ராகு மாந்தீரிகத்தால் தாக்க நினைப்பார். குரு அதனை விடமாட்டார். 

ஒருவருடைய பூர்வபுண்ணிய பலம் குறையும்பொழுது ராகுவின் வேலை எளிதில் நடைபெறும். அதற்கு தான் அனைத்திற்க்கும் குருவின் பலன் மிக அதிகமாக வேண்டும் என்று சொல்லுவது. 

ராகு தசாவில் குருவின் பலம் குறைவாக இருக்கும். குரு சொந்த மதத்தை குறிப்பவர். ராகு பிற மதங்களை குறிப்பவர். பிறமதத்தை குறிப்பவரின் தசா நடைபெறும்பொழுது குரு தன் பலத்தை இழக்கிறார். அப்பொழுது அவருக்கு மாந்தீரிக பாதிப்பு ஏற்படும்.

மாந்தீரிகத்தை நிருப்பிக்க கூட முடியாத நிலை ஏற்படுவதற்க்கு காரணம் குருவினால் தான். குரு பலம் குறைந்த நபரை வைத்து மாந்தீரிகத்தை நிருபித்துவிடலாம்.நல்ல சக்தியை கூட நிருபணம் செயயாமல் இருக்கும்பொழுது தீயசக்தியை ஏன் நிருப்பிக்க வேண்டும்.

இந்த காலத்தில் மாந்தீரிகம் எல்லாம் தேவையில்லை அவன் அவன் கெட்டு குட்டி சுவராக அவனே போய்விடுகிறான். தமிழ்நாட்டில் மதுபானகடையை திறந்து விட்டு அவன் அவன் குடித்தே கெட்டுவிடுகிறான். இதில் எதற்கு மாந்தீரிகவாதி வேறு செய்யவேண்டும். ஆயிரம் மாந்தீரிகவாதிக்கு ஒரு மதுபானக்கடை சமம். நான் ஏற்கனவே பதிவில் சொன்னது மாதிரி பெரும்பாலான மக்கள் ராகுவின் பிடியில் இருக்கின்றனர்.

பல கெடுதல் தரும் விசயங்களை ராகு அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கும்பொழுது மாந்தீரிகவாதி தேவையில்லை. அவன் அவன் அவனே குழியை வெட்டிக்கொள்கிறான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா கெட்ட எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் உட்பிரிவாக மாந்தீரிகம் பற்றி வந்ததால் அதனைப்பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். மாந்தீரிகம் என்று சொன்னவுடன் நாம் நினைவுக்கு வருவது கேரளா தான் ஆனால் மாந்தீரிக உலகின் முதல் இடத்தை பிடிப்பவர்கள் கல்கத்தா தான் நமக்கு அண்டை மாநிலம் கேரளா என்றவுடன் அதனைப்பற்றி மட்டும் தெரிகிறது.

மாந்தீரிகத்தில் நாம் நல்ல தெய்வங்களை எடுப்பது போல் அவர்களும் தேவதைகளை எடுப்பார்கள். அந்த தேவதை உதவியுடன் தான் மாந்தீரிகம் செய்வார்கள். அனைத்து வேலைக்கும் தேவதை துணை வேண்டும். நாம் எடுப்பது நல்ல தேவதைகள் என்றால் மாந்தீரிகத்திற்க்கு கெடுதல் தேவதைகளை எடுப்பார்கள்.

மாந்தீரிகம் எல்லாம் இந்த காலத்தில் இல்லை என்று சொன்னாலும் அதிகமாக இந்த காலத்தில் இந்த வேலைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றது. வெளியில் சொல்லாமல் செய்கின்றனர். கல்கத்தாவில் ஏன் இந்த தொழில் முதலிடத்தில் இருக்கின்றது என்றால் கல்கத்தா காளியின் சக்தியால் மட்டுமே இந்த தொழில் நடத்துகின்றனர். மிகவும் கோபமான ஒரு தெய்வம் கல்கத்தா காளி. அதன் துணைக்கொண்டு இதனை அங்கு செய்கின்றனர். கல்கத்தா காளியின் உக்கிரத்தை தணிக்கவில்லை அந்த உக்கிரத்தை கொண்டு செய்கின்றனர். 

கேரளாவில் பல உபதேவதைகள் வைத்துக்கொண்டும் செய்கின்றனர். மற்றும் கெடுதல் தரும் ஆத்மாக்களை கொண்டும் செய்கின்றனர். ஆத்மாவின் உதவியோடு செய்வதால் அவர்களின் வேலை சொன்ன நேரத்தில் நடத்திக்கொடுக்கிறார்கள்.நம் மதத்தில் மட்டும் இல்லை அனைத்து மதத்திலும் இது இருக்கின்றது.

முஸ்லீம் மதத்தில் நூர்ஜாக ஜீன் என்ற ஒன்றை வைத்து செய்கிறார்கள்.. உருவமற்ற ஒன்று. கெடுதல் தரும் ஆவிகள் என்ற கூட சொல்வார்கள்.

இந்த வேலைகள் அனைத்திற்க்குமே காரணம் ராகு தான். நேர்மறையாக ராகு சுற்றாமல் எதிர்மறையாக சுற்றுவதால் இந்த எண்ணம் ஏற்படுவதற்க்கு காரணமாக இருக்கலாம். நல்ல எண்ணத்திற்க்கு பதிலாக தீய எண்ணங்கள் உருவாகின்றது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.