Followers

Saturday, September 7, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 23


வணக்கம் நண்பர்களே !
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் சுயபுத்தி அதாவது ராகு புத்தியின் காலம் 2 வருஷம் 8 மாதம் 12 நாட்கள்.

ராகு எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறதோ அந்த வீட்டின் காரத்துவம் மற்றும் அந்த வீட்டின் அதிபரின் காரத்துவத்தை செய்யும் என்பதை சொல்லிருந்தேன். சுயபுத்தியின் பலன் ராகு தசாநாதன் போல் இருந்தாலும் அந்தரங்களை வைத்து பலன் வேறுபடும். அனைத்து சோதிடநூல்களில் சுயபுத்தி அந்தளவு நல்லது செய்யாது கெடுதலும் செய்யாது என்று சொல்லியுள்ளார்கள் ஆனால் ஒரு சில ஜாதகங்களில் சுயபுத்தி நல்லது செய்யும் அதிகமாக கெடுதலையும் தருவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

தசாநாதன் அதனுள் புத்தி நாதன் அதனுள் அந்தரநாதன் என்று வரும். சுயபுத்தியில் எந்தந்த அந்தரங்கள் வருகிறதோ அதற்கு தகுந்தார்போல் பலன் வரும். ராகு தசா ராகு புத்தி என்று வைத்துக்கொண்டாலும் அதற்குள் நடைபெறும் அந்தரகத்தை கணக்கிட்டால் பலனை சரியாக சொல்லலாம். தசாநாதனும் புத்திநாதனும் ஒன்றாக வருகிறார்கள். அப்பொழுது அந்தர நாதனை கணக்கிட்டு பலன் சொல்லவேண்டும்.

ராகு தசாவில் ராகு புத்தியில் குருவின் அந்தரநாட்கள் வரும் காலத்தில் பொதுவாக பிரச்சினையை சந்திக்ககூடும். குருவின் அந்தரநாட்கள் வருகின்ற 4 மாதம் 9 நாள்கள் மிககடுமையாக இருக்கும். குரு கெட்டால் அந்த ஜாதகருக்கு மிகப்பெரிய பிரச்சினை கொடுக்கும். அந்த இடத்தில் அந்தர நாதரை கணக்கிட்டு பலனை சொல்லவேண்டும்.

ராகு கிரகத்திற்க்கு எது எதிரியாக வருகிறதோ அந்த அந்தரங்களின் காலகட்டத்தில் பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும் என்று சொல்லவேண்டும். பொதுவாக தசாநாதன் மற்றும் புத்திநாதனோடு விட்டுவிடுவார்கள் அதற்குள் உள்ளே சொல்லுவது இல்லை. ஏன் என்றால் அவசரகாலத்தில் இதனை எல்லாம் சொல்லமுடியாது என்பார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் தாராளமாக சொல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: