Followers

Monday, September 16, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 32


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவில் சனியின் புத்தியை பார்க்கலாம். ராகு தசாவில் சனி புத்தியின் கால அளவு 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள். புத்திநாதனாக இருக்கும் சனி லக்கினத்திற்க்கு கேந்திரம் திரிகோணம் சொந்த வீடு மற்றும் உச்ச வீட்டில் நல்ல முறையில் இருந்து புத்தியை நடத்தினால் அனைத்திலும் உயரசெய்வான். புதிய வாகனங்களை வாங்கும் யோகத்தை ஏற்படுத்தி தருவான். 

சனி பழைய வாகனங்களுக்கு தான் அதிபதியாக செயல்படுவார். இங்கு ராகுவோடு கூட்டணியில் புத்தியை நடத்துவதால் புதிய வாகனங்களை வாங்க ஏற்படுத்திக்கொடுப்பார். புதியதாக வீடு கட்டி குடிபோக வைப்பான். பதவியில் உயர்வை பெற்று தருவான். நல்ல தனலாபங்கள் வந்து சேரும். எப்பொழுதும் பணம் வருவது போல் செய்வான் அந்த புத்தி வரை அது நடக்கும்.

தன்னுடைய சொந்த முயற்சியில் பிறர்க்கு பயன்படும் விதமாக தண்ணீர் பம்பு அமைத்து தண்ணீரை தருதல் போன்றவையும் ஏற்படுத்திக்கொடுப்பான். பழைய காலத்தில் குளம் வெட்டுதல் என்று சொல்லுவார்கள். காலத்திற்க்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டியது தான். இன்றைய காலகட்டத்தில் குளத்தை மூடிவிட்டு பம்புசெட் அமைத்தல் என்று மாற்றிக்கொள்ள வேண்டியது தான். 

பிரயாணங்கள் ஏற்படுத்திக்கொடுப்பான். ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் தன்னுடைய நாட்டிற்க்கு திரும்பியும் வரவழைப்பார். ஒரு சிலருக்கு இவ்வாறு நடந்துள்ளது. மொத்தத்தில் இந்த புத்தி நல்லதை தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

ATOMYOGI said...

வணக்கம் ஐயா! மிக்க நன்றி! நேற்று தான் தங்களின் ஒரு பதிவின் comment ல் கூறி இருந்தேன்,எப்போது மீண்டும் தமிழ்நாடு வருவேன் என்று! இன்றைய தங்களின் பதிவு ஏனோ ஒரு மகிழ்ச்சியை மனதில் விதைக்கிறது. (ஏனெனில் எனக்கு ராகு திசை சனி புத்தி வரும் 2014 ஜனவரி வரை இருக்கிறது. சனி துலாம் இல் ஆனால் அது 8ம் வீடு ஏனெனில் மீன லக்கினம் கன்னி ராசி) நான் தாய்மண்ணிற்கு திரும்ப வாய்ப்புள்ளதா?

rajeshsubbu said...

கண்டிப்பாக வாய்ப்பு ஏற்படுத்தி தருவார்

ATOMYOGI said...

தங்களின் உடன் மறுமொழிக்கு மிக்க நன்றி ஐயா!