Followers

Saturday, September 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 35


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் அடுத்ததாக புதன் புத்தியை நாம் பார்ப்போம். 

ராகு ஏற்கனவே மிகப்பெரிய சிக்கலை எல்லாம் கண்டுபிடித்து கொடுப்பான் மிகச்சிறந்த தந்திரமூளையை தருபவன். இதில் புதன் சேர்ந்தால் எப்படி இருக்கும். புதனும் சிறந்த புத்திமான். மூளையின் பலம் அதிகமாக இருக்கும். எந்த செயலையும் எளிதில் முடித்துவிட்டு வந்துவிடுவான்.

இந்த புத்தி முழுவதும் மூளையின் பலத்தோடு சேர்ந்து செயலை செய்வதால் அதிகமாக புத்தியை வைத்து செயல் நடைபெறும். இருவரும் ஏடாகூடாமாக இருந்தால் மிகசிறந்த முறையில் கம்யூட்டரில் பிறரை ஏமாற்றி சம்பாதித்துவிடுவார்கள்.நெட்டில் திருகிறார்கள் அல்லவா அது எல்லாம் இந்த மாதிரி தசாவில் மட்டுமே அதிகபடியான சாத்தியம் இருக்கும்.

புதன் பத்திரிக்கைக்கு காரணம் வகிப்பதால் நெட்டில் நம்ம மாதிரி பதிவு எல்லாம் வெளியிடுவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருக்கும். இவர்களை போற்றி புகழ்வார்கள். ராகு வெளிநாட்டு மக்களை குறிப்பிடுவதால் வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தி தருவார்.

புதன் கல்விக்கு காரகம் வகிப்பதால் வெளிநாட்டு கல்வி படிப்பதற்க்கு வெளிநாடு செல்லும் யோகம் இந்த புத்தியில் நடைபெறும். படிப்பதற்க்காக மடடுமே இந்த தசாவில் வெளிநாடு செல்வார்கள்.

பொதுவாக ராகு தசாவில் திருமணம் தடைபடும் ஆனால் புதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு ராகு தசாவின் புதன் புத்தியில் திருமணம் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: