Followers

Monday, September 23, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 36


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். ராகு தசாவில் ஒரு முக்கியமான தகவலை தரவேண்டும் என்று நினைத்து இருந்தேன். காலையில் அந்த எண்ணம் வந்தது. அதனைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ராகு நட்சத்திரத்தை உடையவர்கள் மற்றும் ராகு தசா நடப்பவர்கள் பார்த்தால் அவர்கள் சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் தேடுதலில் சித்தர்கள் அதிகமாக இருக்கும். சித்தர்கள் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு ஈடுபாடு வருகின்றது என்று நான் நினைத்தது உண்டு. 

எனக்கு ராகு தசா நடக்கும்பொழுதும் இப்படி தேடுதல் இருந்தது ஆனால் தேடி போக வாய்ப்புவரவில்லை. சித்தர்களை பற்றி நான் தேடும்பொழுது (நெட்டில் தாங்க) அவர்கள் அதிகமாக மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று தெரியவந்தது. மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்றால் இந்த காலத்தில் யார் இதனை ஆராய்ச்சி செய்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கும்பொழுது இந்த காலத்தில் மாந்தீரிகம் செய்பவர்கள் மூலிகைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் மற்றும் பயன்படுத்துகிறார்கள்.

அந்த காலத்தில் சித்தர்கள் என்பவர்கள் மாந்தீரிகம் வேலை செய்பவர்களாக இருக்ககூடும் என்று என் மனது நினைத்தது. ஏன் என்றால் மாந்தீரிகத்திற்க்கும் ராகுக்கும் ஏகாப்பொருத்தம். இது எனது கணிப்பு தானே தவிர ஆதாரபூர்வமான தகவல் இல்லை.

இன்றைய காலத்தில் சித்தர்கள் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் பெருமைக்கொள்ளும் அனைவரும் என் பார்வையில் இவர்கள் மாந்தீரிகவாதியாக இருப்பார்களோ என்று எனக்கு தோன்றும். ஏன் என்றால் சித்தர்கள் செய்த மை வேலையை இவர்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 

அஞ்சனம் செய்வது ரசமணி செய்வது இது எல்லாம் இந்த காலத்தில் உள்ள மாந்தீரிகம் செய்பவர்கள் செய்கிறார்கள். இருவருக்கும் உள்ள தொடர்பை பார்த்தால் அவர்கள தான் இவர்களோ அல்லது இவர்கள் தான் அவர்களோ என்று தோன்றுகிறது.

ராகு தசா நடப்பவர்களுக்கு மற்றும் ராகுவின் நட்சத்திரத்தை உடையவர்கள் அனைவரும் இந்த தொழில் மீது ஈடுபாடு அதிகமான வைத்திருக்கிறார்கள். ராகு தசாவில் ஒருவருக்கு இதன் மீது அதிகஈடுபாடு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

7 comments:

Anonymous said...

மாந்த்ரீகம் , ஜோதிட ஆர்வம் , அதிக காமம் , பக்தி ,
சித்தர்கள் ஈடுபாடு , அந்நிய மொழி , அந்நிய நாட்டுத் தொடர்பு
என்று இன்னும் ராகுவின் லீலைகள் எத்தனையோ ?
வெளியில் வந்தால் போதும் என்று உள்ளது உண்மை.
ஆனால் பெரும்பாலானவர்களின் நிலைமை வாணலிக்குத் தப்பி
அடுப்பில் விழுந்த கதையாகத் தான் இருக்கும் போலுள்ளது.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி ஸ்ரவாணி

Paddy said...

Hello Sir, Thanks for your post.
For me Rahu Dasa and Kethu Bhukthi is running now. It goes till 28/04/2014.
As of now Ketu in 4th house in (Mesha Rasi) and Raghu in 10th house in Libra along with Saturn. Let me know by when I will get back to job?

ATOMYOGI said...

உணமை! இப்போது எனக்கு ராகு திசையில் சனி புத்தி. ராகு திசை பிப்ரவரி 2006 ல் தொடங்கியது. அன்று என்னை பந்தாட தொடங்கியது இன்னும் தொடர்கிறது. பல நன்மைகளை ராகு தந்திருக்கிறார் ஆனால் நிம்மதியை மட்டும் அல்ல!!! இன்னும் 11 வருடஙகளை எப்படி கடத்துவது. புரியவில்லை. என்ன செய்வது அவரவர் பூர்வ புண்ணியம். இனி வரும் புத்திகளாவது நிம்மதியளிக்கும் என்று எதிர்பார்க்க வேண்டியுள்ளது

rajeshsubbu said...

வணக்கம் Paddy உங்களின் முழுஜாதகத்தையும் அனுப்பி கேட்டுக்கொள்ளுங்கள்.

rajeshsubbu said...
This comment has been removed by the author.
rajeshsubbu said...

வணக்கம் சுதாகர் தெய்வத்தின் மீது பக்தியை செலுத்துங்கள் உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். நன்றி