Followers

Wednesday, September 25, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 39


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் புதன் புத்தியை பார்த்து வந்தோம். அதில் புதன் நன்றாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் புதன் கெட்டு அதன் புத்தி நடந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

புதன் நன்றாக இருக்கின்றதை என்பதை எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்று ஒரு நண்பர் கேட்டார். பல பதிவுகளில் சொல்லிருந்தாலும் இப்பதிவிலும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவில் புதன் கெடுதல் எவ்வாறு என்பதை பார்த்துவிட்டால் அதன் பிறகு பலனை பார்க்கலாம்.

புதன் ஒரு சுபக்கிரகம். அது எங்கு அமர்கிறதோ அதற்கு தகுந்தார் போல் அதன் சுயத்தன்மை இருக்கும். பொதுவாக தீயவீடுகள் என்று சொல்லுகின்ற மூன்று ஆறு எட்டு மற்றும் பனிரெண்டாவது வீடுகளில் அமர்ந்தால் புதன் கெட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனாலும்  இந்த வீடுகளில் அமர்வதை மட்டும் வைத்து சொல்லிவிடமுடியாது. புதன் மூன்றாவது வீட்டில் அமர்ந்தாலும் ஏஜென்ஜி தொழில் கொடிகட்டி பறக்கலாம். எட்டில் புதன் அமரும்பொழுது மறைந்த புதன் நிறைந்த அறிவை தரும் என்றும் சொல்லுவார்கள்.

புதன் கெடுவது முதல் காரணம் எது என்றால் தீயகிரகங்களோடு சேர்ந்து இருந்தால் புதன் கெட்டுவிடும். தீயகிரகங்களின் பார்வையில் இருக்கும்பொழுது புதன் கெடும். இப்பொழுது உங்களுக்கு எல்லாம் அஷ்டவர்க்கம் தெரியும் அதில் எத்தனை சதவீதம் பலன் இருக்கின்றது என்பதை பற்றி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

ராகு தசாவில் புதன் கெட்டு புதன் புத்தி நடைபெறும்பொழுது உங்களுக்கு தோல் வியாதிகள் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு சிலருக்கு இந்த நேரத்தில் வெள்ளை நிறமாக தோலில் தென்பட ஆரம்பிக்கும்.

ஏஜென்சி தொழில் பிரச்சினையை கொடுக்கும். தொலை தொடர்புகள் அந்தளவுக்கு பயனை தராது. மாமனிடமிருந்து பிரச்சினை உருவாகும். அரசாங்கத்து தொடர்புகள் பிரச்சினையை கொடுக்கும். வெளிஆட்களை சந்திக்கமுடியாது.

படிப்பு என்பது சுத்தமாக வராது. மூளையில் ஒன்றும் ஏறாது. ஞாபக திறன் குறைந்துவிடும். ராகுவும் கெட்டு புதனும் கெடும்பொழுது ஒரு சிலருக்கு பைத்தியம் கூட பிடித்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

sri said...


சார்,
அஷ்டவர்க்கம் காண்பது எப்படி என்று விபரமாக சொல்வீர்களா?

rajeshsubbu said...

வணக்கம் அஷ்டவர்க்கத்தை நெட்டில் தேடிப்பாருங்கள் கிடைக்கும். நன்றி