Followers

Friday, September 27, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 40


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்துவந்தோம். அதில் ராகு தசாவில் புதன் புத்தியில் புதன் கெட்டால் என்ன பலனை தரும் என்று பார்த்து வந்தோம். புதன் இரண்டாம் வீட்டுக்கும் ஏழாவது வீட்டுக்கும் அதிபதியாக இருந்து புதன் கெட்டால் அந்த ஜாதகருக்கு மரணம் ஏற்படுவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். மரணமும் திடீர் மரணமாக ஏற்படும் என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு புதன் கெட்டு புத்தி நடைபெறும்பொழுது சிறைவாசமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசாங்க வழியில் பிரச்சினை தருவதாக அமையும். செக்மோசடி என்று சொல்லுகிறார்கள் அலலவா. மோசடி செய்து சிறைவாழ்க்கை அனுபவிப்பது எல்லாம் இந்த ராகு தசாவில் புதன் புத்தியில் தான் நடைபெறும்.

ஒரு சிலருக்கு பாம்பு தீண்டி அவர்களின் உடல் முழுவதும் விஷமாக மாறிவிடும். உடலில் பார்த்தால் தோல்களில் நிறம் மாறிஇருக்கும். அருவருக்கதக்கமான தோல் மாதிரி இருக்கும். திருடர்கள் பயமும் இருக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் களவு போகும்.

பரிகாரம்

புதன் என்றாலே விஷ்ணு. விஷ்ணு கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யமுடியவில்லை என்றால் ஒரு அர்ச்சனையாவது செய்யவும். சக்கரதாழ்வரை வணங்கிவரவும். நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: