Followers

Saturday, September 28, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 42


ணக்கம் ண்பர்களே!
                    ராகு தசாவில் இப்பதிவில் ராகு தசை சுக்கிரபுத்தி என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

ராகு தசாவில் அதிகமாக மனிதர்களை காதலுக்கு உட்படுத்துவார். ராகுதசாவில் வரும் காதல் நல்ல கிரகங்களின் துணையிருந்தால் அவர்களின் காதல் திருமணத்தை நடத்திக்கொடுத்துவிடும். இல்லை என்றால் அவர்களின் காதல் தோல்வியில் முடியும்.

அதிகப்பட்சமாக காதலில் வெற்றி பெறுவதற்க்கு ராகு தசாவில் சுக்கிரபுத்தி காரணமாக இருக்கின்றது இதனை நான் பல பேர்களிடம் பார்த்து இருக்கிறேன். சுக்கிரன் நன்றாக இருக்கும் நிலையில் அவர்களின் காதல் வெற்றி பெறுகிறது.

சுக்கிரன் கெடும்பொழுது அதிகபட்சமாக அந்த நபர்கள் காமத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள். சுக்கிரனின் புத்தி காலம் அதிகம் சரியாக மூன்று வருடங்கள் இந்த மூன்று வருடங்களில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்மூடித்தனமாக தன் வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள்.

ஆண்களாக இருந்தால் பரவாயில்லை பெண்களாக இருந்தால் அவர்களின் கதி அதோகதி தான். பல பெண்கள் தன் கையில் நல்ல சம்பளம் வருகின்றது. நான் யார் சொல்லுவதையும் கேட்கமாட்டேன். என் இஷ்டத்திற்க்கு தான் நடப்பேன் என்று ஊரை சுற்றுவது இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் ஜாதகத்தை எடுத்துபார்த்தால் அவர்களுக்கு ராகு தசாவில் சுக்கிரபுத்தி நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.

சுகமான இன்பஅனுபவங்களுக்கு காரணகர்ததாவாக இருக்கும் சுக்கிரனின் புத்தியால் பலபேர்க்கு நன்மை நடைபெற்றாலும். சீரழிவது அதிகமாக இருப்பார்கள். ஏன் என்றால் ராகு சுக்கிரனின் காம்பினேஷன் அப்படிபட்டது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: