Followers

Sunday, September 1, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                  இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு என்று என்னால் முடிந்தளவுக்கு அம்மனை வைத்து நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் பலநாட்களாகவே இருந்து வந்தது. இதனை செயல்படுத்த கொஞ்சநாட்கள் எனக்கு தேவைப்பட்டது. ஏன் என்றால் நீங்கள் வேண்டுவது அம்மனிடம். நான் சொல்லுவதை மட்டும் கேட்கும் அம்மனை இந்த பதிவுக்கு வரும் நண்பர்கள் சொன்னாலும் கேட்கும்படி செய்யவேண்டும் என்று பலநாட்கள் உழைத்து அவ்வாறு ஏற்பாடு செய்தேன்.

இன்று பல நண்பர்கள் அதனால் பயன்பெற்று இருக்கிறார்கள். இப்பொழுது பார்த்தால் பல நண்பர்கள் எனக்கு போன் செய்து பூஜை எப்பொழுது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மனின் அருள் அந்தளவுக்கு செய்கின்றது. நான் ஆன்மீகத்தை பயிற்சி செய்யும்பொழுதே ஒன்றை நன்றாக முடிவு செய்தேன். எக்காரணம் கொண்டும் என்னை முன் நிறுத்தகூடாது. அதாவது என்னை வெளியில் காட்டி பெயரை சம்பாதிக்ககூடாது என்று முடிவு செய்தேன்.

அம்மனை வைத்து நான் எல்லாம் வேலையும் செய்து எனக்கு பெயரை எடுத்துக்கொள்ளமுடியும் ஆனால் ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்துவிடமுடியும் என்று யோசித்தேன் எந்த பெயரும் நிலைக்கபோவதில்லை என்பதை அறிந்து எந்த தெய்வம் செய்கிறதோ அந்த தெய்வத்தை நேரிடையாகவே உங்களிடம் காட்டவேண்டும் என்பதால் அதனை காண்பித்தேன். நாளை நான் இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் தெய்வம் என்பது என்றும் இருக்கும்.

அங்காளபரமேஸ்வரியை நீங்கள் மற்றும் உங்களுக்கு பின்பு வரும் தலைமுறையினர் வேண்டுதலை வைத்தாலும் அது உங்களுக்கு நிறைவேற்றி வைத்துவிடும். நிலையான ஒன்றை நீங்கள் பிடித்துக்கொண்டு உள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன்.

என்னுடைய வேலை ஒரு மிகப்பெரிய சக்தி இருந்ததை கண்டுபிடித்தேன் அது நமக்கு மட்டும் ஏன் பயன்படுகிறது அனைவருக்கும் பயன்படவேண்டும் என்று நினைத்து வெளிக்கொண்டு வந்தேன். இன்று அனைவருக்கும் செய்துக்கொண்டு இருக்கிறது. 

தாராளமாக நீங்கள் வேண்டுதலை வையுங்கள் வேண்டுதல் வைத்தால் பணம் கொடுக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். வேண்டுதலை வைத்து உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள். உயர்த்திய பின்பு நீங்கள் அம்மனுக்கு செய்துக்கொள்ளலாம். செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: