Followers

Thursday, September 12, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                                                 ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். அவரின் கேள்விக்கு பதில்.
                   
nathan said...
Sir, நல்லவனா வாழ்றது( வாழ முயற்சி பண்றதும்) ஒரு தப்பா? ஏவல் சூநியகரர்களிடம் இருந்து விடுதலை பெற, தப்பிக்க எந்த மந்திரம் சிறந்தது. எதாவது காயத்ரி மந்திரம் அதற்கு இருந்தால் எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிதாங்க.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று பழைய மொழி இது. நாம் நன்றாக நல்ல மனதுடன் இருந்தால் கண்டிப்பாக அந்தளவுக்கு நம்மீது யாரும் பகைக்கொள்ள போவதில்லை. நம்மீது முன்ஜென்ம பகை இருந்தால் மட்டுமே ஒருவர் அதிகமாக கோபபடுவதற்க்கு காரணம் இருக்கும்.

அனைத்து பேர்களும் சூனியம் செய்கிறார்களா என்ன? இது எல்லாம் இந்த காலத்தில் மிககுறைவு தான். இதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருப்பது நல்லது.தெய்வத்தின் சக்தி இருக்கின்றது அந்த சக்தி நம்மை காப்பாற்றும் என்று நினைத்துக்கொண்டுருப்பது நல்லது.

மனதை போட்டு தேவையில்லாமல் குழப்பினால் தான் இப்படிபட்ட மனநிலை உருவாகும். மனதை ஒருநிலைப்படுத்தினால் இதனைப்பற்றி எல்லாம் கவலைப்படதேவையில்லை.

ஒரு காயத்ரி மந்திர பயிற்சி செய்தாலே போதுமான ஒன்று. அதனை செய்யும்பொழுது எந்த வித எதிர்மறையான செயல்கள் செய்திருந்தாலும் அது உங்களை விட்டு சென்றுவிடும். நம்பிக்கையுடன் ஒரு காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். காயத்ரி மந்திரத்திற்க்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: