Followers

Tuesday, September 24, 2013

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    எனது ஊரில் பல எதிர்ப்புகள் எனது குடும்பத்திற்க்கு ஒரு சில காலங்களில் கிளம்பியது. அப்பொழுது தனிகுடும்பமாக நின்று அந்த ஊரை எதிர்த்து போராடி வென்றார்கள் எனது குடும்பத்தில் உள்ள மூத்தோர்கள் அவர்களுடன் நின்றது நமது அம்மன் மட்டுமே.

எனது ஊரில் அதிகமாக வசிக்கும் மக்கள் ஒரே சமூகத்தினர் தான். அந்த சமூகத்தில் தான் நானும் பிறந்தேன். அந்த சமூகத்தினர் சண்டைக்கு என்றே பிறந்தவர்கள் என்று சினிமா படங்கள் எல்லாம் பார்ததாலே தெரியும். இந்த ஊரில் பல பிரச்சினைகள் எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த ஊருக்கும் வரும்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருந்து அந்த ஊரை சமாளித்தார்கள் என்றால் அதற்கு காரணம் அம்மனின் துணை தான். எங்கள் குடும்பத்தினர் அம்மனின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அந்த காரணத்தால் மட்டுமே அவ்வளவு பெரிய ஊரை சமாளித்து வெற்றி பெற்றனர். 

ஒரு ஊருக்கு இரண்டு பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன என்றால் அது எங்கள் ஊர் தான். மிகப்பெரிய ஊர் அந்த ஊரை தனிக்குடும்பம் நின்று பல காரியங்களில் ஜெயித்து இருக்கின்றது. அது எல்லாம் அம்மனின் அருள் மட்டு்ம் இருந்ததால் ஜெயித்தது.

அந்த நம்பிக்கையால் தான் நான் இன்று பல பிரச்சினைகளை எந்தவித பயம் இன்றி சந்திக்கின்றேன். ஒரு சிலர் என்னிடம் பேசும் பொழுது உங்களிடம் அம்மன் இருக்கின்றது என்ற கர்வம் இருக்கின்றது என்பார்கள். என்னிடம் கர்வம் இல்லை. நம்பிக்கை இருக்கின்றது அம்மனை முழுமையாக நம்புகின்றேன். 

எனது நம்பிக்கை எப்படி தெரியுமா புலிகள் தன்னுடைய இரையை தன் பற்களால் தேடுகிறது. மிகப்பெரிய கோரவிலங்குகளை தன் பற்களால் வேட்டையாடி உணவாக கொள்கிறது. அதே புலி தன் குட்டியை அதே பற்களால் தூக்கிக்கொண்டு காப்பாற்றுகிறது. அந்த புலிக்குட்டிக்கு தெரியும் தன் தாய் மிகப்பெரிய விலங்குகளை இந்த பற்களால் தான் வேட்டையாடுகிறது. இருந்தாலும் தாய் என்னை காப்பாற்றுவதற்க்கு தன் பற்களால் தூக்கிக்கொண்டு செல்கிறது என்று நம்பிக்கை வைக்கிறது பாருங்கள். அந்த நம்பிக்கையை அம்மன் மீது நான் வைத்துள்ளேன்.

இதேப்போல் அம்மன் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களுக்கும் அம்மன் தன் குழந்தைப்போல் காப்பாற்றுவாள்.உங்களை காப்பாற்றுவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: