Followers

Tuesday, September 3, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு குருநாதர் தேர்ந்தெடுத்தேன். பல சாமியார்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். ஏன் என்றால் ஒவ்வொரு சாமியாரும் ஒரு புதுவிதமான ஒரு வித்தையை கற்றுவைத்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வித்தையையும் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன்.

ஏன் என்றால் ஒரு தொழிலை நாம் தெரிந்துக்கொள்வதற்க்கு பல நிபுணர்களின் ஆலோசனை தேவை என்பதால் பல பேர்களையும் நாடி சென்றேன். அவர்களும் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் கற்றுக்கொடுத்தனர். பல பேர்கள் நம்மிடம் இருக்கும்பொழுது எப்பேர்ப்பட்ட பிரச்சினையும் நாம் எதிர்க்கொள்ளமுடியும் என்பதால் பல சாமியார்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தினேன். 

இன்றைய தேதியில் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்கள் பல பேர்கள் எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. பெரிய காரியங்களை செய்வதற்க்கு எல்லாம் இவர்கள் இருப்பதால் தான் துணிந்து எடுக்கிறேன். அவர்களின் ஆசியால் துணிந்து செய்யமுடிகின்றது.

எப்படியும் வாரத்திற்க்கு ஒன்று இரண்டு சாமியார்கள் என்னை தேடி வருவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்துக்கொடுத்துவிடுவேன்.நான் சோதிடத்தில் சம்பாதிக்கும் பணம் பாதி இவர்களுக்கு செல்கிறது. பரவாயில்லை ஒரு சந்நியாசிக்கு தானே செய்கிறோம். பல வாய்ப்புக்கள் நம்மை தேடிவரும் என்று செய்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு சில சாமியார்கள் அவர்களே என்னை தேடிவந்து பணம் கொடுப்பார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.ஒரு நேரத்தில் எனக்கு நண்பர்கள் என்றால் இவர்கள் தான் இன்று பல நண்பர்கள் இருக்கின்றார்கள் அதாவது ஆன்மீகவாதி இல்லாத நண்பர்கள்.

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: