Followers

Saturday, September 7, 2013

நல்ல வழி


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று அவசியமான பதிவு என்று ஒரு பதிவை எழுதினேன். பல நண்பர்கள் என்னிடம் இதனைப்பற்றி கேட்டார்கள். 

ஒரு ஜாதகத்தை எடுத்து பலனை சொல்லுவது மட்டும் நமக்கு வேலை கிடையாது. அந்த ஜாதகத்தை வைத்து நாம் என்ன செய்து கொடுக்கபோகிறோம் என்பதை தான் நாம் அதிகமாக பார்க்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஜாதக பலன் சொல்லுவதை அனைத்து மக்களும் கற்று உள்ளார்கள் என்று சொல்லவேண்டும்.

காலையில் டிவியை ஆன் செய்தால் பத்து மணி வரை ஒவ்வொரு சோதிடராக வந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் பேசுவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு அனைவருக்கும் ஒரளவு சோதிடத்தைப்பற்றி தெரிகிறது.நெட்டிலும் சோதிட பாடங்கள் வந்துககொண்டு இருப்பதால் அனைவருக்கும் பலன்கள் நன்றாக தெரிகிறது.

நாம் பலன்களை சொன்னாலும் பலன்கள் எங்களுக்கு தெரியும். இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி என்று மட்டும் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் செய்துக்கொடுக்கும் பரிகாரம் தான்  தேவை என்ற நிலை இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. ஒரு ஜாதகத்தை நாம் பார்க்கும்பொழுது அதுவே ஒரு வழியையும் ஏற்படுத்திதருகிறது. அந்த வழியை நாம் கண்டுபிடித்து அதன் வழியாக அவர்களுக்கு ஒரு நல்லதீர்வை ஏற்படுத்தி தரவேண்டும்.

ஒரு நபர் அரசியல்வாதியிடம் உள்ள பணத்தை எடுக்கமுடியுமா என்று கேட்டிருந்தார். அடுத்தவர்களின் பணத்தை நாம் ஏன் எடுக்கவேண்டும். நீங்கள் ஒரு தொழில் ஆரம்பியுங்கள் அதன் வழியாக அந்தளவுக்கு பணத்தை சம்பாதிக்கமுடியும். சோதிடமும் சரி ஆன்மீகமும் சரி நல்ல வழியில் செல்வதற்க்கு நல்ல உதவி செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: