Followers

Tuesday, September 24, 2013

சிவன் என்றாலே வலி


வணக்கம் நண்பர்களே!
                     வெளிநாடுக்களுக்கு செய்யும் வேலையை நமது அம்மனை வைத்து மட்டும் செய்தால் போதாது அம்மனோடு பல பேரை அனுப்ப வேண்டியுள்ளது. அப்படி அனுப்பும் பொழுது அதிகமாக சிவனின் ரூபங்களை வைத்து இந்த வேலையை செய்வோம். 

சிவனை வைத்து செய்யும்பொழுது நாம் சந்நியாசிகளாக இருந்தால் நல்லது. நான் சந்நியாசி தீட்சை வாங்கவில்லை. சிவனை வைத்து செய்வதால் சிவன் பல வழிகளில் தொந்தரவை தருவார். பல அடிகளை நான் வாங்கியுள்ளேன். இப்பொழுது பல வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு செய்ய வேண்டியுள்ளதால் சிவனை அழைக்க வேண்டியுள்ளது. 

சிவனிடம் அடிவாங்கிக்கொண்டு செய்கிறேன். பல பேர் சிவனை வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பல மந்திரங்களை கற்று தருகிறார்கள் ஆனால் நம்மால் அடிவாங்காமல் செய்ய முடியவில்லையே என்று நினைப்பது உண்டு. 

இதனைப்பற்றி குருவிடம் கேட்டேன். சந்நியாசி தீடசை வாங்கினால் தாண்ட சிவன் நிற்பார் இல்லை என்றால் பிரச்சினை தான் என்பார். நான் அவரிடம் அவர் மட்டும் குடும்பத்தோடு வாழலாம். நாங்கள் வாழ்ந்தால் அவருக்கு பிடிக்காதா என்பேன். 

அதற்கு குரு சிவனை சதாசிவமாக நினைத்து வணங்கினால் உனக்கு பிரச்சினை இல்லை அதனை விட்டு மேலே சென்றால் உனக்கு பிரச்சினை தான் என்று சொல்லுவார். 

என்னமோ அவர் நியாயமாக நடந்துக்கொள்ளவில்லை என்று சொல்லுவேன். என்ன செய்வது பணத்திற்க்காக அடிவாங்கிதான் ஆகவேண்டும். சிவன் என்றாலே வலிக்குது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

சிவன் என்றாலே அன்பு