Followers

Sunday, September 15, 2013

புதிய வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே !
                    நமது ஜாதககதம்பத்தின் வழியாக தொழில் செய்பவர்களுக்கு உதவது உங்களுக்கு தெரிந்த ஒன்று. பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு நீங்கள் பெரிய தொழில்களை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள். சிறிய அளவில் இருக்கும் முன்னேற்றத்திற்க்காக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கு எதுவும் செய்வதில்லை எங்களுக்கும் ஒரு உதவியை செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். நாங்கள் எந்த தொழிலும் செய்யாமல் இருந்துக்கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு எதாவது ஒரு தொழில் அமைவது போல் செய்து தாருங்கள் என்று கேட்கிறார்கள்.

ஜாதககதம்பம் வழியாக வரும் நபர்களுக்கு எப்படியும் ஒரு சிறிய உதவியாவது செய்து தரவேண்டும் என்று நினைப்பதால் தான் முடிந்தளவு பல செய்திகளை தந்துக்கொண்டு இருக்கின்றேன். சிறிய தொழிலில் லாபம் குறைவாக இருக்கும் அதனை நீங்கள் எனக்காக ஒரு தொகை அனுப்பவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அனுப்புவீர்கள் அதனால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படும். இந்த ஒரு காரணத்தால் மட்டுமே இதனை தவிர்க்கிறேன்.

ஒரு தொழிலுக்கு உதவி செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று அதில் பல கஷ்டங்கள் எனக்கு இருக்கின்றது.ஏதோ தொழிலுக்கு உதவி செய்கிறேன் என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்கமுடியாது. அவர்களுக்காக கடுமையாக கஷ்டபடவேண்டும். இன்று மிகப்பெரிய கம்பெனிகளே வருகின்றது ஆனால் அதனை எல்லாம் பொறுமையாக எடுத்துக்கொண்டு இருக்கின்றேன். அனைத்தையும் சரியான முறையில் செய்யவேண்டும் என்ற காரணத்தால் மட்டுமே செய்கின்றேன்.

முதலில் உங்களுக்கு தொழில் அமையவில்லை என்றால் நமது அம்மனின் ஹோமத்தை நடத்திக்கொள்ளுங்கள். அதற்கு பிறகு அம்மன் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு உதவி செய்து புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கி தரும். அதனை பிடித்து மேலே வந்தபிறகு படிப்படியாக நீங்கள் என்னை அணுகி உங்கள் தொழிலின் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: