Followers

Monday, September 2, 2013

அம்மனின் ஹோமம்


வணக்கம் நண்பர்களே !
                    நமது பிளாக்கின் வழியாக ஹோமம் நடத்தப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை பல பேர்கள் என்ன ஹோமம் என்று கேட்கிறார்கள். 

எந்த ஒரு தெய்வத்தையும் ஒருவருக்கு நல்லது செய்ய வைக்கவேண்டும் என்றால் அதனை அவர்களின் வீடுகளில் அந்த சக்தியை நிலைநாட்டவேண்டும். அப்படி ஒரு சக்தியை ஒரு இடத்தில் நிலைநாட்ட அக்னியால் மட்டுமே முடியும். அதன் பிறகு அவர்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.

நமது அம்மனை கொண்டு தான் அனைவருக்கும் நல்லதை செய்கிறேன். ஒருவருக்கு நல்லதை செய்ய இந்த ஹோமத்தை அவர்களின் வீடுகளில் செய்யும்பொழுது அவர்களுக்கு எளிதில் நமது அம்மன் நல்லது செய்யும். நமது அம்மன் செய்தாலும் அவர்களின் குலதெய்வத்தின் துணையோடு மட்டுமே இதனை செய்யமுடியும்.

நாங்கள் செய்யும் ஹோமத்தில் எந்த ஒரு மந்திரமும் வெளியில் சொல்லுவது கிடையாது. புரோகிதர் போல் வெளியில் மந்திரங்களை சொல்லுவது கிடையாது. எல்லாம் மனதால் மட்டும் செய்யகூடிய மந்திரம். மனதால் செய்யகூடிய மந்திரங்களுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கின்றது.

இந்த ஹோமம் உங்களின் வீடுகளில் செய்யும் பொழுது உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் நன்மை வந்து சேரும். குறைந்த காலகட்டத்தில் இதனை நிறைவேற்றி கொடுத்துவிடும். பதிவுக்கு வரும் பல பேர்கள் இதனை செய்துக்கொண்டு நல்லவாழ்க்கையை அடைந்துள்ளார்கள்.

பணம் எவ்வளவு என்று கேட்கிறீர்களாக அது ஆட்களை பொருத்து அமையும். இதில் வரும் பணத்தைக்கொண்டு பல ஏழை வீடுகளுக்கு இதே ஹோமத்தை செய்ய நினைக்கிறேன். வசதியுள்ளவர்கள் தாராளமாக கொடுக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: