Followers

Monday, September 2, 2013

இதனை படியுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று பல பேர்கள் காலபைரவரின் மந்திரங்களை பயன்படுத்தி வருகின்றீர்கள். உங்களை சோதனை செய்வதற்க்கு ஒரு வழியை நான் சொல்லுகிறேன் இது உங்களுக்கு நடந்திருக்கும்.

காலபைரவர் மந்திரங்களை பயன்படுத்தினால் உங்களின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்துவிடும். உங்களின் வீட்டில் அதிகமான சண்டைகள் நடந்திருக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டு இருக்கும். இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் பயின்றுக்கொண்டிருக்கும் காலபைரவ மந்திரம் தானே அன்றி வேறு ஏதும் இல்லை.

காலபைரவரை பொருத்தவரை இல்லறவாசிகளுக்கு அந்தளவுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவர் நல்லது செய்வார் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவருக்கு நீங்கள் நைவேத்தியமாக கொடுக்கவேண்டிய ஒரு பொருளை நீங்கள் கொடுக்காமல் இருந்திருப்பீர்கள். என்ன நைவேத்தியம் என்பதை பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். அதனை நீங்கள் கொடுக்காமல் செய்தால் பிரச்சினை தான். நீங்களே சோதித்து பாருங்கள் நீங்கள் சொன்ன மந்திரத்தால் உங்களின் குடும்பத்தில் பிரச்சினை வந்திருக்கும்.

காலபைரவரை வணங்குபவர்கள் யார் தெரியுமா நல்ல இருக்கலாம் அவன் தாதாவாக இருக்கவேண்டும. அவனுக்கு நல்ல வாரிக்கொடுப்பார் அவனை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார். வேறு யாருக்கும் அவர் எந்த பைரவராக இருந்தாலும் செய்யமாட்டார்.

சனியின் தாக்கத்தின் போது கோவில் இருக்கும் பைரவரை வணங்கலாம். அவரை வீட்டிற்க்குள் அழைத்து வந்து வணங்கினால் உங்களுக்கு பிரச்சினை தான். நீங்கள் வணங்குவதாக இருந்தால் கோவிலுக்கு சென்று வணங்கிக்கொள்ளுங்கள்.

பைரவரை வணங்கினால் உங்களின் மனைவி மற்றும் உங்களின் அம்மா இருவருக்கும் சண்டை ஏற்பட்டுவிடும். அப்புறம் உங்களின் பாடு சிக்கல் தான். இதனை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் பல பேர்கள் கஷ்டப்பட்டு கொணடு இருக்கிறார்கள்.

எந்த ஒரு வழியிலும் ஆன்மீகத்தை அடையலாம் ஆனால் நாம் செயல்படுத்தும் விதம் என்பது முக்கியம். இல்லறத்தில் இருப்பவர்களும் ஆன்மீகத்தில் உச்சத்திற்க்கு செல்லமுடியும் ஆனால் அவர்களுக்கு செயல்படும் விதம் தெரியாமல் இருக்கின்றது. 

காலபைரவர்க்கு என்று நீங்கள் பூஜை செய்தாலும் செய்யும்பொழுது அவர்க்கு செய்யவேண்டியதை செய்துவிட வேண்டும் அப்பொழுது மட்டுமே அவர் திருப்தி அடைவார்.

உங்களின் நண்பர்களுக்கும் இதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுங்கள். மெயிலிலும் அனுப்புங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

பிரசன்ன குமார். மு said...

ஐயா வணக்கம்

//காலபைரவர்க்கு என்று நீங்கள் பூஜை செய்தாலும் செய்யும்பொழுது அவர்க்கு செய்யவேண்டியதை செய்துவிட வேண்டும் //

என்ன என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்

நன்றி

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே பழைய பதிவுகளில் சொல்லியுள்ளேன். தேடி பாருங்கள். நன்றி