Followers

Friday, September 6, 2013

அவசியமான பதிவு


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பத்தின் வழியாக வரும் நண்பர்களுக்கு வியாபாரத்தில் உதவி செய்கிறோம். பல பேர்க்கு இவர் எப்படி இதனை செய்கிறார் என்ற கேள்வி தான் கேட்கிறார்கள். அதாவது ஆன்மிகத்தில் எப்படி சாத்தியப்படுகிறது. 

முதலில் ஒரு கம்பெனியை எடுக்கும்பொழுது அவர்களிடம் பணம் வாங்காமல் தான் எடுக்கிறேன். முதலில் அம்மனுக்கு ஒரு பூஜையை செய்துவிடுவேன். அம்மன் அந்த கம்பெனியை பார்த்து முதலில் சிறிதளவு செய்யும். அவர்களுக்கு சிறு முன்னேற்றத்தை தரும். அவர்களுக்கு நன்றாக எதனால் முன்னேற்றம் வருகிறது என்று தெரியும். அது ஒரு காலம் வரை தான் செய்யும். அதன் பிறகு அவர்கள் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அதன் பிறகு தான் அவர்களின் ஜாதகத்தை வாங்குவேன். ஒருவர் ஜாதகம் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜாதகத்தை வாங்குவேன். 

குடும்பத்தில் உள்ள அனைவரின் ஜாதகத்தையும் வாங்கும்பொழுது அந்த ஜாதகத்தில் யாராவது ஒருவரின் ஜாதகத்தில் ஒரு சின்ன தகவல் கிடைக்கும். அந்த தகவலை வந்து தான் மொத்தத்தையும் மாற்றிவிடுவேன். ஜாதகம் என்பது முக்கியமான ஒன்று. ஜாதகத்தை வைத்து அனைத்து வேலையும் நடத்திவிடுவேன். அவர்களால் நம்பமுடியாத வளர்ச்சி அவர்களுக்கு நடைபெறும். 

ஜாதகத்தை வைத்து தான் அனைத்துமே இருக்கின்றது. ஒவ்வொரு ஜாதகத்திலும் பல ரகசியங்கள் இருக்கின்றது. அந்த ரகசியத்தை கண்டுபிடித்து விட்டால் போதும் அவன் எப்பேர்பட்ட வீழ்ச்சியில் இருந்தாலும் அவனை தூக்கி நிறுத்தமுடியும்.

அதனால் தான் என்னிடம் வியாபாரத்திற்க்காக வரும் நண்பர்களிடம் சொல்லும் வார்த்தை என்னிடம் ஒழுங்காக நடந்துக்கொள்ளுங்கள். உங்களை தேடி அனைத்தும் வரும் என்பேன்.

ஜாதகத்தில் கையில் எடுப்பது என்பது வரும் நண்பர்களை பொருத்து அது அமையும். இந்த வேலை பார்ப்பது என்பது நெருப்பில் நின்றுக்கொண்டு வேலை பார்ப்பது போலதான். அதில் அவ்வளவு கஷ்டங்கள் எனக்கு இருக்கின்றது. இதனை செய்வதற்க்கு என்னுடைய வாழ்நாட்களை இழந்திருக்கிறேன். அதற்கு கிடைக்கவேண்டியது எனக்கு கிடைக்கவேண்டும்.

அனைத்தும் நம்பிக்கையில் தான் இருக்கின்றது. என்னை நம்பி வந்துவிட்டால் அவர்களுக்கு நல்ல ஆரம்பம் இருக்கின்றது என்று அர்த்தம் அதேபோல் அவர்களுக்கு எதிராக ஒன்றும் நான் செய்வதில்லை. வேண்டாம் நான் போகிறேன் என்று சொல்லும்பொழுது நான் அவர்களை எதுவும் செய்வதில்லை. தாராளமாக செல்லுஙகள் என்று சொல்லிவிடுவேன். அம்மன் அவர்களை விட்டு வெளியில் வந்துவிடும்.

அனைத்தும் சோதிடம் வழியாக தான் நடைபெறும். சோதிடத்தில் சிறிதளவு ஆன்மீகத்தை கலந்தால் வெற்றி கிடைத்துவிடும். நான் பலபேர்க்கு செய்யும் பொழுது ஜாதகத்தை கையில் எடுக்கும் காலம்வரை கூட தங்கமாட்டார்கள். கொஞ்ச வளர்ச்சியை பார்த்தவுடன் ஓடிவிடுவார்கள். மனிதனின் சுபாவம் அது. நான் என்ன செய்யமுடியும் போனவரை சரி என்றுவிட்டுவிடுவேன்.

ஜாதகத்தில் பல மேட்டர் இருக்கின்றது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் அப்படியே புத்தகத்தில் உள்ள விசயத்தை படித்துவிட்டு மனபாடம் செய்து ஒப்பித்தல் வேலை செய்வது இது தவறான ஒன்று.

நான் பார்ப்பது ராசிகட்டம் ,நவாம்சம், நட்சத்திரம் சாரம் மற்றும்  தசா அவ்வளவு தான் எனது சோதிடம். இதனை வைத்து அனைத்து வேலையும் நடத்துவது எனது தொழில் இதனை நீங்கள் நன்றாக கற்று நீங்கள் பிறர்க்கு செய்யும்பொழுது உங்களை நாடி அனைத்தும் வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: