Followers

Monday, September 2, 2013

ஸ்பார்க்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் என்னிடம் எங்களுக்கும் ஸ்பார்க் ஆகவேண்டும் அதனை நீங்கள் காட்டுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். அதாவது கடவுளைப் பற்றி என்ன தான் தெரிகிறது அந்த அனுபவத்தை பெறவேண்டும் என்று கேட்கிறார்கள். அனைவருக்கும் அந்த எண்ணம் வருவது இயல்பு.

தாய் தந்தையை காட்டவேண்டும். குரு தெய்வத்தை காட்டவேண்டும் இது தான் நியதி. உங்களுக்கு ஒரு குரு அமையும்பொழுது அந்த தெய்வம் உங்களுக்கு தெரியவரும். என்னை குருவாக ஏற்றுக்கொள்ளமுடியாது ஏன் என்றால் அந்த பக்குவம் என்பது அவ்வளவு எளிதில் வருவதில்லை.

குரு அமைந்து அதன் பிறகு தான் அனைத்தும் நடைபெற ஆரம்பிக்கும். ஆன்மீகத்தை பொருத்தவரை அதிகமாக உழைக்கவேண்டும். அவர் கொடுத்தாலும் நீங்கள் உழைக்கும்பொழுது மட்டுமே அதனை நீங்கள் அடையமுடியும். 

என்னை நாடி உங்களுக்கு ஒன்றும் நடைபெறபோவதில்லை அதாவது ஸ்பார்க் எல்லாம் நடக்காது. ஒரு சில நேரத்தில் இந்த பிளாக்கை படித்தால் நடப்பது போல் வைத்திருந்தேன் இப்பொழுது அதுவும் இல்லை. எல்லாவற்றையும் கட்டுபடுத்திவிட்டேன். ஏன் என்றால் சம்பந்தமே இல்லாமல் எனக்கு தொந்தரவு வருகின்றது.

அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் குருநாதரின் கட்டளையால் அதனை தவிர்க்கிறேன். அம்மனிடம் வேண்டினால் உங்களுக்கு செய்து தரும். அது ஸ்பார்க்காக இருக்காது. உங்களின் வேண்டுதல்கள் மட்டும் நிறைவேற்றிக்கொடுக்கும்.

மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லுவது என்ன என்றால் ஒரு குருவை தேர்ந்தெடுத்துவிட வேண்டும். அந்த குருநாதர் அனைத்தையும் உங்களுக்கு கொடுத்துவிடுவார். குருநாதர் வேண்டும் என்று சொல்லுவதால் என்னுடைய குருநாதரை தேடி வரக்கூடாது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: