Followers

Sunday, September 1, 2013

பரிகாரம்: குரு+சந்திரன்


வணக்கம் நண்பர்களே!
                    குரு சந்திர மங்கல யோகத்தைப்பற்றி பழைய பதிவில் பார்த்திருந்தோம். இந்த யோகத்தால் என்ன பயன் என்றால் நல்ல பணவரவு வந்துக்கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட நிலையிலும் பணம் வரும்.

குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தால் அல்லது குரு சந்திரனை தன் பார்வையால் பார்த்தால் குரு சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. 

இந்த யோகத்தால் ஒரு பிரச்சினை இருக்கின்றது அது என்ன என்றால் இந்த யோகத்தை உடையவர்கள். வேலை செய்யும் இடத்தில் இவர்களுக்கும் இவர்களின் மேல் அதிகாரிக்கும் ஒத்துவராது. மேல் அதிகாரிகள் இவரைகளை வஞ்சிப்பார்கள். அவர்களிடம் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும்.

மேல் அதிகாரிகள் ஏதாவது குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒன்று சொன்னால் மேல் அதிகாரி வேண்டும் என்றே இவர்க்கு எதிராக எதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட யோகத்தை உடையவர்கள் மேல் அதிகாரிகளின் கண்களில் படாமல் இருப்பதே மேல். இவர்களுக்கு பரிகாரம்.

ஆலங்குடி குருபகவானை திங்கள் கிழமை சென்று வணங்கிவாருங்கள்.அப்படி வணங்கி வரும்பொழுது இந்த யோகத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

KJ said...

Sir, hw abt guru in chandran house and chandran in guru house.. Parivarthana...

rajeshsubbu said...

வணக்கம் KJ அது லக்கினத்தை பொருத்து அமையும். நன்றி

INTRADE SHARE CALLS said...

sir guru chandran yogathila chandran neecham adancha enna palan sir

rajeshsubbu said...

வணக்கம் சந்திரன் நீசமானால் ஒன்றும் பிரச்சினை இல்லை அது தான குருவின் துணை இருக்கின்றதே பிறகு எதற்கு கவலை