Followers

Monday, October 7, 2013

ஆன்மீக அனுபவங்கள் 119


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் ஒரு சிலர் பேசும்பொழுது கேட்கும்கேள்வி ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களை பார்க்கமுடியாதாமே உண்மையா என்று கேட்கிறார்கள்.
அவர்கள் கேட்பது நான் ஆன்மீகவாதி என்னை வெளியில் பார்க்கமுடியாது இந்த நாட்களில் மட்டும் மக்களை சந்திப்பேன் என்று சொல்லுபவர்கள் பற்றி தான் கேட்கிறார்கள் என்று தெரிகிறது.

மக்களை ஒருவர் சந்திந்து விட்டால் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கமுடியும். எனது குரு யாரையும் சந்திப்பது கிடையாது. மக்களை சந்திப்பது கிடையாது. எப்பொழுதாவது செல்லும் வழியில் உள்ளவர்களை அதுவும் ஏழையாக அல்லது மிகவும் கஷ்டப்படுபவர்களை சந்திப்பது உண்டு. அவர்களை பார்த்துவிட்டு அப்படியே சென்றுவிடுவார். அவர்களோடு தொடர்பு கிடையாது. அவர் தன்னை வெளிப்படுத்தியது கூட கிடையாது.

நான் கூட அவரிடம் கேட்டேன். நமது தளத்தில் உங்களின் போட்டோவை போட்டு அனைவரையும் சந்திக்க வைக்கலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் அது எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அவர் மக்களை பார்க்கிறார் எப்படி என்றால் அவர் செல்லும் வழியில் உள்ள மக்களுக்கு நல்லது செய்கிறார். அவர் பார்ப்பதே நல்லது தான். தன்னை அந்த மக்களுக்கு நான் யார் என்று கூட சொல்லமாட்டார்.ஏன் என்றால் அவரை தெரிந்துவிட்டால் மக்கள் கூடி அவருக்கு ஒரு கூட்டம் கூடிவிடுவார்கள் என்று நினைப்பதால் மட்டுமே. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு ஆன்மீக வாழ்வு வாழவேண்டும் அவர் நினைப்பதால் மட்டுமே அப்படி செய்கிறார். அவர் செல்லும் வழியில் நீங்கள் இருந்தால் அவரை நீங்கள் சந்திக்கலாம். அவர் எந்த வித வழியில் சென்றுக்கொண்டு இருக்கிறார் என்று கூட நான் சொல்லுவதில்லை. அவரைப்பற்றி எந்த வித தகவலும் நான் சொல்லகூடாது என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு.

சாதாரண மக்கள் அவரை சந்திக்க வைப்பதே கடவுளின் ஏற்பாடு மட்டுமே. அந்த பாக்கியத்தை பெறவேண்டும் என்றால் நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும். மற்றபடி அவர் எல்லா மக்களையும் சந்திக்கிறார். என்னை தொடர்புக்கொண்டு அவரை சந்திக்கவேண்டும் என்றால் அவரை கண்டிப்பாக அவரை சந்திக்கமுடியாது. 

ஆன்மீகவாதி என்னை சந்திக்கமுடியாது என்று சொல்லுவது எல்லாம் வெறும் பொய். அனைவரையும் சந்திக்கமுடியும். மிகப்பெரிய ஆன்மீகவாதி எல்லாம் சாதாரணமாக ரோட்டில் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். என்ன அவர்கள் விளம்பரத்தை தேடுவதில்லை. அவர்கள் அவர்களின் வேலையை மட்டும் செய்துக்கொண்டு செல்கிறார்கள்.  ஒரு ஆன்மீகவாதி வெளியில் தெரிந்தபிறகு அவரை எப்ப வேண்டுமானாலும் சந்திக்கமுடியும்.

நாளை 08/10/2013 அன்று பாண்டிச்சேரியில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: