Followers

Tuesday, October 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 123


வணக்கம் நண்பர்களே !
                    மரணத்தைப்பற்றி சொல்லிருந்தேன் அல்லவா. ஒரு ஆன்மீகவாதியிடம் போய் நீங்கள் இறப்பது எப்பொழுது என்று கேட்டாள் அவர் சிரிப்பார். ஏன் என்றால் இந்த உடல் அழிவது மட்டுமே மரணம் எங்களை பொருத்தவரை ஆத்மா அழிவதில்லை அது என்றும் இருந்துக்கொண்டே இருக்கும் என்பார்கள்.

இதையோ சித்தர்களின் வழியில் உள்ளவர்களை கேட்டால் எனது உடலும் அழிவதில்லை ஆத்மாவும் அழிவதில்லை என்று சொல்லுவார்கள். அவர்களின் வழி அப்படிப்பட்டது. மரணத்தைப்பற்றி கொஞ்சம் கூட பயம் இருக்காது.

இப்பொழுது நாங்கள் ஒரு சிலருக்கு செய்யும் வேலை எல்லாம் தன்னுடைய ஆத்மாவை பிரித்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்று செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அது எல்லாம் மரணத்திற்க்கு சமமானது தான். இதனை நீங்களும் செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்ன உங்களுக்கு அதனை உணர்வது கிடையாது. அப்படி உணர்ந்து விட்டால் நீங்களும் ஒரு மகான்கள் போல் தான் உங்களால் மரணத்தை வெல்லமுடியும்.

கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் கொஞ்சம் உணர்வோடு இருக்கும்பட்சத்தில் நீங்களும் இதனை எல்லாம் எளிதில் செய்யமுடியும். நீங்கள் காணும் கனவு கூட அதனை நோக்கி தான் இருக்கும். அதனை எல்லாம் ஒன்று சேர்த்து பார்த்து கொண்டு வந்தால் உங்களுக்கு எளிதில் விளங்கிவிடும்.

உங்களை அறியாமலே வேறு உலகத்திற்க்கு சென்றுவருவீர்கள் அது எல்லாம் முன்ஜென்ம ஞாபகம். அதனை எல்லாம் ஒன்று சேர்த்து பாருங்கள். நீங்களும் ஆன்மீகவாதியாக மாறிவிடுவீர்கள். உங்களின் ஆத்மாவும் வெளியில் செல்லுகிறது என்ன அதனை உணர்வதற்க்கு இந்த ஜென்மத்தில் வாய்ப்பு இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் இது நடைபெறும். கடவுள் பாரப்பட்சம் இல்லாமல் இதனை உங்களுக்குள் நடத்திக்கொண்டிருக்கிறார். கடவுள் நடத்தும் இந்த லீலையை தெரிந்துக்கொண்டாலே போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: