Followers

Tuesday, October 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 124


வணக்கம் நண்பர்களே!
                           கடந்த ஆன்மீக அனுபவங்களில் செத்தது போல் செய்து பாருங்கள் என்று சொல்லிருந்தேன் அல்லவா. நீங்கள் நிஜமாகவே இன்று இரவு சாகபோகின்றேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஏன் என்றால் மனதிடம் சொல்லிவிட்டால் அது தன்னை தானே அழித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றது. அது பாட்டுக்கும் உயிரை வெளியில் எடுத்துக்கொண்டு சென்றுவிடும். சும்மா நடிப்பது போல் நினைத்து பார்க்கவேண்டும்.

நாங்கள் செய்வது எல்லாம் உண்மையில் உயிரை வெளியில் எடுக்கும் வேலை. அந்த உயிர் மறுபடியும் தன்னுடைய உடலுக்கு கொண்டுவருவதற்க்கு அம்மன் மற்றும் குருநாதர் உதவிசெய்வார். நீங்கள் ஆழ்ந்த தியானத்திலேயே இதனை உணரமுடியும். உயிர் உங்களை விட்டு செல்லும். மறுபடியும் நமது உடலுக்கு வரும். இது எல்லாம் மிகவும் அபாயகரமான ஒரு வித்தை.

நாம் தூங்கும்பொழுது வெளியில் செல்லும் உயிர்க்கு பாதுகாப்பு என்பது நமது குலதெய்வம் மற்றும் நமது பூர்வபுண்ணியத்தால் நமக்கு கிடைக்கிறது. இதனைப்பற்றி கிராமத்தில் சொல்லுவார்கள் தூங்கும்பொழுதும் போனாலும் போகலாம் சுழி மாறினாலும் உயிர் போகலாம் என்பார்கள். தூங்கும்பொழுது வெளியே செல்லும் உயிர் அப்படியே போனாலும் போகலாம். நமது விதி மாறிவிட்டாலும் நமது உயிர் போகலாம். இதனை கிராமத்தில் சிறிய பாடல் போலவே பாடுவார்கள்.

ஒரு குரு என்பவர் கண்டிப்பாக தேவை என்பது இதனால் தான். உங்களுக்கு உயிரைப்பற்றி கவலை இல்லை என்றால் கண்டிப்பாக இந்த பயிற்சி செய்து பார்க்கலாம். என்னை ஒருவரும் கையை காட்டகூடாது. இவர் தான் சொன்னார் என்று எதிலும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிடாதீர்கள்.

அப்படி எல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏன் என்றால் யாரும் உயிருக்கு பயந்து இந்த மாதிரி பயிற்சி எல்லாம் எடுக்கமாட்டீர்கள். எல்லாம் வார்த்தையில் சொல்லலாம் ஆனால் செயலில் இறங்கும்பொழுது நம்மை உதறி தள்ளிவிட்டு உடம்பை எடுத்துக்கொண்டு நான் உயிர்வாழவேண்டும் என்று வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment: