Followers

Saturday, October 26, 2013

ஆன்மீக அனுபவங்கள் 127


வணக்கம் நண்பர்களே!
                   திருப்பூரில் என்னை சந்தித்த நண்பர்களிடம் சொன்ன ஒரு விசயத்தை உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அதனைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். திருமணம் முடித்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியாதா உயர்ந்தநிலைககு செல்லமுடியாத என்று தான் பேச்சு நடைபெற்றது. 

திருமணம் முடிந்தவர்களால் கண்டிப்பாக ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும். சந்நியாசிகள் மட்டும் தான் செல்லமுடியும் என்று சொல்லுவது எல்லாம் வீண். சந்நியாசிகள் சொல்லுவது கர்மம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அது மட்டுமே.

எத்தனையோ பேர் திருமணம் முடித்தவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்று இருக்கின்றனர். புத்தர், முகமது போன்றவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எப்படி உயர்ந்த நிலைக்கு சென்றனர் என்று நீங்கள் யோசிப்பது கிடையாது. பல பேர் வெளியில் தெரியாமல் இருக்கின்றனர். நீங்கள் திருமணம் செய்தவுடன் நமக்கும் ஆனமீகத்திற்க்கும் ஒற்றுவராது என்று நீங்களாவே சொல்லிக்கொள்கிறீர்களே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

திருமணம் முடிந்தவுடன் பல வேலைகள் இருக்கும் அதில் எங்கே நாம் ஆன்மீகத்திற்க்கு செல்வது என்ற நினைப்பு தான் உங்களை ஆன்மீகத்தில் செல்லாமல் இருக்கின்றது. திருமணம் முடித்தவர்களுக்கு தான் ஆன்மீகம் தேவை அவர்கள் தான் அதிகப்பட்சமான சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

திருமணம் முடிந்துவிட்டது நாம் ஆன்மீகத்திற்க்கு லாயக்கற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் உடனே ஆன்மீகவாழ்க்கைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: