Followers

Monday, October 28, 2013

ஆன்மீக அனுபவங்கள் 128


ணக்கம் ண்பர்களே!
                    எனது நினைப்பு எங்கு இருக்கின்றதோ அங்கு தான் அம்மன் வாசம் செய்யும் இடமாக இருக்கும். நான் எங்கு அடிக்கடி செல்கி்ன்றனோ அங்கு அம்மனின் பார்வை அதிகமாக விழும். இதனால் தான் நான் அடிக்கடி பல இடங்களுக்கு விசிட் செய்வது எல்லாம் உண்டு.  அடையார் மற்றும் கொட்டிவாக்கம் இருக்கும் நமது நண்பர்கள் என்னை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது இந்த காரணத்தால் மட்டுமே. 

நான் அங்கு செல்வதால் அங்கு அம்மனின் வாசம் இருக்கும்பொழுது அவர்களுக்கு பிரச்சினை வராது. அதனாலேயே அந்த நண்பர்கள் விடுவதில்லை. இப்பொழுது தான் பல இடங்களுக்கு நான் சென்று வந்துக்கொண்டு இருக்கின்றேன். நான் சென்ற இடங்கள் நன்மை பெறுவதும் இந்த காரணத்தால் மட்டுமே.

இப்பொழுது என்னிடம் வரும் நண்பர்கள் எல்லாம் ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு உடனே போன் செய்வார்கள். நான் உடனே அம்மனை நினைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை நினைக்கும்பொழுது அவர்களிடம் அம்மன சென்றுவிடும். அப்புறம் அவர்களின் பிரச்சினை தீரும்.இப்படி தான் பிரச்சினையை தற்பொழுது தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதனை செய்வதற்க்கு என்று தகுந்த பயிற்சியை நாம் எடுக்கவேண்டும் அப்பொழுது மட்டுமே நடைபெறும். இதனை செய்வதற்க்கு அவ்வளவு பாடு பட்டு இதனை கண்டுபிடித்து செய்துக்கொண்டிருக்கிறேன். 

ஒரு அம்மனை நாம் நினைக்கும் இடத்திற்க்கு அனுப்பவேண்டும் என்றால் அவ்வளவு எளிது கிடையாது. நாம் நினைப்பது போல அது நடக்கவேண்டும். நாம் சொல்லுவதை அது செய்யவேண்டும். நான் சொல்லுவதை அனைத்தையும் அது கேட்கும்படி செய்து வைக்கும்பொழுது மட்டுமே காரியம் வெற்றி பெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: